Tuesday, October 19, 2010

பறவைக்கொரு சிறகு..

வர்ணங்களற்ற
ஒற்றைச் சொல்லுடன்தான்
நம் நட்பும் ஆரம்பித்தது
நெடுநாட்கள் நகராது
அச்சொல்லிலேயே நின்றிருந்தது
ஆனால்
எந்தத் தருணத்தில்
அச்சொல் விதையானது ..?
என்று
பழுப்பு இலைகள் தளிர்த்தன...
கருப்பு வெளுப்பு பார்வைகள்
வர்ணங்கள் பூசிக் கொண்டன...
நம் உரையாடல்களின் நடுவே
இடைவெளிகள் விழுந்தன?
அந்த இடைவெளிகளில்
நிறைய பெருமூச்சுகள் கலந்தன?

மெல்ல நமக்கிடையே
நம் உடல்கள் முளைத்து நின்றன..
சவரம் செய்யாத
என் முகத்தை
ஒருநாள்
நீ பார்க்க நேர்ந்ததற்காய்
நான் மிகுந்த பதற்றமடைந்தேன்
 மீண்டும்
கவிதை எழுதவும்
புகைக்கவும் ஆரம்பித்தேன்
உன் உடைகளின்
நிறச் சேர்க்கை பற்றி
நீ மிகுந்த கவனம்
கொள்ள ஆரம்பித்தாய்
தினமும் 
புதிது புதிதாய்
வேறு வேறு
வாசனைகள் தரும் பூ போல
தோன்றினாய்
அனிச்சையான தொடுகைகளுக்கு கூட
என் கவனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு
கன்னம் சிவந்து விரைந்து விலகினாய்


கொஞ்சம் கொஞ்சமாய்
நம்மிடையே
ஒரு பனித்   திரைபோல
மழைச் சுவர் போல
புகை மூட்டம்போல
காமம் வளர்வது
எனக்கே  ஆச்சர்யமாக  இருக்கிறது
இருத்தலின் சுழலில்
உதிர்ந்த சிறகை
மறுபடி ஒட்டிக் கொண்டு
பறக்க நினைக்கும்
பறவை போலதான்
இன்னும் இருக்கிறதா இந்த  மனது ..?

2 comments:

  1. //மெல்ல நமக்கிடையே
    நம் உடல்கள் முளைத்து நின்றன..
    சவரம் செய்யாத
    என் முகத்தை
    ஒருநாள்
    நீ பார்க்க நேர்ந்ததற்காய்
    நான் மிகுந்த பதற்றமடைந்தேன்
    மீண்டும்
    கவிதை எழுதவும்
    புகைக்கவும் ஆரம்பித்தேன்//

    super. nalla kavithai.vaalththukkal.

    ReplyDelete
  2. மனது மனதாகவே இருக்கட்டுமே !
    nice

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails