Friday, March 4, 2011

கண்ணி 4


கண்ணி 3 இங்கே 

எச்சரிக்கை -முதிர் வாசகருக்கானது 


மார்கட் ஸ்டேசனுக்கு கையை ஒரு குற்றாலத் துண்டால் முறுக்கி என்னை அழைத்துப் போனார்கள்.அது கூடத் தேவை  இல்லை.நீ போய் ஸ்டேசன்ல உட்கார்ந்திரு நாங்க வரோம்னு சொல்லி இருந்தால் நானே போய்க் காத்துக் கொண்டிருந்திருப்பேன்.இரவாய் விட்டதால் அதிகம் பேர் கவனிக்க வில்லை.அந்தப் பெண்ணை யாரோ மனகாவலம் பிள்ளை ஆச்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.கணேஷ் பவனுக்குள் அப்பா இது எதுவும் அறியாது சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு அடுத்த பலகாரத்திற்காய் எச்சில் கையைத் தொங்கவிட்டுக் கொண்டு காத்திருப்பதைப் பார்த்தேன்.கூப்பிடத் தோன்றவில்லை.வேறொரு உலகத்தில் நடந்தது போல போனேன்.அந்தப் பெண் பிழைத்துக் கொள்வாளா என்று யோசித்தேன்.எல்லாமே நீருக்குள் நடப்பது போல அல்லது போதையில் இருப்பது போல மிக மெதுவாக நடப்பது போல இருந்தது.சண்முகம் மீனாக்ஷி ஜ்வேல்லரியில் தன புது மனைவியுடன் பாயில் காலை மடித்து அமர்ந்து வளையல் பார்த்துக் கொண்டிருந்தான்.புஸ்சென்று சீறிய பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தில் பருத்திப் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்த கும்பலில் இருந்து ஒருவன் தெரிந்தவன் போல கையசைத்தான்.சட்டென்று அடையாளம் தெரியவில்லை.யாரோ ஒருத்தர் 'இது ஆறுமுகம் பிள்ளை மவனுலா' என்று சொன்னது கேட்டுத் திரும்பி 'அவர் கணேஷ் ஹோட்டல்ல போண்டா சாப்பிடுறாரு என்றேன் சம்பந்தமில்லாமல்.

சரேலென்று சூடாய் அருவி போல சிறுநீர் பெய்து கொண்டிருந்த வண்டி மாடுகளைத் தாண்டி சரித்து வைத்திருந்த கூண்டு வண்டிகளை கத்தி கரண்டி எல்லாம் பரப்பியிருந்த  கடைகளைத் தாண்டி சிகப்பு வெள்ளை பெய்ன்ட் அடித்த ஸ்டேசனுக்குள்  போனபோது மின்சாரம் இல்லை.ரைட்டர் மட்டும் சட்டையில்லாமல் முழுக் கை பனியனோடு சிம்னி விளக்கில் காலாட்டிக் கொண்டு பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எங்களைப் பார்த்து விசிறலை நிறுத்தாமலே  ''ஏலே என்னா''
கூட வந்தவர்கள் மூச்சிரைக்க ''ஒரு சின்னப் பெண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டாரு''என்றார்கள்.

''அப்படியா பொண்ணு என்னாச்சு சம்பவம் எங்கே''

''மாதா கோயில் தெரு''
அவர் யோசித்து ''அது நம்ம எல்லைக்குள்ள வருமா தெரிலையே''என்றார்.''இருங்க எஸ் ஐ மினிஸ்டர் காவலுக்குப் போயிருக்கார்.ஏட்டு வந்துடுவாரு விஞ்சை விலாஸ்ல நன்னாரி பால் சாப்பிடப் போயிருக்காரு.எழவு கரண்டு வேற இல்லை இருங்க ''


நான் அங்கிருந்த பெஞ்சில் அமர முயல ''ம்ம்ம் ''என்று கண்களை உருட்டி உறுமினார்.''கீழே இருலே அக்ய்யூச்டு நீதானே '

கூட வந்தவர்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.கொஞ்ச நேரத்தில் ஏட்டு வந்தார்.கையில் கூஜாவுடன் ''எளவு கடைக்குள்ளேயே போக முடில பார்வதி ல படம் முடிஞ்சவநேல்லாம் எறிக் கிடக்கான் உள்ளே.''என்றவர் என்னைப் பார்த்தார்.''ஏலே என்னா''
அவர் அப்பாவின் நண்பர்.''மாமா வணக்கம்''
''வணக்கமிருக்கட்டும்..நீ என்னாலே இங்கே குத்த வைச்சிருக்கே''
கூட வந்தவர்கள் உற்சாகம் பெற்று நான் ஒரு அப்பாவி சின்னப் பெண்ணைக் கெடுக்க முயற்சித்த கதையை மீண்டும் சொன்னார்கள்.அவர் முகம் கருத்தது.அருகில் வந்து சட்டென்று என் முகத்தில் அடித்தார்.''சவத்து மூதி அப்பன் பேரைக் கெடுத்திட்டியே''
நன் முகத்தை மூடி குனிந்து உட்கார்ந்திருந்தேன்.ஏனோ சிரிப்பாய் வந்தது.கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டேன்.அவர் அதைப் பார்த்து ''ஏலே தண்ணி கிண்ணி போட்டிருக்கியா''

ஏட்டுரைட்டரிடம் பொய் ''நம்ம கூட்டாளி மொவன்''
அவர் ''அதுக்கு?''என்றார் 
''கேஸ் எதுவும் எழுதவேண்டாம்.நான் எஸ் ஐ கிட்டே பேசறேன்''
அவர் சற்று நேரம் மௌனமாக இருந்தார் 
''என்னமும் பண்ணித் தொலையும்''என்றார் பிறகு. 
ஏட்டு வெளியே வந்து கும்பலிடம் ''யார் பொண்ணுடே ''என்று விசாரிக்க ஆரம்பித்தார்.பிறகு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.கொஞ்ச நேரத்தில் பருத்திப் பால் கடையில் பார்த்த ஆள் அப்பாவுடன் வந்தான்.அப்போதுதான் அவன் எனது சித்தப்பா மகன் என்று நினைவு வந்தது.ரொம்ப நெருங்கிய உறவுதான்.ஆனால் ஏன் நினைவு வரவில்லை  என்று ஆச்சர்யமாக இருந்தது.அப்பாவின் கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன.''ஏலே ஏலே ''என்று என்னைப் பார்த்து பிதற்றிக் கொண்டே இருந்தார்.ரைட்டரிடம் நெருங்கி கைகூப்பி கரைந்தார்..

ரைட்டர் ''என்கிட்டே பேசிப் ப்ரசொனம் இல்லே எஸ் ஐட்ட பேசணும்''என்றார்.பிறகு ''வல்லனாட்டுக் காரன்.ஏறுக்கு மாறா பேசுவான் பார்த்துப் பேசணும் இல்லைன்னா கோமனத்த உருவிடுவான்''

அப்பா ''இங்க உள்ள ஏட்டு என் சேக்காளி''
''சொன்னான் உம்ம விஷயத்துக்காகத்தான் ஆஸ்பத்திரிக்குப் போய்இருக்கான் எல்லாம் அந்தப் பொண்ணு பொசிசனைப் பொறுத்து இருக்கு உயிருக்கு ஒன்னும் சேதம் இல்லையே''
அப்பாவுக்குத் தெரியவில்லை ''தெரியலியே தெரியலியே ''என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் எஸ் ஐ ஜீப்பில் வந்திறங்கினார்.அவர் உடுப்பெல்லாம் ஈரமாய் இருக்க முரட்டு மீசையுடன் கருப்பாய் இருந்தார்.ஒற்றைக் கண் மட்டும் யாரோ அடித்தது போல மிகச் சிகப்பாய் இருக்க.கூட்டத்தைப் பார்த்து கடுப்பாகி ''ஏலே கரண்டு என்னாச்சு ''என்று கத்தினார்.

ரைட்டர் ''போஸ்ட்ல எதோ பிரச்சினை லைன் மேன்வந்திட்டுருக்கான்''என்றார் 
''இவனுங்க எல்லாம் யாரு''
ரைட்டர் அவர் காதோரம் எழுந்து நின்று பேசினார்.எஸ் ஐ கேட்டுவிட்டு என்னருகே சட்டைக் கழற்றிக் கொண்டே வந்தார்.அவரது மேல் நெஞ்சின்  குறுக்கே பளீரென்று யாரோ வெட்டினார் போல ஒரு நீண்ட தழும்பைப் பார்த்தேன்.குனிந்து என் கண்களை உற்றுப் பார்த்தார்.அப்பா மூச்சடங்கி நிற்பதைப் பார்த்தேன்.ஏனோ சுசீந்திரத்தில் நிற்கும் ஆஞ்சநேயேர் நினைவு வந்தது.
அவர் வாயில் சிகரட் நாற்றம் அடித்தது ''சுன்னியை வைச்சுட்டு சும்மா இருக்க முடியலே இல்லையா மயிரே''என்றார் 
'வா இன்னைக்கு உனக்கு ஆபரேசன் பண்ணி விடறேன்.பிறகு வாழ்க்கை முழுக்க அது பத்தி கவலயே வேண்டாம்.சரியா என்று என் தலை முடியை இறுகப் பிடித்து மேல்நோக்கி இழுத்தார்.நான் ஆவென்று அலறினேன்.
அப்பா நெருங்கி எதோ சொல்ல வர ''நீ தள்ளிப் போ மயிரே..பிள்ளையா வளத்திருக்கேறு ஒம்ம மவனுக்கு ரொம்ப அரிச்சுதுன்னா ஒம்ம மவ மேல ஏறிக் கிடக்கச் சொல்லுவே . ஊர் மேல விழுந்து எங்க உயிரை ஏம்லே வாங்கறீங்க''

அதற்குள் ஏட்டு மாமா வந்துவிட்டார்.எஸ் ஐ அவரைப் பார்த்து ''என்னவே உங்க ஆளுங்க அழிச்சாட்டியம் தாங்கலியே..உங்க வெள்ளாளக் குசும்பைக் காட்டுதியளோ என்ன... தொலைச்சுப் பிடுவேன்.''
ஏட்டு நெருங்கிப் போய் அவரிடம் எதோ கூற சற்று தணிந்து என் முடியைவிட்டு விட்டு  அப்பாவைப் பார்த்து ''அந்தப் பொண்ணு யாரு''
''எதோ வீட்டு வேலை செய்யற பொண்ணு ''
''எங்கே உள்ளது''
''எங்கயோ நான்குநேரி பக்கம்'னு சொன்னாங்க''
''என்ன ஆளுவே அதைச் சொல்லு''
அப்பாவுக்குத் தெரியவில்லை 
ஏட்டு மறுபடியும் ஏதோ நெருங்கிச் சொல்ல ''தப்பிச்சீறு ''என்றார்.பிறகு யோசித்து ''கொஞ்சம் வழிபாடு செய்யணும் .இல்லைன்னா ரொம்ப சங்கடம் ''என்றார்,''''புரியுதா அதுக்கான ஐவேசு உண்டுமா'''
அப்பா புரியாமல் ஏட்டைப் பார்த்தார்.ஏட்டு அவரிடம் நெருங்கி கிசுகிசுத்தார் அப்பாவின் கண்கள் அகல விரிந்தன 
''அத்தனை முடியாதுவே;
''இல்லைன்னா குறைஞ்சது ஏழு வருஷம் உள்ள உம்ம புள்ள... மனசில வாங்கிக்கிரும்.ரேப் கூட இல்லை கொலை முயற்சி ஒம்ம மவன் கழுத்தைப் பிடிச்சு நெரிச்சிருக்கான் .உசிருக்கு ஆபத்தில்லை ஆனா பொண்ணு பேச முடியுமான்னு தெரிலன்னு டாக்டர் சொல்றார் ''

அப்பா பிரமை பிடித்தது போல அங்கேயே நின்றிருக்க எஸ் ஐ கண்களாலேயே ஏட்டுவிடம் என்ன என்றார்.அப்பா துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு ''கொஞ்சம் பொரட்டனும் இரண்டு நாளாவும் ''
எஸ் ஐ ''அது வரை அவன் இங்கே இருப்பான்''என்றார் ''சீக்கிரம் வந்திடும் ரொம்ப நாள் எழுதாம வைச்சுக்க முடியாது .எஸ் பி யாராவது வந்தாம்னா என் தொப்பியைக் கழட்டிடுவான்'

அப்பா தளர்வாய் நடந்து வெளியே போவதைப் பார்த்தேன்.சைக்கிளை சித்தப்பா மகன் ஓட்ட பின்னால் ஏறிப் போகும் போது என்னைப் பார்க்கவே இல்லை 
எஸ் ஐ ''யோவ் டாக்டர்கிட்டே சொல்லிட்டீரா அவன் ஏதும் எழுதிரப் போராம்''


தரையில் உட்கார்ந்திருப்பது எனக்கு சிரமமாக இருக்க அது பற்றி சொல்ல எழுந்த பொது இன்னுமொரு ஆளைக் கொண்டு வந்தார்கள்.கருப்பு வேட்டியும் அழுக்கு வெள்ளைச் சட்டையுமாய் மேல் பாக்கட்டில் பல்வேறு நிறங்களில் துண்டுத் துணிக்களுமாய் இருந்தான்.அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசை எங்கும் சளியும் எச்சிலும் ஒழுகி காய்ந்திருந்தது ''ஏலே இவன் மெண்டல் மாதிரிலா இருக்கான் ''என்றார் ரைட்டர் 
'நெல்லையப்பர் கோயில் வாசலில் பிச்சை போடக் குனிந்த சேட்டுப்பெண்ணின் முலையைப் பிடித்துவிட்டான் என்று சொன்னார்கள் 
''ஒக்காளி இன்னைக்கு முழுசா இதுதான் கேசு போல''என்று எஸ் ஐ உரத்துச் 
 சிரித்தார் .
''எந்தூருக்காரன் எலேய் உம்பேரு என்னா''என்றதற்கு 
அவன் ''man is my name.my name is man''
எஸ் ஐ 'அட இங்கிலீசு ''என்றார் ''படிச்ச பய.அது சரி சேட்டச்சி முலைய ஏன் பிடிச்சே''
அவன் மேலே பார்த்துக் கொண்டு ''களபக் கவி முலை ''என்றான்.பிறகு என்னைப் பார்த்துச் சிரித்து ''எத்தனை பேர் தொட்ட முலை!''
எஸ் ஐ அசந்துவிட்டார் என்று தெரிந்தது ''ஏலே என்ன சொல்றான்''
ஏட்டு மாமா சற்று தீவிரமான குரலில் ''சித்தர் பாடல் சார்.ஒருவேளை எதுவும் சித்தரா இருக்கப் போகுது''
எஸ் ஐ அவனை மேலும் கீழுமாய் பார்த்தார் பிறகு சற்று இகழ்ச்சியான குரலில் ''இந்த சாமியார்ப் பையனுங்கதான் இப்ப இந்த வேலையெல்லாம் செய்யறாங்க.கேட்டா தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசறாங்க இரண்டு பேரையும் உள்ளே அடைச்சி வை நாளைக்கு வந்து பார்க்கறேன்.ரொம்ப டயர்டா இருக்கு உன் ஆளு நாளைக்கு சாமானோட வருவானா''
''வருவாரு சார் குறிச்சி பக்கம் கொஞ்சம் நிலம் இருக்கு அவனுக்கு ''
''.அப்பன் ரத்தத்தை பையன்மாருஎப்படி எல்லாம் செலவழிக்கான் பார்த்தீரா'''என்றவரே வெளியிலிருந்த புல்லட்டில் கிளம்பிப் போனார். 

நானும் அந்த ஆளும் உள்ளிருந்த செல்லில் அடைக்கப் பட்டோம் உள்ளே வேறு ஆள் இல்லை.இருட்டாகவும் தூசியாகவும் இருந்தது இருட்டில் என மீது ஏதோ கிறீச்சிட்டு ஏறி ஓடியது ஏட்டு மாமா சாப்பிட இட்லி வாங்கி வந்தார் என்னால் சாப்பிட முடியவில்லை பக்கத்தில் இருந்தவனிடம் கொடுத்துவிட்டேன்..அவன் இரண்டு கைகளாலும் அள்ளிச் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சாப்பிட்டுவிட்டு அவன் பீடி இருக்கா என்றான்.நான் இல்லை என்ற பிறகு தளர்ந்து அமர்ந்தான்.என்னை உற்றுப் பார்த்து சிரித்தான்''ரொம்ப நாளா கண் முன்னால ஆட்டிட்டே இருந்தா இன்னைக்குத் தாங்கலே பிடிச்சுட்டேன்''என்றான் ''நல்ல விளைஞ்ச  பேரிக்காய் மாதிரி பெருசு''

நான் பேசவில்லை அலுப்பாக இருந்தது .அப்படியே சரிந்து படுத்துவிட்டேன்.விழித்தபோது மின்சாரம் வந்திருந்தது மேலே நேர் எதிரே ஒளிர்ந்த மஞ்சள் பல்பின் மீது விழித்து கண் கூசி எழுந்து உட்கார்ந்தேன்.கூட இருந்தவனைக் காணவில்லை.அவன் கம்பிகள் அருகே போய் உலுக்கிக் கொண்டிருந்தான்.ரைட்டர் மட்டுமே ஸ்டேசன் உள்ளே இருந்தார் .சத்தம் கேட்டு எழுந்து வந்தார் ''எலேய் என்னா ''அவன் ''ஒண்ணுக்குப் போனும் ஒன்னுக்கு போனும் ''என்றான் 
உள்ளே கழிப்பறை எதுவும் இல்லை அவர் சற்று நேரம் யோசித்து போய் வெளியே நின்றிருந்த காவலாளியுடன் வந்தார்.அவன் கதவு திறந்து ''வா ''என நான் விழித்திருப்பது கண்டு ''இரு ''என்று கையமர்த்தினார்.கதவு திறந்து கொண்டு என் அருகில் வந்து குனிந்து பார்த்தார் ''அய்யா சவுகர்யமா இருக்கீங்களா.தூக்கம் வரலியா '''

''கொசு கிசு கடிச்சா சொல்லுங்க சரியா ''என்றார் 
நான் சரி என்றேன் 
''அய்யா சரியா சாப்பிடவே இல்லை போலயே.. உடம்பு முக்கியமில்லையா.பிறகு எப்படி நாளைக்கு இன்னொரு பொட்டச்சி மேல ஏற முடியும்?''
அவர் கண்கள் மினுமினுத்தன.மூச்சு சிதறுவதை கேட்டேன்.அவர் பனியனில் இருந்து வந்த வேர்வை வீச்சத்தை நன்கு உணர முடிந்தது.பிறகு பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம் இல்லைடே?''என்றார்.
நான் பேசாமல் இருந்தேன் .என் கைகள் நடுங்குவதைப் பார்த்தேன்.இதற்கிடையில் சித்தன் எங்கள் அருகில் வந்து ''அய்யா ஒன்னுக்கு''என்றதைப் புறக்கணித்து 
''உனக்கொரு அடையாளம் வைக்கணுமே இல்லைன்னா ஊர் முழுக்க ஏறுவே நீ ''
''அய்யா ஒன்னுக்கு''
'ஏறிட்டு பின்னாலேயே சரி பண்றதுக்கு உங்கப்பன் காசோட வருவான்.இல்லே?.இங்கே உள்ள கூதியுள்ளவைகளும் அதை வாங்கிட்டு போ இன்னும் பாவப் பட்டப் பொண்ணுங்க பூனாவைக் கிழிச்சுக்கோன்னு விட்டுடுவாய்ங்க இல்லே ?''

நான் சுவரோட சாய்ந்து நெருங்கி ஒடுங்கி உட்கார்ந்தேன் அவர் கண்களைத்  தவிர்த்தேன்.அவரது உடல் உஷ்ணத்தைக் கூட இப்போது உணர முடிந்தது  

அதற்குள் சித்தன் இன்னும் நெருங்கி ''அய்யா ஒன்னுக்கு ''
அவர் என்னை நெருங்கி லத்தியால் கழுத்தில் அழுத்தி  ''வாயத் திறடா '' என்றார்.
''அய்யா ஒன்னுக்கு ரொம்ப வருது''
நான் திறக்க மறுக்க ''சட்டென்று என் கொட்டையில் மிதித்தார் ''திறலே''
நான் வலியில் ஆ என்று கத்தினேன் 
'அய்யா ஒன்னுக்கு''
அவர் வேகமாகப் பின்னால் திரும்பி ஒன்னுக்குதானே போடா இதுலே.இந்த நாய் வாயிலேயே போடா தாயோளி ''

அவன் ஒரு கணம் திகைத்துப் பின்னர் இளித்தான்.அவனது கருப்பு வேட்டியைத் தூக்கியபோதுதான் கவனித்தேன்.அவனுக்கு விரைவீக்கம் வந்து ஒரு பொதி போல தொங்கிக் கொண்டிருந்தது தீயால் சுட்டது போல கருத்து தோலெல்லாம் ரணமாகி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க அவன் என்னை நெருங்கி இளித்துக் கொண்டே அவனது சீழ்ப் பிடித்த குறியைத் தூக்கி என் மீது மூத்திரம் பெய்ய ஆரம்பித்தான் 

3 comments:

  1. தொடருங்கள்.
    அருமையான நடை. கண் முன்னே கொண்டு வருகிறது வக்கிரத்தை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails