கடைசிச் சில்லுவரை
என்னை உடைத்து
உன் கிண்ணத்தில்
ஊற்றிக் கொள் ...
கடைசிச் சொட்டுவரை
என் உயிரை
உனக்குள் நிரப்பிக் கொள் .
உன் செல்களின்
அத்தனை முடுக்குகளிலும்
என் நினைவுகளின்
போதை ஏற்றித் திரி ..
அமுதென்றும் விஷம் என்றும்
அனைவரிடமும் பிதற்று
தெளிந்ததும்
சொர்க்கத்தில்
நீ இருந்த நாட்கள் பற்றி
பின்வரும் நபர்களுக்காய்
ஒரு சிறிய குறிப்பேனும் எழுதி வை...
NICE
ReplyDeleteavlothaana?
ReplyDelete//உன் செல்களின்
ReplyDeleteஅத்தனை முடுக்குகளிலும்
என் நினைவுகளின்
போதை ஏற்றித் திரி ..//அப்பப்பா.. ரொம்ப போதையா இருக்கு போகன்.
அல்பமாய் ஒன்று சொல்லவா....மயங்கும் காலம் என்ற தலைப்பைப் பார்த்ததும் பழைய பி சுசீலா டி எம் எஸ் பாடல் ஒன்று 'மயங்கும் பொழுது' என்ற பாடல் நினைவுக்கு வந்து விட்டது. தேடிக் கேட்கணும்.
ReplyDelete