எரிவெயில் தகிக்க
ஒதுங்கிய
நகரவாசியின் வீட்டிலிருந்து
வேகமாய் ஒருவன் வெளிவந்து
என்ன வேண்டும் உனக்கு
ஏனிங்கு நிற்கிறாய் என்றான்
எரிச்சலுடன்
கொஞ்சம் குளிர் வேண்டும்
என்றேன் அவனிடம்
பிறகு கொஞ்சம் நிழல்
குளிர் தடவிய காற்று
கொஞ்சமே கொஞ்சம் மழை
இந்த இடத்தில்
இன்று நிற்கும்
உன் வீட்டிற்காய்
நேற்று நீ வெட்டியெறிந்த
மரம் தந்தவற்றில்
கொஞ்சமே கொஞ்சம் என்றேன்
ஒதுங்கிய
நகரவாசியின் வீட்டிலிருந்து
வேகமாய் ஒருவன் வெளிவந்து
என்ன வேண்டும் உனக்கு
ஏனிங்கு நிற்கிறாய் என்றான்
எரிச்சலுடன்
கொஞ்சம் குளிர் வேண்டும்
என்றேன் அவனிடம்
பிறகு கொஞ்சம் நிழல்
குளிர் தடவிய காற்று
கொஞ்சமே கொஞ்சம் மழை
இந்த இடத்தில்
இன்று நிற்கும்
உன் வீட்டிற்காய்
நேற்று நீ வெட்டியெறிந்த
மரம் தந்தவற்றில்
கொஞ்சமே கொஞ்சம் என்றேன்
ரொம்ப இயல்பா இருக்குங்க .. :-)
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு !
superb
ReplyDeleteகவிதை மனசை அறுக்கிறது .......மரத்தை அறுப்பது போலவே .
ReplyDeleteஇன்னும் ஒரு வரி உண்டோ?
ReplyDeleteதொலைத்த நிழல் யாரிடம் கிடைக்கும்?
ReplyDeleteதேடித் திரிவோம் நகரவாசிகளின் தெருக்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளின் மத்தியிலும்.
நாளைக்கான நேற்றையக் கவிதை போகன்.