Friday, October 8, 2010

காமத்தின் வழி அது ...

தூக்கத்தின் நடுவில்
புகுந்தது ஒரு விரல்
பதறி எழுந்து பார்க்க
அவனேதான் 
'உன்
போர்வைக்குள்
எனக்கு ஒரு இடம் கொடு'
என்றான்
'அங்கே ரொம்ப குளிர்கிறது '
பிடிக்கவில்லை.வந்துவிட்டேன்
மேலும் அங்கு
நீ வேறு இல்லையே'என்றான்

'இன்னும் கொஞ்சம் சூடு ..
கொஞ்சம் உஷ்ணம்
இருந்தாலே போதும்
எல்லாம் சரி ஆகிவிடும் 
தருவாயா' என்றான் இறைஞ்சலாய்
கண் உருகி
கன்னத்தில் வழிய
'என் உயிரே
என் உதிரம் முழுதும் உனக்கே
உறிஞ்சிக் கொள்'
என்று இதழ் கொடுத்தாள்
கிண்ணத்தில் விழுந்த
முதல் துளி
பெருகிப் பெருகி
நுரைத்தது
அலை வீசிப் படர்ந்தது
ஆசை அமிலம் சுரந்து
ஆடைகளை எரித்தது 
கொடிமரமெங்கும்
அமுதம் ஏறி
கேணியில் பாய்ந்தது
தசைச் சுருள்கள் எல்லாம்
விடுபட்டு இளகியது
கதறலுடன் கண்விழிக்க
எல்லாம் மறைந்தது
ஈர உள்துணிகள் தவிர
எதுவும் மாறி இருக்கவில்லை
அவன் இன்னும்
இறந்தே இருந்தான்
அவள் தனியேதான் இருந்தாள் ....

4 comments:

  1. நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  3. //அவள் தனியேதான்
    இருந்தாள் .... //

    super punch!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails