இத்தனை
நீ என்மீது
காட்டியபோதும்
அவமானத்தின் சகதியை
என் மீது
அள்ளி அள்ளிக் கொட்டியபோதும்
மன்னிக்க மன்னிக்க
துரோக விஷத்தில்
என்னை
தோய்த்தபோதும்
ஏன் மீண்டும் மீண்டும்
உன்னையே
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
என்று
கண்ணீரால் கரைந்த
மற்றுமொரு பின்னிரவில்
யோசித்தேன்
முடிவே அற்று நீண்ட
பாலை இரவு முழுதும்
மெய்நிகர்க் காட்டில்
திசை தப்பியவன் போல திரிந்தேன்
நான் ஏன் இப்படி
என்னை வதைத்துக் கொள்கிறேன்
என்று
எதோ ஒரு கணினி
சொல்லிவிடக் கூடுமென ...
விடிகாலைப் புலரியில்
போதி வெளிச்சம்
ஒன்று கிடைத்தது
கொல்லவரும் புலியை நேசிப்பவரும்
கொத்தவரும்
கொடு நாகங்களை
குழந்தைகள் போல பாவிப்பவரும்
இவ்வுலகில் உண்டென
அங்கு அறிந்தேன்
புழுக்களை விரும்புபவரைக்
கூட
அவ்வுலகில் நான் சந்தித்தேன்
முன்பும் நான்
அவர்கள் போன்றோரைக்
கேள்விப்பட்டதுண்டு
ஆனால்
ஒருபோதும்
அவர்களைப் புரிந்துகொள்ள
முடிந்ததில்லை
ஆனால் தோழி
அடுத்த முறை சந்திக்க
நேரிடும்போது
பாம்புகளைக் காதலிப்பவர்களை
புழுக்களைக் கொஞ்சுபவர்களை
எல்லாம் என்னால்
புரிந்து கொள்ளமுடியும்
என்றே தோன்றுகிறது
அவர்கள் தான் சொன்னார்கள்
எனக்கு
மனிதன்
ஒருபோதும் தருக்கத்தால்
ஆனவன் அல்ல
மாறாய்
அவன்
காதலினால் ஆனவன் என்று...
வார்த்தைகள் விளையாடியிருக்கிறது நண்னரே உங்களிடம்.. அருமை..
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteClass !!!
ReplyDelete