Wednesday, April 17, 2013

சொல்வனத்தில் சிறுகதை

சொல்வனம் இணைய இதழில் நான் எழுதிய சிறுகதை ஒன்று  வந்துள்ளது
படித்துப் பீதியுறுக ....


ஆடியில் கரைந்த மனிதன்

Tuesday, April 2, 2013

கண்ணி 10

ஒரு நாடகம் .அதற்கு மூன்று அல்லது நான்கு முடிவுகளிருக்கக் கூடும்.ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்?நான் அப்படித்தான் உணர்ந்தேன் அன்று.அன்று திருநெல்வேலி டவுனில் ஒரு யாரோ உதறி உதறி நடந்தார் போல சாரல் பெய்த இரவில் மச்சு அறையில் நாங்கள் நிகழ்த்தியது திரும்ப நிகழ்ந்துகொண்டிருந்தது.


திடீரென்று ஆற்று மணல் வீச்சமும் குளிரும் மறைந்து டவுனின் மழைப் புழுக்கமும் குதிரை லாயத்திலிருந்து குதிரைகளின் தும்மலும் அவற்றின் சாண மணமும்   எழுந்து  ஒரு திரை போல விழுந்தது,இப்போது நடுங்கிய விரலுடன் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு வேஷ்டிக்கு கீழே துடிக்கும் விரிந்த குறியோடு நான் அறைக்கு வெளியே உட்கர்ந்துகொண்டிருந்தேன்.உள்ளே சண்முகம் அவளை நெருங்கி ஆடையை அவிழ்க்கச் சொல்லி அதட்டுவது கேட்டது.காலர்பக்கம் வேர்த்து வழிந்து கசகசவென்றிருந்தது.அரித்தது.உள்ளே அவள் தேம்பும்  ஓசை கேட்டது

கடவுளே இப்போது நான் என்ன செய்யவேண்டும்?நான் எனது ஆண்குறியை ஒரு அன்னியப் பொருள் போல உணர்ந்தேன் அது ஒரு வேட்டை நாயைப் போல முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தது.அதை நான் மிகப் பலவீனமான ஒரு மானசீகக் கயிறால்  பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன் .உடலே ஒரு பெரிய உறுத்தல் போல ஆகிவிட்டிருந்தது.உள்ளிருந்து முனகல்கள் கேட்ட வண்ணமிருந்தன.அந்த முனகல்கள் ஒரு பேறுகால மிருகத்தின் முனகல்கள் போல இருந்தன ஒரே நேரத்தில் கிளர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. நான் பெருங் காற்றில்  மாட்டிக் கொண்டவன் போல நடுங்கினேன் நான் ஏதாவது செய்ய வேண்டும்.


நான் சட்டென்று உள்ளே போனேன் .சண்முகம் அவளது வெற்று  உடம்பின் மீது ஒரு பல்லி போல அடர்ந்துகொண்டிருந்தான்.அவன் முதுகு முழுக்க சிறு தவளைக் குஞ்சுகள் போன்ற தேமல்களைப் பார்த்தேன்/அந்த நேரத்தில் அவை ஏனோ அருவெறுப்பாய்  இருந்தது,எழுந்து என்ன என்பது போல பார்த்தான்.'பிறகு இளித்து 'கொஞ்சம் இருலே அவசரக் குடுக்கை. .நான் முடிச்சுடறேன்'

நான் அவனைத் தள்ளி ''இல்லை.வேணாம் விட்டுடு''

''என்ன''

''விட்டுடுன்னு சொன்னேன்''
அவன் கண்கள் கோபத்தில் விரிந்தன.

''போலே .மயிராண்டி.உனக்கு பிடிக்கலைன்னா வெளியே போலே''


''அதெல்லாம் முடியாது .விட்டுடு .எந்திரி.இது பாவம் ''என்று அவனை அகற்றினேன்.''இந்தா எந்திரிச்சி ட்ரஸ்  போட்டுக்க''என்று அவள் உடையை எடுத்துக் கொடுத்த கணத்தில் சண்முகம் என்னைத் தாக்கினான் .என் காது ஊம்ம்ம் என்று ஒரு ஒலிச்  சுழலில் மாட்டிக் கொள்ளள நான் திரும்பி அவன் மீது பாய்ந்தேன்.அவன் ஆங்காரமாய் எழுந்து வந்து என்னைச் சுவற்றில் தள்ளி என் குரல்வளைக் குழியில் அவனது விரலால் அழுத்தினான் என் கண்கள் இருண்டன.சண்முகத்துக்கு கராத்தே தெரியும் என்று என்பது அந்த விரல் அழுத்தலில் தெரிந்தது.ஒரு கூரிய  திருகாணி போல அவன் விரல் எனது குரல்வளையில் இறங்கிக் கொண்டிருந்தது.என் கண்கள் இருண்டன.நான் இறந்து  கொண்டிருந்தேன்.ஆனால் ஓரக் கண்ணால் அந்தப் பெண் அவசரமாக உடுத்துக் கொண்டு அறையை விட்டு விலகுவதைப் பார்த்தேன்.கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.சண்முகம் என்னை சட்டென்று ஒரு சொம்பை எடுத்துத் தலையில் தாக்க ஒரு பெரிய கருப்பு அலை என் மீது  பாய்ந்தது


இருள் ஒரு பெரிய கரிய கம்பளித்  திரை போல என் மீது அசைந்துகொண்டிருக்க நான் அந்த இருளையே மந்திரவாதம் செய்யப் பட்ட கோழி போல வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த இருள் மிக சுகமாக இருந்தது.மெத்து மெத்தென்று அம்மாவின் மடி போல.அவள் மூடத் தரும் சேலைச் சுருணை போல.அவர் உதரம் போல. நான் இறந்துவிட்டேன்!ஆனால் நான் இறந்துவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டே நான் இருக்கிறேன்.சற்று நேரத்தில் யாரோ கை தட்டியதுபோல எனது இடது காதில் ஒரு ஒலித் துணுக்கு  வெடித்தது.நான்  திடுக்கிட்டு விழித்துப் பார்க்க நான் மீண்டும் அந்த அறையின் வெளியே மாறி  பெஞ்சில் காத்திருந்தேன்.உள்ளே அந்தப் பெண் முனகும் ஒலிகள் கேட்டன.சற்று நேரத்தில் சண்முகம் வேஷ்டியைச் சரி செய்தவண்ணம் வந்து ''போலே.சீக்கிரம் போ''என்றான்.அவன் உதடோரம் சிகப்பாய் அவள் குங்குமம் தீற்றி இருந்தது .அது ஒரு ஆபரணம் போல அவனுக்கு அழகாக இருந்தது. நான் செலுத்தப் பட்டவன் போல உள்ளே போய்க் கதவைச் சாத்தினேன்


ஆ எப்படி இருந்தாள்  அவள் !சதசதவேன்று சேறும்  தொழியும்   கிடக்கும்  வயல் போல..இறங்க இறங்க கால் அமிழும் விதை நிலம் போல...என்னால் அந்த சேற்றின் வாசனையைக் கூட உணர முடிந்ததுகூடவே அதிகாலையின் வாசனை.ஆற்றுப் படுகையின் வாசனை. நான் ஒரு கத்தியைப் போல என் உடலை உணர்ந்தேன் மிகக் கூர்மையாக மிக அண்மையாக  மிக வீரியமாக.ஒவ்வொரு அணுவிலும் உயிர் சொட்டி நிற்கும் பொருளாக.இதற்காகத்தானே இந்த உடல் ?என்பது போல..எனது உடலை இத்தனை அணுக்கமாய் நான் உணர்ந்ததே இல்லை. என் மனம் கூட அதன் சஞ்சலங்கள் அடங்கி அமைதியாகி விட்டிருந்ததைக் கவனித்தேன் .என் மூளையில்  எப்போதும் எனக்கு எதிராக பேசிக் கொண்டே இருக்கும் எனக்குள் சஞ்சலங்களை/பலவீனங்களை விதைத்துக் கொண்டே இருக்கும் மற்றொரு ஆள் சட்டென்று இறந்தது போல அமைதியாகி ஒரு பெரும் மௌனம் ஆங்கே நிலவியது.ஆ! எவ்வளவு பெரிய விடுதலை !என் மனம் கூர்ந்து என் குறியில் வந்து நின்றது.சிலீரென்று தணைக்கும்  ஐஸ்  கட்டி போல அவள் யோனி இருந்தது.அதே சமயம் ஒரு பெரிய நுரைக்கும் கடல் போலவும்  அது கொதித்துக் கொண்டிருந்தது.என் கால்கள் இடையே துடிக்கும் அவள் கால்கள் ஒரு வினோத வாகனத்தைப் போல தோற்றமளித்தது.அது உருண்டு உருண்டு எங்கோ போனது..வாகனத்தில் இருந்து பொங்கும் கிரீஸ் போல ரத்தம் கொட்டியது.எவ்வளவு ரத்தம் !எவ்வளவு உயிர்!நான் ஒரு வழுக்கு மரத்தைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறவன் போல உணர்ந்தேன் .ஆனால்  ஏற ஏற அந்த வழுக்கு மரமும் உயிர் பெற்று என்னை இறுகப் பிடித்துக் கொண்டது சட்டென்று அதன் முனை ஒரு பாம்பின் முகமாய் மாறி என் கண்களை உற்றுப் பார்த்தது. அதன் மூச்சுக் காற்றை என் முகத்தில் உணர்ந்தேன். மேட்டுத்தெருவில் உள்ள அத்தை  வீட்டில் பட்டாளையில்  ஒரு படம் உண்டு .கிருஷ்ணன் காளிங்க  நர்த்தனம் பண்ணும் படம். காளிங்கன்  ஒரு கறுப்புப் பாம்பு. விஷப் பாம்பு. அதைக் கிருஷ்ணன் அடக்கி அதன்மேல் ஏறி ஆடினான்குழல் வாசித்தான் எல்லா பெண்களும் காளிங்கப்  பாம்புகள் .அவர்கள் விஷத்தை அடக்கி ஆளவேண்டும் அவர்கள் விஷத்தை இரண்டு இடங்களில் வைத்திருக்கிறார்கள் .மேல் வாயில்.கீழ் வாயில்  .அந்த வாயில்கள் வழியே அவர்கள் விஷம் பொங்கிப் பொங்கி வருகிறது.அந்த விஷம் உங்களைத்தேடி வருகிறது. நீங்கள் சரியான ஆணாய்  இல்லாவிடில் அந்த விஷம் உங்களைக் கொன்றுவிடும் நீங்கள் அந்த விஷத்தைக் குடிக்கவேண்டும்.ஆனால்  அது உங்கள் வயிற்றுக்குள்  சென்று விடாமல் கண்டத்திலேயே நிறுத்தி வைக்கவேண்டும்  சிவனைப் போல,அந்தப் பாம்பின் மீது ஏறி அடக்கவேண்டும்.கிருஷ்ணனைப் போல..ஏனெனில் அந்தப் பாம்பு தன்னை அடக்கும் வீரர்களையே  விரும்புகிறது. மதிக்கிறது .தான் மதிக்காத அஞ்சாத யாரையும் அது விரும்பாது


நான் அவளுள் கிறுகிறுவென்று ஒரு பம்பரம் போல சுற்றி சுற்றி வேகம் வேகமாக இறங்கினேன் .ரயில் பிரயாணத்தில் மரங்களும் மனிதர்களும் பின்னோக்கி ஓடி மறைவது போல எல்லாம் ஓடி மறைந்ததன.அதுவரை நான் பார்த்த அத்தனைப் பெண்களும் அவ்வாறு ஓடி மறைந்தவர்களில்  இருந்தார்கள்.வாழ்நாளில் அவர்கள் ஒருபோதும் என்னை பொருட்படுத்தியவர்கள் அல்ல.இப்போது அவர்கள் கண்களில் தெரிகிற காதலையும் மதிப்பையும் கண்டு எனக்கே வியப்பாக/சிரிப்பாக  இருந்தது

எல்லோரும் ஓடி மறைந்தபிறகு அங்கு நான் மட்டுமே இருந்தேன். என் உடல் மட்டும்


அதை உணர்ந்த அந்த நொடியில் நான் ஆவென்று அலறியபடி  பீறிட்டு  ஒரு அருவி போல அவளுள் விழுந்தேன் .அப்போது ஒரு மங்கிய அகல் போல மினுங்கும் அவள் கண்களைப் பார்த்தேன் .பூ என்று ஒரு சிரிப்புடன் அந்த அகலை நான் ஊதி அணைத்தேன்

இருள்.

புதைகுழி போல அப்படியொரு இருள்


கண்ணி  முந்தைய பகுதி

http://ezhuththuppizhai.blogspot.in/2012_09_01_archive.html








LinkWithin

Related Posts with Thumbnails