Saturday, October 9, 2010

கேப்சூல் கவிதைகள் 4

1.ஆற்றைவிட்டு
அகன்றறியா
மீன் சொன்னது
'ஆறு ஒரே நாற்றம்!'

2.வீடு கட்ட
இறக்கிய மரச்சட்டங்களில்
ஒன்று
உயிர்பெற்று பேசியது
'நீ
உன் நண்பர்களுடன்
என் நிழலில்
விளையாட வருவாய் அல்லவா?'

3.வெயிலின்
ஒற்றைக் கண்ணை
ஆயிரம் கால் கொண்டு
மறைத்தது மழை

4.நான்
தொலைபேசி வருவதற்குள்
மேஜையை விட்டு
இறங்கிப் போயிருந்தது
கவிதை.

5.எல்லாம்
கறுப்பாய்க் காணும்
குருட்டுப்பெண்
நல்லநிறமாய் இருந்தாள்.

Friday, October 8, 2010

காமத்தின் வழி அது ...

தூக்கத்தின் நடுவில்
புகுந்தது ஒரு விரல்
பதறி எழுந்து பார்க்க
அவனேதான் 
'உன்
போர்வைக்குள்
எனக்கு ஒரு இடம் கொடு'
என்றான்
'அங்கே ரொம்ப குளிர்கிறது '
பிடிக்கவில்லை.வந்துவிட்டேன்
மேலும் அங்கு
நீ வேறு இல்லையே'என்றான்

'இன்னும் கொஞ்சம் சூடு ..
கொஞ்சம் உஷ்ணம்
இருந்தாலே போதும்
எல்லாம் சரி ஆகிவிடும் 
தருவாயா' என்றான் இறைஞ்சலாய்
கண் உருகி
கன்னத்தில் வழிய
'என் உயிரே
என் உதிரம் முழுதும் உனக்கே
உறிஞ்சிக் கொள்'
என்று இதழ் கொடுத்தாள்
கிண்ணத்தில் விழுந்த
முதல் துளி
பெருகிப் பெருகி
நுரைத்தது
அலை வீசிப் படர்ந்தது
ஆசை அமிலம் சுரந்து
ஆடைகளை எரித்தது 
கொடிமரமெங்கும்
அமுதம் ஏறி
கேணியில் பாய்ந்தது
தசைச் சுருள்கள் எல்லாம்
விடுபட்டு இளகியது
கதறலுடன் கண்விழிக்க
எல்லாம் மறைந்தது
ஈர உள்துணிகள் தவிர
எதுவும் மாறி இருக்கவில்லை
அவன் இன்னும்
இறந்தே இருந்தான்
அவள் தனியேதான் இருந்தாள் ....

Thursday, October 7, 2010

அவநம்பிக்கையாளன்

நான் நம்பிக்கையாளன்
என்றே
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆனால்
சொல்லும்போதே
அதில்
அவநம்பிக்கை கொள்கிறேன்
கரையான்கள்
அரித்துத் தின்ற
என் நேற்றுகளில்
நம்பிக்கை கொள்ள
எதுவும் மிச்சமிருக்கவில்லை
ஆனாலும்
விழுந்தவன் எழவே வேண்டும்
என்ற விதியை
மீற முடியாது
மீண்டும் எழுகிறேன்
மீண்டும் விழுகிறேன்
ஒரு
அபத்த நாடகத்தின்
காட்சி போல
திரும்பத் திரும்ப
இதுவே நிகழ்கிறது
தப்பிக்க செய்யும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
தண்டனை உயர்கிறது
இருத்தலின் இசைத்தட்டில்
என்றோ முறிந்த கீறலில்
உணர்வின் முள்
முட்டி முட்டி திரும்புகிறது
ஸ்வரத்தின் முதலுக்கே

சட்டென்று
என் நிரலில்
என்ன பிழை என்று
கண்டு திருத்தும்
ஒருவர் வருவாரென்று
ஏங்குகிறேன்
ஆனால் அதுவும்
என் நிரலில் உள்ளதே 
என்று அறியாது மயங்குகிறேன்..

இறுகிக் கிடக்கும்
சிறையின் கம்பிகளூடே
மிதந்து வரும்
எப்போதோ
யாரோ அனுப்பும்
பட்டாம் பூச்சிக்காய்க்
காத்திருப்பதேயாய்
ஆயிற்று வாழ்க்கை....

Wednesday, October 6, 2010

மழை நாளில் தொலைந்தவள்

காலை
எழும்போதே
காதில்
மழை வெடிக்கும்
சத்தத்துடன்தான் விழித்தேன்.
விடிந்தபிறகும்
தீராது
வீழ்ந்து கொண்டிருந்தது மழை.
முதல் குவளை
தேநீருடன்
ஒருதுளி
மழைத் தேனும் கலந்தது.
போர்வைக் கண்ணிகள்
அத்தனையும்
உடைத்துவிட்டு
உள் புகுந்து
எலும்புகளின் தாழ்கள்
அத்தனையும்
குளிரால் திறந்தது

வானிலிருந்து வீழும்
மது போல
எல்லார் கோப்பைகளையும்
நிரப்பிக் கொண்டிருந்த
மழைக்கு
தமிழில்
இன்னுமொரு
நல்ல பெயர் தேடி
இன்னுமொரு முறை
உறக்க உலகில் நுழைந்தேன்
வெறும் கையுடன்
மீண்டு வந்த போதும்
வீதியை
அலம்பிக் கொண்டிருந்தது மழை
ஒரு வேளை
அருகில்
நீ இருந்திருந்தால்
சொல்லி இருக்கக் கூடும்
தலையணையை கரைக்கும்
கண்ணீர்த் துளிகளுடன்
நடுங்கும் விரல்களுடன்
அலை பேசியில்
உன்னைத் தேடினேன் 

நகங்கள் கூட
அதன் உறைகளில்
கனக்கும்
கோழிக் குஞ்சுகள் கூட
கூடு சூடு தேடி
ஒடுங்கும்
இந்நாளில்
எதற்கும் பதில்தராது
எங்கோ
போய்த் தொலைந்திருந்தாய்  நீ...

Monday, October 4, 2010

விஷ விருட்சம்

சட்டென்று
ஓர் இரவில்
வீட்டின் மையத்தில்
முளைத்துவிட்ட
மரம் போல
மனதில் நுழைந்துவிட்ட
இந்த பிரியத்தை
அச்சத்துடன் பார்க்கிறேன்.
அது
என் அஸ்திவாரங்களை எல்லாம்
அசைப்பதை
செய்வதறியாது வெறிக்கிறேன்
வெட்ட வெட்ட
அதன் கிளைகள்
என் மனமெங்கும்
பரவுவதை உணர்கிறேன்

எல்லா எண்ணங்களும்
ஏதோ ஒரு கணத்தில்
அதன்  திசையே
திரும்புவது கண்டு
திடுக்கிடுகிறேன்

எங்கேயும்
பரவிய நிழலாய்
அது எனக்காய்
காத்து
நிற்பதை உணர்கிறேன்

அதனுடன்
பேசாக் காலமெல்லாம்
 பெருவெளியில் 
சுமையாகிக்
கனப்பதைக் காண்கிறேன்.

தன்னைத் தின்று
தான் வாழும்
வினோத மிருகமாய்
 என் நினைவே
எனக்கு நஞ்சாய்
இறந்து வாழ்கிறேன்

கைக்கிளையின்
நீலம் பாரித்த விரல்களுடன்
மீண்டுவந்து
இக்கவிதையை எழுதுகிறேன்.

Sunday, October 3, 2010

கண்ணி 2 18+

வயது வந்தவர்க்கு மட்டும்!

 ''என்ன பொண்ணும்மா நீ''என்றான் சண்முகம் அவளிடம் திரும்பி.''அவ்வளவு தூரம் தனியாவா  வந்தே?''
''ஆமாண்ணே''
''இப்படி வரலாமா.ஒரு வயசுப்பொண்ணு நடுராத்திரில பசார்ல தனியா இருக்கலாமா.இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த ஆள் நடமாட்டம் கூட இருக்காது.பிறவு தெரு நாய்ங்க எலாம் கூட்டமா சேந்து திரியும்.யாராச்சும் மாட்டுனா கடிச்சே கொன்னுடும்.தெரியுமா''என்றான்.அந்தப் பெண்ணின் விழிகள் அச்சத்தில் விரிவது பார்த்து''போன மாசம் கூட ஒரு பிச்சைக்காரிய குதறிடுச்சுங்க.என்னடே''என்றான்.
''இப்படி ஒத்தையா நிக்கறீயே.செரி.எதுவும் சாப்பிட்டியா''
''..........''
அவள் பேசவில்லை.கண்கள் லேசாக துளிர்த்தன.தலையெல்லாம் புழுதியாய் இருந்தது.ரொம்ப அலைந்திருப்பாள் போல...''
''செரி.அழுவாத.தோ மாடிரூம் எங்களுதுதான்.இன்னிக்கு இங்கே தங்கிக்க.காலையிலே பஸ் ஏத்தி விடுறோம்.என்னா''
அவள் தயங்க''எல்லாம் கூடப் பிறந்தாப்பிலதான்.மேலே போய் இரு என்ன.நாங்க போய் ஏதும் உனக்கு திங்க வாங்கிட்டு வாரோம்.ஏலே சாவியக் கொடு''
அவன் என்னிடம் இருந்து சாவியை ஏறக் குறையப் பிடுங்கிக் கொடுங்க அவள் பிருஷ்டம் அசைய மேலே போன பின்பு ''ஏலே சவத்து மூதி.என்னலே பண்றே.ராத்திரி ஒரு பொட்டைய மாடிக்கு ஏத்தறான் பையன்னு தெரிஞ்சா வகுந்துடுவான் எங்கப்பன்.''
''தெரிஞ்சாத்தானடே.எல்லாம் நான் பாத்துக்கறேன்''
அவன் சைக்கிளைத் தள்ளி ''ஏறு.அய்யர்கடைல எதுவும் கிடைக்கா பார்ப்போம்.''என நான் பலவீனமாய் ''தப்பில்லையாடே''என்றேன்.
'போலே.கிழங்கா.என்ன ஒரு சான்ஸ்.காலம் முழுக்க பிட்டுப் படம் பாத்து மூலையில உக்காந்து கையடிச்சுட்டே காலத்தைக் கழிக்கப் போறியா.ஆண்டவனாப் பாத்து பசிச்ச வேளைல கடிச்சுக்கோன்னு அனுப்பி வச்சிருக்கான்.ஒண்னு ராமனா இருக்கணும்.இல்லா ராவணனா இருக்கணும்.நடுவாந்திரமா இருந்தா சந்தோசமே கிடையாது பாத்துக்க.அதுக்கு இன்னைக்கே செத்துப் போய்டலாம்.ஒண்னு சண்டைல சாவனும்.இல்லைன்னா ..........ல சாவனும்டே''

வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்த அய்யரை எழுப்பி ''அய்யரே.நாலு இட்லி கொடு''என்றோம்.
அய்யர் கட்கத்தைச் சொரிந்து கொண்டே ''சட்னி இல்லை.பரவாயில்லையா''என்றதற்கு ''எளவு.இட்டலியா இருந்தாப் போதும்''என்று சண்முகம் ஏன் சிரிக்கிறான் என அவருக்குப் புரியவில்லை.பக்கத்திலேயே டீக்கடையில் ''அண்ணே.ஒரு கூஜாவில பால் கொடுண்ணே.கூஜா காலைல தாரேன்.''
''எதுக்குடே பால்.''
'இருடே''என்று குரு மெடிகல் கதவைத் தட்டி''அண்ணே.தூக்கமே வர மாட்டிங்குது.ஒரு மாத்திர கொடு''
அவன் கண் கூசி''அதெல்லாம் சீட்டில்லாம தரப்படாது''என்று''யாரு.பேப்பர்க்காரர் மவனா''
நான் சுருங்கிப் பின்வாங்க ''ஒரு மாத்திரைன்னே.அதுலயா சாவப் போறேன்''என்றான் சண்முகம்.

விசிலடித்த படியே திரும்ப வந்த போது  பெண் கதவு திறந்து உள்ளறையில் சுருண்டு படுத்திருக்க எங்களைக் கண்டதும் விலுக்கென்று எழுந்தது .
''தூங்கிட்டியா.இந்தா இதச் சாப்பிடு முதல்ல''என்றான் சண்முகம்.''தண்ணீ அங்க இருக்கு பாரு''
அவள் முதலில் தயங்கிப் பின்னால் பார்சல் பிரித்து சாப்பிடத் தொடங்க அப்போதுதான் அவளைச் சரியாக கவனித்தேன்.சற்று குட்டையாய் இருந்தாலும் வடிவாய் இருந்தாள்.காபி நிறம்.ஓவல் முகம்.பெரிய கண்கள்.பெரிய கீழ் உதடு.பச்சைத் தாவணி உடன் பூப்போட்ட பாவாடை.இருபது வயதுக்கு மேல் இருக்காது.பச்சை ஜாக்கட்டின் அடியில் வெள்ளை பாடி வரி வடிவாய்த் தெரிய ஒரு கருக மணிமாலை அதன் மேல் கிடந்தது.
''வெளிய இருக்கோம் என்னா''
வெளியே வந்ததும் சண்முகம் பாலில் மாத்திரையைக் கரைதான்.''போதுமாடே.''என்றேன்.''முழுக்கத் தூங்கிட்டா இன்ன பண்றது.அதுக்கு பிணத்தைக் கட்டிக்கலாம்.ரொம்ப சத்தம் போடக் கூடாதில்லே அதுக்கு''
அவன் அந்தப் பாலை உள்ளே போய் கொடுத்து விட்டு வந்தான்.''இந்த விடி விளக்கு மட்டும் இருக்கட்டும் என்ன''

கதவை அரை இன்ச் மட்டும் திறந்து வைத்துக் கொண்டு அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்தோம்.நாள் முழுஅ அலைந்ததில் அலுப்பும் உணவின் கனமும்மாத்திரையும் சேர்ந்து  அவள் அரை மயக்கத்துக்குப் போகும்போது ''இப்ப வாடா''என்று உள்ளே போனான்.

எங்களைப் பார்த்ததும் அவள் எழுந்து சுவரோரம் அண்டி அமர்ந்தாள்.
''உக்காருடா''என்று சண்முகம் அவள் அருகில் சப்பணமிட்டு அமர்ந்தான்.''அப்புறம்?''என்றான்.
''உன் பேர் என்ன''
''கண்ணம்மா அண்ணே''
'நல்ல பேருதான்.கண்ணும் பெரிசாத்தான் இருக்கு.அது சரி 'ஊர்ல இருந்து எதுக்கு ஓடி வந்தே''
''..........''
''சொல்லு.லவ் மேட்டரா''
''கூட வந்த ஆள் எங்க''
அவள் விசும்பி அழ ஆரம்பிக்க ''சரி.சரி.விடு.இப்ப அழுது என்ன...அது எங்களுக்கு எதுக்கு..போகட்டும்.....தா இவனுக்கு ஒரு ஆசை.இப்பதான் சொல்றான்''என்றான் மெதுவாய்.
அவள் திரும்பி என்னைப் பார்க்க நான் பரிதாபமாய் சண்முகத்தைப் பார்த்தேன்.
''ஒண்ணுமில்லே.சினிமாலாம் பாப்பியா''
அவள் இல்லைஎன்று தலை அசைக்க ''நாங்க பார்ப்போம்.நிறைய.அதில புதுசா ஒரு பொண்ணு ஆக்ட் கொடுக்குது.பேர் என்னடா...ஆங் ..யா அவன்னா இவனுக்கு உசிரு.லெட்டர் கூட எழுதியிருக்கான்.அதில பாரு அவ அச்சு அசலா உன்ன மாறியே இருப்பா .அதுனால இவன் என்ன ஆசப் படறான்னா இன்னைக்கு  ஒரே ஒரு தடவை உன்ன முழுசாப் பாக்கனும்னு. என்ன சொல்றே''
பெண் மலங்க மலங்க விழிக்க ''பார்க்க்கறதுன்னா ...துணிவேண்டாம்.எத்தனை அழகு நீ .இத்தனை துணி போட்டு மறச்சிருக்கே. அட அழுவாத.ஒன்னும் தப்பில்ல.மண் திங்கற உடம்புதானே..பார்த்துட்டு விட்டிருவோம்.விரல் முனை மேல படாது.''
அவள் கண்கள் மெல்ல நிரம்புவதைப் பார்த்தேன். ''கூடப் பொறந்தாப்புலன்னு சொன்னியே அண்ணே''
''அதெல்லாம் சொல்றதுதான்.இந்நேரம் வேற யார்கிட்டயாவது மாட்டிக் கிட்டா என்னா ஆயிருக்கும் தெரியுமா.கெடுத்துக் கொன்னு வாய்க்கா முள்ளுல வீசிட்டுப் போயிருப்பாங்க.நாங்களாப் போக பேசிட்டிருக்கோம்.அட.நேரமாச்சு.காலைல ஊருக்குப் போ வேணாம்?எங்களுக்கும் வேலை இருக்கு இல்லே.சீக்கிரம் கழட்டு.இல்ல நான் வேணா ஹெல்ப் செய்யவா''
அவள் பதறி பின் நகர்ந்து ''பார்த்திட்டு விட்டுருவீங்களா''
''சத்தியம்''
அவள் அப்படியே நின்று கொண்டு ''அண்ணே.நீயாவது சொல்லு அண்ணே ''என
சண்முகம் சட்டென்று சீறினான்.''ஏய்..டிராமா போடறியா..இதே இடத்தில கொன்னுப் புதைச்சிருவோம்.கழட்டுடி''
அவள்  பீதி அடைந்து மெதுவாய்த் தாவணியை மட்டும் உருவிப் பக்கத்தில் வைத்தாள்.
''ம்ம்.அடுத்து'..'
ஜாக்கட்டையும் அவள் கழற்ற நான் இற்றுவிடுவது போல் உணர்ந்தேன்.அரை நடுவே வெள்ளை உள்பாவாடையும் பாடிசுமாய் நின்றிருந்தாள்.ஆனால் அதற்கு மேல் மறுத்தாள்.''அண்ணே.போதுண்ணே''எனறாள் கண்ணீர் மல்க.
''அட உன்ன மதிச்சுப் பேசினது தப்பு.பார்த்தியா''சண்முகம் ஆவேசமாய் அவளை நெருங்கி அவள் பாடிசின் எலாஸ்டிக் கொக்கியை விடுவிக்க அவள் அதைக் காப்பாற்ற முனைகையில் அவள் பாவாடை நாடாவைப் பிடித்து சட்டென்று இழுத்தான். அது வட்டமாய் அவள் கால்களைச் சுற்றி விழுந்தது.நான் திக்கித்து அப்படியே நின்றுவிட்டேன்.மாடத் தெரு பெண் போல இல்லை இவள்.பிசைந்து வைத்த கருப்பட்டி போல் கட்டி மார்புகள்.கிஸ்மிஸ் பழம் போன்று திரண்டு மேல் எழுந்த முலைகள்.கீறல் தொப்புள்.கருத்த தேனடை போன்ற அல்குல்!
சண்முகம் நெருங்கி அவள் மேல் கைவைக்க அவள் பலவீனமாய் அலறினாள்.''தொட மாட்டேன்னு சொன்னியே''
''அதெல்லாம் சொல்றதுதான்.லே இவ காலைப் பிடிலே''
''சண்முகம்.வேண்டாம்.''என்றேன் நான் வராத குரலில்.அவன் கேட்கும் நிலையில் இல்லை.நான் வெளியே ஓடி வந்து விட்டேன்.என் வேட்டி நனைந்திருப்பதை உணர்ந்தேன்.நெஞ்சு வெடி போல் அதிர ஒரு சிகரட் பற்ற வைத்துக் கொள்ள முயன்று தோற்றேன்.உள்ளே அவள் விசும்புவதும் சண்முகம் அவளை அதட்டுவதும் மெலிதாய்க் கேட்டுக் கொண்டிருக்க ஒரே நேரத்தில் உள்ளே போகவேண்டும் என்றும் அந்த இடத்தை விட்டே ஓடிவிடவேண்டும் என்றும் விரும்பினேன்.காலம் அப்படியே உறைந்து நின்றிருக்க சுவர்ப்பல்லி ஒன்று சினை வயிற்றுடன் இரைக்குக் காத்திருப்பதையே அபத்தமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.சற்று நேரத்தில் எல்லா ஒலிகளும் நின்றன. சண்முகம் கலைந்த தலையுடன் வெளியே வந்தான்.

''நீ போகலே.?''என்றான்.

''இல்லே''என்றேன் தயக்கமாய்.''என்னால முடியாது''
''போலே.சவத்து மூதி.போ''என்று உள்ளே கண்காட்டினான்.''அடங்கிடுச்சு.இனிமே சத்தம் போடாது.''

நான் மௌனமாய் இருக்க கிட்ட வந்து ''புத்தம் புதிசுடா.!போ.கட்டினாக் கூட இந்த சுகம் கிடைக்கவே கிடைக்காது ''என்றான்.இன்னும் நெருங்கி வந்து .''ஒரே ரத்தம் பார்த்துக்க''என்றான்.

Friday, October 1, 2010

சில பூக்கள் சில கவிதைகள் ....

1.அசப்பில்
உன் நிறத்த்திலேயே
புதிய மலர் ஒன்று
வனத்தில்
நேற்று பார்த்தேன்.
காப்புரிமை மீறல்
என்று சொன்னேன்.
அதற்கு புரியவில்லை.

2.கவிதை செய்யும்
இயந்திரம் ஒன்று
கண்காட்சியில் நேற்று
கண்டேன்.
யார் என்ன பொருள்
கொடுத்தாலும்
அழகான கவிதை
செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.
வியப்புடன் ஒன்று
வாங்கி
வீட்டுக்கு கொண்டுவந்தேன்.
முதல் முதலாய்
உன் மேல் ஒரு கவிதை
கேட்டேன்.
என்னவோ தெரியவில்லை
'பூ'
என்ற
ஒற்றை வார்த்தையை மட்டுமே
திரும்பத் திரும்ப
அடித்துக் கொண்டிருக்கிறது ...

3.யாரும் காணாத
மலர்கள் ஆயிரம்
உண்டு உலகில்
உன்னையும் என்னையும் தவிர
யாரும்
காணக் கூடாத
மலர்களும்
சில உண்டு
உன்னில்...

LinkWithin

Related Posts with Thumbnails