Monday, May 23, 2011

கண்ணி 7

எச்சரிக்கை-முதிர்வாசகருக்கு மட்டும்



பாம்புச் சாமி என்றழைக்கப் பட்ட அந்த மனிதரை அன்றுதான் அப்படிதான் என் வாழ்வில் முதன் முறையாகச் சந்தித்தேன்.நம் வாழ்வில் சில மனிதர்களின் வருகை ஒரு திறப்பாய் அமைகிறது.சிலர் பெருவெடிப்பு போல நிகழ்ந்து நம் வாழ்வை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார்கள்.சிலர் மென்விஷம் போல உதிரத்தில்கொஞ்சம் கொஞ்சமாக கலந்து நாம் அறியாமலே வாழ்வு பற்றிய பார்வையை மாற்றுகிறார்கள்.எல்லாருமே இப்படி ஒரு மனிதருக்காய் ஆழ்மனதில் காத்திருக்கிறோம்.நம் பாலியல் இணை எப்படி இருக்கவேண்டும் என்று நமக்குள் இருக்கும் ஒரு மனச் சித்திரம் போல இப்படியான ஒரு ஆசிரியருக்குமான ஒரு சித்திரம் நமக்குள் இருக்கிறது.அந்தச் சித்திரத்துக்கு சற்றே அருகில் வரக் கூடிய ஒருவரைக் கண்டால் கூட நம்மை செலுத்தக் கூடிய அத்தனை விசைகளும் பூதங்களும் விழித்துக் கொண்டு அவர் பின்னால் ஓடுகிறது.


பாம்புச் சாமியின் உண்மையான பெயர் எனக்கு கடைசிவரை தெரியாது.சில தடவை கேட்ட பொது ''செத்ததுக்கு எல்லாம் ஒரே பேர்தான் ..பொணம்.வேணும்னா என்னை பொனம்னு கூப்பிட்டுக்க''என்றார்.சுற்றி இருந்த மற்றவர்களைப் போல ஒரு பிச்சைக் காரர் மட்டுமே அல்ல அவர் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது எனக்கு.ஆனால் நான் அவ்விதம் தெரிந்து கொண்டதை அவர் வெறுத்தார்.சில முறைகள் என்னை கடுஞ்சொற்களால் தன்னைப் பார்க்க வரக் கூடாதென்று விரட்டி இருக்கிறார்.''இங்கே அவுத்துப் போட்டு ஆடுரான்னா வந்து  வந்து நிக்கே''என்று ஒருதடவை சொன்னார்.

நெல்லையப்பர் கோயில் வாசலில் இல்லாத தருணங்களில் எல்லாம் கருப்பன் துறையில்  சென்று உட்கார்ந்திருப்பார்.கருப்பந்துறை  அந்தப் பகுதியின் சுடுகாடு.அங்குள்ள வெட்டியானுக்கு பிணத்தை எரிக்க உதவி செய்வார்.அவன் கொஞ்சம் காசு கொடுப்பான்.அந்தக் காசுக்கு எல்லாம் அவல் பொரி வாங்கி படித்துறையில் எல்லா மீன்களுக்கும் போட்டு விடுவார்.ஒரு நாள் அந்தியில் மண்டப இருளில் ஆற்றிற்கு குளிக்க வந்த பெண்ணிடம் அவளது மாதவிலக்குத் துணி கிடைக்குமா என்று கேட்டு அந்தப் பெண் அலறி ஊரைக் கூட்டி கொஞ்சம் பிரச்சினையாகி விட்டது.


அதைப் போய் அந்தப் பெண்ணிடம் ஏன் கேட்டார் என்று கேட்டதற்கு பதில் சொல்லாது சிரித்தார்.பிறகொரு நாள் ''உனக்கு பெட்ரோல் வாசம் பிடிக்குமா''
என்றார்.நான் இல்லியே என்றேன்.''சிலருக்குப் பிடிக்கும் பெட்ரோல் வாசம் டீசல் வாசம் இதெல்லாம் துணில நனைச்சு வச்சுகிட்டு மோந்து மோந்து பார்பாங்க..அத மாதிரி எனக்கு ரத்த வாசனைபிடிக்கும் அப்படின்னு வச்சுக்கோயேன்.அதுவும் தீட்டு ரத்தம்னா ரொம்ப பிடிக்கும்''என்று விட்டு 

''சென்பவப் பூ வாசம்
பால் முலைப்   பசு வாசம்
சீவனை சிவத்தில்  ஏத்தும்
சின்னப் பொண்ணின் சினைப் பூ வாசம்''

என்று பாடினார்.பன்றி போல முகத்தை வைத்துக் கொண்டு காற்றை மோந்து மோந்து காண்பித்தார்.''வராக மூர்த்தி''என்றார்.சுற்றி உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.''இங்க பாரு இங்க உள்ளவங்கள எல்லாம் சாதாரணமா நெனச்சுக்காத இதோ இவளைப் பாரு''என்று பக்கத்தில் பரட்டைத் தலையும் சிரங்குமாய் இருந்த பெண்ணைப் பார்த்து ''இவ போன பிறவில சோழ தேசத்தில பெரிய தாசியாக்கும்.இவ சாமான ஒரு தடவைப் பார்த்தா போதும்னு ராஜாக்கள் எல்லாம் தவம் கிடந்தாங்க ''என அந்தப் பெண் வெட்கி ''போ சாமி அப்புறம் ''என்று சிரித்தாள்.
''ஆன்னா இப்பப் பாரு ..சாமான மோந்து பார்த்த நாயி செத்துப் போயிடும்''என அவள் கோபப் பட்டு எழுந்து போக அவளையே  பார்த்துக் கொண்டு ''அம்பாளோ அவிசாரியோ  பொம்பளைங்க எல்லாம் ஒரு வார்ப்புத்தான் ''என்றார்.''மகிசாசூரன் எப்படி செத்தாங்கே ?அம்பாளோட சாமானைப் பார்த்தே தீருவேன்னு ஒத்தக் கால்ல நின்னான்.செத்துப் போனான்.இததான் சண்டைல செத்தவனை விட புண்டைல செத்தவன் அதிகம்னு சொல்றது ''


அவ்வப்போது அவரை யாராவது பாம்பு பிடிக்க அழைத்துப் போவார்கள்.அவருக்கு பாம்புகள் மேல் அலாதியான பிரியம் இருந்தது.பிரியம் மட்டுமல்ல அவர் சொல்படி அவை கேட்டன.பூனைக் குட்டிகளோ நாய்க் குட்டிகளோ வளர்ப்பவர்கள் மேல் வாஞ்சையுடன் உரசுவது போல அவை அவரோடு இழைந்து கிடப்பதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன்.எண்பதுகளில் தாமிர பரணியில் அடிக்கடி வரும் வெள்ளம் பொதிகை  மலையில்  இருந்து விதம் விதமான பாம்புகளைத் தாழ்வான இடங்களுக்கு அடித்து வருவது வழக்கமாய் இருந்தது.அவ்வாறு வரும் பாம்புகள் திடீர் திடீரென்று கரையோர வீடுகளுக்கும் அரசாங்க அலுவலகங்களுக்குள்ளும் ஏறி தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.ஒரு தடவை கலக்டர் ஆபிசிலேயே ஒரு பாம்பு அவர் அறை  வரை மனு கொடுக்கப் போய்  விட சாமிக்கு அவசர அழைப்பு வந்து ஜீப்பில் அழைத்துப் போனார்கள்.அவர் அதைப் பிடித்து காட்டில் விட்டுவிட்டார்.வவுச்சரில் விஷப் பாம்பை பிடித்த வகைக்காக என கையெழுத்து வாங்கி ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள்.திரும்பி வரும்போது பஸ்ஸில் போய்க்கொள் என்பது போல சொல்லிவிட  அடுத்த தடவை பாம்பு வந்த போது  அவர் பிடிவாதமாக மறுத்தார்.கடைசியில் திரும்பவும் ஜீப்பில் கொண்டு விடுகிறேன் என்று  தாசில்தார் வந்து 'வவுச்சர்'' எழுதிக் கையெழுத்து போட்ட பிறகுதான் போனார்.

அவர் பாம்பு பிடிக்கும் விதம் வித்தியாசனமது.மகுடி எல்லாம் ஊதிப் பிடிப்பதில்லைஅவர்.அதெல்லாம் ஒரு ப்டம்டே என்று சொல்லிட்டார்.பெரும்பாலும் வாசனை மூலமாகத்தான் கண்டு பிடிப்பார்.''ஒவ்வொரு வகைப் பாம்புக்கும் ஒவ்வொரு வாசனை இருக்குடே.நல்ல பாம்பு அழுகின செம்பவப் பூ வசம் அடிக்கும்.சாரை உளுந்து அப்பளம் வாசம் அடிக்கும்.விரியனுக்கு காரக் குழம்பு வாசம்'' எனபார். அவர் கூடவே அலைந்தாலும் எனக்கு  எந்த வாசனையும் அடித்ததில்லை ''உனக்கு மூலம் நிறைய பாசி அடச்சுருக்கு,அப்பப்ப சாக்கடையக் குத்திவிட்டிருகனும் ''என்பார் எனக்குப் புரியாது.

நமக்கு ஒவ்வொரு ஊரிலும் சொந்த காரர்கள் இருப்பது போல அவருக்கு ஒவ்வோர் இடத்திலும் பாம்பு நண்பர்கள் இருந்தார்கள்.திடீரென்று நினைத்துக் கொண்டார் போல கால்நடையாக அவர்களைத் தேடிப் போய் விடுவார்.ஒவ்வொரு பாம்புக்கும் தனித் தனியாக பெயர் வேறு வைத்திருந்தார். பெரும்பாலும் பாழடைந்த கோயில்களில் கட்டிடங்களில் அவர்கள் குடி இருந்தார்கள்.அங்கெல்லாம் போய்  அவர்களைப் பெயர் சொல்லியே கூப்பிடுவார்.கூடவே வினோதமான தாளத்துடன் நடனமாடுவது போல கால்களால் தரையைத் தட்ட அதுவரை செடி கொடிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் சட்டென்று உயிர்பெற்று நெளிந்து அவரருகே வருவதைப் பார்த்து அரண்டு போ இருக்கிறேன்.மனிதர்கள் போலவே பாம்புகளும் வெவ்வேறு குணமுடையவர்கள் உண்டு.என்பார்.அம்பாசமுத்திரம் அருகே சாட்டப்  பத்து என்ற ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் ஒரு பாம்பு இவர் போனதுமே சீறி வந்தது.புஸ் புஸ் என்று படம் எடுத்துக் கொண்டு ஒரு ஆங்காரமான பெண் போல இவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.தன நாக்கை அவர் முகத்தின் மீது மோதி மோதி சத்தமிட்டது .அவர் சிரித்துக் கொண்டே அஞ்சி ஒடுங்கி அமைந்திருந்த என்னிடம் ''முத்துறா''என்றார்.''இவ இப்படித்தான் மலையாளப் பொண்ணு மாதிரி .அடக்கம் கிடையாது ''என்ற படியே அதனுடன் விளையாடினர்.அதன் தலையைத் தட்டத் தட்ட அது புஸ் புஸ் என்று சீறிக் கொண்டே இருந்தது..சுமார் ஒரு மணி நேரம்வரை ஒரு தேர்ந்த பாலே நடன இணை போல அவர்கள் இருவரும் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.

பாம்புகள் போலவே பெண்களுடனான அவரது உறவும் சற்று சிக்கலானதுதான்.எல்லா ஊரிலும்  அவரைத் தேடி வந்து பெண்கள் பார்த்தார்கள்.கல்லத்தி முடுக்கில் இருந்து நாற்பது வயது மதிக்கத் தக்க ஒரு செட்டியார்ப் பெண்மணி அவரை அடிக்கடி  வந்து பார்ப்பாள்.பெரும்பாலும் சந்தியில் கோயில் நடை அடைக்கும் சமயங்களில் வருவாள்.இவரைப் பார்த்து ''சாமி ஒரு நாள் வீட்டுக்கு வரணும்''என்று கும்பிடுவாள்.இவர் பெரும்பாலும் போ போ என்று விரட்டி விடுவார்.

ஒரு நாள் அவர் விரும்பிக் கேட்டாரென  ஜங்சன்  வரை போய் ஜன்னத் ஓட்டலில் பீப் வறுவல் வாங்கிக் கொடுத்தேன்.சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தவர் திடீரென்று எழுந்து ''வா போயி ஒரு உசிரக் காப்பத்துவோம்''என்று விருட்டென்று எழுந்தார்.விடுவிடுவென்று பார்வதி தியேட்டர் வழியாக கல்லத்தி  முடுக்கில்  நுழைந்தார்.ஒரு வளவு வீட்டுக்குள் வழியில் கிடந்த பாத்திரங்களை எல்லாம் வேகமாகக் கடந்து பேச்சியம்மன் துணை என்று போட்டிருந்த வீட்டின் முன்பு நின்று அழிக் கதவைப் பிடித்துக் கொண்டு தடதடவென்று உலுக்கினார்.உள்ளிருந்து பத்து வயது மதிக்கக் கூடிய ஒரு சிறுவன் ஓடி வந்தான்.அவனது ஒரு கால் சூம்பி இருந்தது.அவர் வேட்டியிலிருந்து பிரித்து ஐந்து ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து ''டே போய்  டைகர் பாம் ஒன்னு வாங்கி வாடே''என்றார்.அவன் போன பிறகு சடசடவென்று கூடத்துக்குள் போனார்.கூடத்தில் அந்த அம்மாள் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.அவள் முகம் சிவந்திருந்தது.அழுதிருக்க வேண்டும் போலத் தெரிந்தது.உள்ளே அறையில் இருந்து யாரோ இருமல் கேட்டது சாமி சட்டென்று அவள் காலடியில் அமர்ந்து அவள் புடவையைத் தூக்கினார்.வெளேரென்ற அவளது  தொடைகளைப் பார்த்து நான் மூச்சடைத்தேன்.அவள் என்னைத் தயக்கமாய்ப் பார்க்க ''அங்க பார்க்காத ..நம்ம ஆள்தான்.சொல்றதக் கேளு மூச்சை நல்லா உள்ளே இழு;;என்று உத்தரவிட்டார்.அவளது ஆடுகால் சதையில் ஒரு இடத்தைத் தேடி தனது விரல்களால் அழுத்தினார்.சட்டென்று அந்த அம்மாள் தளர்ந்தாள்.அப்படியே ஊஞ்சலில் சாய வெள்ளை ஜம்பரூடே அவள் முலைகள் விரைப்பதைப்  பார்த்தேன்.அவள் முகம் சிவக்க கண்களை அரைவாசி மூடிக் கொண்டு அர்த்தமற்று முனக தொடங்கினாள்..அவர் அழுத்த அழுத்த அவள் இன்னும் வேகமாக முனக ஆரம்பித்தாள் ஒரு கட்டத்தில் அவள் ஐயோ என்று கத்தி வில் போல வளைந்து தளர்ந்தாள்.அவளது கால்கள்   வழியே மதனம் பெருகி சேலை விளிம்புகளை நனைத்திருந்தது.சாமி எழுந்து கொண்டு ''நீ சாகும்வரை இனி உனக்கு இது வேணும்னு தோணாது''என்றுவிட்டு வெளியே வந்தார்.எதிரே பையன் டைகர் பாமோடு விந்தி விந்தி வர ''போடே அம்மைக்கு கொண்டு போய்க் கொடு .வலி தீரட்டு..''என்றார்.







5 comments:

  1. போகன்,
    உங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்த்தது இந்தத் தொடர் தான்.
    ஒரு அடர் கானகத்தின் (Pristine forest) நடுவே அலைவது போல் உணர்வு.
    பெணமை உள்ளுறையும் பெண்ணை ஆள முனையும் இடையறாத ஆவல் தான் ஆணை இயக்குகிறது. கலவியில், 'நான்' என்பது கரைவதும், திரள்வதும் ஒரே வேளையில் நிகழ்கிறது. அதனால் தான் 'அதில்' வீழ்பவர்களின் வரிசை இன்று வரை தொடர்கிறது.

    நன்றி

    ReplyDelete
  2. நன்றி யோகி காமம் எல்லோருக்கும் மலர் அம்பாய் அமைந்துவிடுவதில்லை பலருக்கு அது கனத்த சிலுவையாய் சுமையாய் மீள முடியாத வதை வட்டமாய் இருக்கிறது அப்படி ஒரு மனிதனின் கதைதான் இது

    ReplyDelete
  3. முதல் பத்து வரிகள் அபாரம் bogan.
    உங்கள் எழுத்தா அணுகுமுறையா இழையூடிவரும் இறுக்கமா என்னவென்று தெரியவில்லை, இந்தக் கதை என்னை மிகவும் பாதிக்கிறது. (ஆடுசதைக்கு அர்த்தம் பார்க்க வேண்டும்).

    தொடருங்கள்.

    ReplyDelete
  4. பெண்மையின் பல முகங்களை அறிந்த ஓர் ஆணின் மிக அந்தரங்கமான உணர்வுகளோடு நெருக்கமாய் பயணிக்கும் உணர்வு. கூட அழைத்துச் செல்லும் கருணைக்கு நன்றி.

    --

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails