Monday, March 21, 2011

வாழ்வின் கடைசி நாள்

நம்பமுடியாத ஒரு அதிசயமாய்
இன்று
கரிச்சான்கள் கூவும் காலையிலேயே
விழித்துவிட்டேன்
குடிப்பதற்கும் படிப்பதற்கும்
முன்னிரவில் எதுவும் இல்லை
என்பது காரணமாகஇருக்கலாம்
இணையத்தில் வழிந்த
எல்லா நீலப படங்களிலும்
கொட்டிய உடல்கள் எல்லாம்
பார்த்தவையே என்பதால் இருக்கலாம்
கை போட்டுத் தூங்க மனைவியோ
கால் போட்டு உறங்க
மகளோ இல்லாததால் இருக்கலாம்
கள்ளத்தில் புணர்பவள்
திடீரென்று திருந்தி
கண்ணகியாய்
மாறி விட்டதால் இருக்கலாம்
இருந்த ஒரே வேலையைக் கூட
இழந்து விட்டதால் இருக்கலாம்
கல்லும் கடவுளும் கருத்தில்
எப்போதோ
ஒன்றாய்க் கலந்துவிட்டதால் இருக்கலாம்
இரவில் எதுவும்
சாப்பிடாததால்
இரையும் வயிறாய்க் கூட இருக்கலாம்
அல்லது
இன்று நான் தற்கொலை
செய்வதாய் இருப்பது கூட
காரணமாக இருக்கலாம்

5 comments:

  1. காலையில் எழுந்து சுறுசுறுப்பாய் தற்கொலை - புதிய பார்வை? மிச்ச காரணங்கள் புரிகிறது, கல்லும் கடவுளும்?

    ReplyDelete
  2. தற்கொலை செய்துகொள்ள
    திட்டமிட்டிரூப்பவருக்கு
    தூக்கம் வரும?
    தூக்கம் வந்தால் தானே விழிப்பு ?

    ReplyDelete
  3. வாழறதுக்குதான் காரணம் தேவை. சாகறதுக்கு மனசிருந்தா போதுமே.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails