யாரும் பார்க்காத நட்சத்திரம்
பழைய நூலகத்தில்
பல்லிகள் மட்டுமே உலவும்
பாழிருள் மூலையில்
கவனத்திலிருந்து
முற்றிலும் கைவிடப்பட்ட
அரியதோர் புத்தகம் போல
கேட்பாரற்றுக்
கிடந்தாள் அவள்
தற்செயலாய்
அவளைக் கண்டுபிடித்தவனும்
வேறாரும் அவளை
வாசித்துவிடக் கூடாதென
யாரும் அறியாத
இன்னுமொரு
இருட்டு முடுக்கில்
எடுத்துச் சென்று
ஒளித்துவைத்தான்
மிக மிக சரியே . கவிதைகளின் அறையும் உண்மைகளே ...இந்த வசீகரத்திற்கு காரணமோ?
ReplyDeleteஒருவனேனும் படிக்கிறானே, அது போதுமே :)
ReplyDeleteகவிதைகள், பதில்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. :)))
ReplyDeletearumai...vaalththukkal
ReplyDeleteஅருமை போகன்..
ReplyDeleteபெண்ணும் புத்தகமும் ஒன்றா?!
ReplyDelete“Full many a gem of purest ray serene
ReplyDeleteThe dark unfathomed caves of ocean bear:
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.
மீனாக்ஷி தாமஸ் கிரேயின்கவிதை மேலே...இதைப் படித்ததும் தோன்றிய கவிதை இது
நானும் என் கடவுளும் உங்களை எப்படி விளிக்கவேண்டும்?
ReplyDeleteIt is a surprise, to see answers for my questions. :). Thank you.
ReplyDelete"முதிர்ந்த...." என்றும் அழைக்கலாம் அல்லது "சாந்தினி" என்றும் அழைக்கலாம்.
beautiful! (வேறே subtle படம் போட்டிருக்கலாமோ?)
ReplyDelete