Tuesday, November 23, 2010

எழுத எழுத இன்பம் தருவது...

பிருஷ்டப் பிரிவு வரை
சரியாக ஓடி நிற்கும்
புரிநாகக் கூந்தல்
தொப்புள் வெடிப்புவரை
தொடர்ந்தலையும் பொன்சரம்
அதைக் கடித்துக் கடித்துச் 
சிவந்த
செம்பூச் சுளைகள்
பால்கிண்ணக் கன்னத்தில்
பொதிந்தசையும்
கருமபூக் கண் தும்பிகள்
மூக்கெழுந்த மாங்காய்கள் போல்
முகிழ்த்தெழுந்து
முண்டசைக்கும் 
முலைநாவல் பழங்கள்
இடுப்பிறங்கும் இடத்தில்
இணைந்து இறங்கும்
இனிப்புத் தசைச் சுருள்கள்
அடுக்குச் செம்பருத்திகள்
அடுக்கடுக்காய் புதைந்த பாகம்
கறுப்புச் சாக்லேட் குழி

அவள் அல்குலை
மையமாகக் கொண்டு
எழுந்த புயலில்
அழிந்த பலரில்
ஒருவன் எழுதிய கவிதை ...

4 comments:

  1. எல்லாம் சரி, கவிதைன்னு எதோ சொன்னிங்களே.. அது எங்க.

    நீங்க போட்ட படத்துக்கும் எழுதியிருக்குறதுக்கும் என்ன சம்பந்தம் ?

    ReplyDelete
  2. அருமையான எழுத்துக்கள்..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்குங்க இந்த கவிதை பெண்ணுடலை வர்ணிக்கிறது கொச்சையாகிடற அபாயங்கள் தாண்டிய கவிதை

    ReplyDelete
  4. வர்ணனை இருக்கு; கவிதையைக் காணோம். ஒருவேளை அதான் கவிதையோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails