Thursday, September 30, 2010

கண்ணி 1

வயது வந்தவர் மட்டும்!

எண்பதுகளில் நாங்கள் இருபதுகளில் இருந்தபோது நிகழ்ந்தது அது.அப்போது சந்திப் பிள்ளையார் முக்கில் ஒரு சிறிய புத்தகக் கடை வைத்திருந்தேன்.உண்மையில் அப்பாவின் பேப்பர் ஏஜென்சியை சற்று விரிவு படுத்தி அமர்ந்திருந்தேன்.கீழே கடை.மேலே கொடவுனாகவும் நான் தூங்கும் ,புகைக்கும்,மது அருந்தும்,நீலப் படங்கள் பார்த்தபடியே கர போகம் செய்யும் இடமாகவும் அது இருந்தது.பெரும்பாலும் பத்து வட்டி பால்வண்ணம் பிள்ளை மகன் சண்முகம்தான் அதற்கெல்லாம் கூட்டு.

அப்பாதான் டவுன் முழுக்க ஏஜென்சி எடுத்திருந்தார்.தினத் தந்தி,மலர்,எக்ஸ்பிரஸ்,ஹிந்து எல்லாம் .பின்னர் நான் வற்புறுத்தி குமுதம்,ஆவி,சாவி,குங்குமம்,பொம்மை,சினிமா எக்ஸ்பிரஸ் கூட எடுத்தார்.ஞான பூமி,ராமகிருஷ்ண விஜயம்...எனது ரகசியக் கணக்காக டெபோனிர்,பருவகாலம்.அந்தரங்கம் போன்றவையும் உண்டு.அவற்றை இப்போது போல வெளிப்படையாய்த் தொங்கவிட முடியாது.கஞ்சா வாங்குவது போல ராத்திரிகளில்  பதுங்கி வந்து அதிக விலை கொடுத்து வாங்கிப் போவார்கள்.

சற்றே காலம் போன பத்திரிகைகளை சுழலும் நூலகம் என்று வீடு வீடாய் சைக்கிளில் கொண்டு சாயங்காலம் கொடுப்பேன்.இவற்றைப் பெரும்பாலும் பெண்களே வாங்குவார்கள்.ராணிமுத்து,மாலைமதி போன்ற நாவல்களுக்கு கடும் கிராக்கி இருக்கும்.எனக்குப் பிடித்தப் பெண்களுக்கு மட்டும் அவை சீக்கிரம் கிடைக்கும்.கட்டுப் பெட்டியான திருநெல்வேலிப் பெண்களின் கலாச்சாரப் படுதா விலகும் அரிதான தருணங்களில் இவை ஒன்று.ராஜேஷ்குமார் ரமணி சந்திரன் எல்லாம் இன்னும் மேலே வரவில்லை.சுஜாதா அவர்கள் தலைக்கு மேலே எழுதுவார்.அய்யர் வீட்டுப் பெண்கள் மட்டுமே வாங்குவார்கள்.லக்ஷ்மி,சிவசங்கரி,மகரிஷி,பி.வி.ஆர் போன்றவர்கள்தான் டாப்.புஷ்பா தங்கதுரை சற்று அதிரடியாக எழுதுவார்.ஜெ அதற்கு அதைவிட அதிரடியாய்ப் படம் போடுவார்.பெண்கள் 'என்ன இப்படில்லாம் எழுதுறாங்க'என்று திட்டுவார்கள்.ஆனால் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள்.

எனக்கு நன்றாக நினைவு உண்டு.சவீதா என்று ஒரு எழுத்தாளர் குங்குமத்தில் ஒரு தொடர் ஆரம்பித்தார்.கதை தொடங்கும்போதே ஒரு பெண் ஆடையில்ல்லாமல் பாத்ரூம் நடந்து போய் தான் கர்ப்பமாகி இருக்கிறோமோ என்று சிறுநீர் இருந்து பரிசோதனை பண்ணிப் பார்ப்பாள்.அதற்கு [சம்பந்தமில்ல்லாமல்]அதை விட அதிரடியாய் ஜெ படம் போட்டிருந்தார்.ஒரு அழகிய நீண்ட கால்கள் உடைய குட்டைப் பாவாடை அணிந்த பெண்ணின் காலடியில் ஒரு சிறுவன்.பாவாடையைத் தூக்கி 'வாவ்'என்பது போல...அது கொஞ்சம் சர்ச்சைக்கு உள்ளானது.ஒரு பெண் குங்குமத்தைத் தூக்கி எறிந்து'இனி நான் குங்குமமே படிக்க மாட்டேன்'எனறாள்.ஆனால் அச்செய்தி எப்படியோ ஒரு நுண் அலை போல பெண்கள் மத்தியில் பரவி அந்த வார குங்குமத்துக்கு அடிதடியே நிகழ்ந்து மேலும் மூன்று காப்பி வாங்கினேன்.

ஆண்களுக்குதங்கள் வீடுகளுக்குள்ளேயே நிகழும்  இந்த கலாச்சார நகவு பற்றி எல்லாம் ஒரு எழவும் தெரியவில்லை.அவர்கள் அதெல்லாம் மாடத்தெருவில் சில வீடுகளில் மட்டுமே நிகழ்வதான பிரமையில் இருந்தார்கள்.அவர்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் தங்கள் காம உறுப்புகளை இரவுகளில் ஆண்களுக்கு விறைககும் போது மட்டும் அணிந்துகொண்டு மற்ற நேரங்களில் கழற்றிவைத்து விட்டு பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.அல்லது அப்படி எதிர்பார்த்தார்கள்.அது கிடக்கட்டும்.இது அவர்கள் பற்றியது அல்ல.

பெரும்பாலும் நான் கடை மாடியிலேயே படுத்துவிடுவேன்.காலை நான்கு மணிக்கு பேப்பர் லாரி வரும்.இறக்கி தெருவாரியாக அடுக்கி சைக்கிளில் சென்று வீசிவிட்டு ஆறு மணிக்குள் வீடு போய் விடுவேன்.பிறகு குளித்து திருஞான சம்பந்தர் போல பட்டை அடித்துக் கொண்டு பதினோரு மணி வாக்கில்தான் கடைக்கு வருவேன்.

அன்று ஒரு மாறுதல்.அது சாரல் சீசன்.நானும் சண்முகமும் காலை பேப்பர் போட்டு முடித்த உடனே குற்றாலத்துக்கு வண்டி ஏறி விட்டோம்.தென்காசியில் ஒரு நண்பர் அறையில் தங்கி நன்றாகத் தண்ணி அடித்தோம்.பிறகு அட்டகாசமான குளியல் முடித்து பிராணூர் பார்டர் போய் புகழ்பெற்ற பிரியாணியும் இறைச்சியும் சாப்பிட்டோம்.[இதை எல்லாம் நான் உள்ளூரில் செய்ய முடியாது.'ஏய் குப்பாத்தா உன் மவனை ஜன்னத் ஓட்டல் பக்கம் பார்த்தேன் என்று சொன்னதற்கே அம்மா மூன்று நாள் அன்ன தண்ணீர் இல்லாது கட்டிலோடு ஒடுங்கிக் கிடந்தாள்]பிறகு மீண்டும் தென்காசிக்கு அருவி மணக்க வந்து அறையில் கருப்பு வெள்ளை டிவியில் டெக் போட்டு ஒரு நீலப் படம்.

...யா என்ற எனக்குப் பிடித்த நடிகை என்ற போது முதலில் நம்பவில்லை.ஆனால்...அவளேதான்.!உடன் ஒரு சின்னப் பையன்!கொஞ்ச நாட்களாய் அவளைக் காதலித்துக்  கொண்டிருந்தேன்.அவளுக்கு மொக்கையாய் சில கவிதைகள் சேர்த்து கடிதங்கள் கூட எழுதி இருந்தேன்.எனக்குப் பிடித்த முதல் கறுப்புப் பெண்.

எனக்கு கறுப்புப் பெண்களைப் பிடிக்காததற்கு காரணம் இருந்தது.எனது முதல் யோனி தரிசனம் ஒரு உடல் பெண் மூலம் நிகழ்ந்தது.மாடத் தெருவில் ரொம்ப இணக்கமாய் இருப்பாள் என்று சண்முகம்தான் அழைத்துப் போனான்.அவள் கருப்பாக இருந்தாள்.அவளைவிட அவள் சாமான் செட்டுகள் தீயினால் வாட்டினார் போல் இன்னும் கருப்பாய் இருந்தது.அவ்விட மயிர்களைச் சிரைக்காமல் காடு மாதிரி வளர்த்து திரி திரியாய் தொங்கிக் கொண்டிருக்க கிட்ட போகும் முன்பே முடை நாற்றம் அடித்தது.தாங்காமல் ஓடி வந்துவிட்டேன்.

ஆனால் எனது கனவுக் கன்னி ...யா இப்படி நடிக்கத் துணிந்துவிட்டது என்னால் தாங்கவே முடியவில்லை.அது ஒரே சமயம் ஒரு ஏமாற்றத்தையும் கிளர்ச்சியையும் என்னுள் ஏற்படுத்தி இருந்தது.'எப்படிடே'என்று பஸ்ஸில் புலம்பிக் கொண்டே வந்தேன்.'எல்லாம் காசுலே''என்றான் சண்முகம்.அவனுக்கு இதெல்லாம் அதிர்ச்சியாக இருக்கவில்லை.
'அவ அடரசைக் கண்டுபிடுச்சி வக்காளி எங்க அப்பன் சொத்தே போனாலும் ஒரு தடவை போயிட்டு வந்திடும்டே 'என்றேன் நான்.

டவுனில் இறங்கிய போது மணி பனிரெண்டு.பகலில் எள் இட இடமில்லாத இடம்.இப்போது காக்கை கூட காணோம்.லட்சுமி தியேட்டர் வரை போய் ஒரு பாக்கட் சிகரட் மட்டும் வாங்கிக் கொண்டோம்.அங்கு மட்டும் இரவுக் காட்சி முடிகிறவரை சில கடைகள் இருக்கும்.பிள்ளையார் கோயிலில் ஊழி இருட்டில் இருக்க பக்கத்தில் குதிரை லாயத்தில் அவை கால் மாற்றி மாற்றி தூங்கிக் கொண்டிருந்தன.கடைக்கு வந்து சரியாக பூட்டி இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துவிட்டு [ஒருதடவை யாரோ பூட்டு உடைத்து டெபோனிர் வகைகளை மட்டும் திருடிப் போய் விட்டார்கள்]மேலே ஏறும் போதுதான் அவளைப் பார்த்தோம்.மாடிப் படியின் நிழலில் பதுங்கிக் கொண்டு..
''யாரு'' என்றான் சண்முகம்.அவள் இன்னும் பதுங்க ''யாருன்னு கேட்கறேன்''
அவள் தயங்கி வெளிவந்தாள்.தெருவிளக்கு வெளிச்சம் அவள் மேல் மஞ்சளாய் வரி போட்டது.
''ய்ர்ரும்மா நீ.இங்கே இருக்கே''
பிச்சைக்காரி போலோ வேசி போலோ பைத்தியம் போலவோ இல்லை.
''சொல்லும்மா.என் இங்கே உட்கார்ந்திருக்க.நான் இங்கனக்குள்ள உன்ன பார்த்ததில்லையே''
அவள் உடைந்த குரலில் ''எனக்கு மதுரைண்ணே''''செரி?இங்க யார் வீட்டுக்கு வந்தே..''
''என் சினேகிதி வீட்டுக்கு வந்தேன்.அவ வீட்டுல யாரும் இல்லீங்க..''
''அது யாரு சினேகிதி?''
''சொர்ணம் னு அவக அக்காவை எங்க ஊர்ல கட்டிக் கொடுத்திருக்கு.அவுக அப்பாரு கூட மார்க்கட்ட்ல வாழைக்கா மண்டி வச்சிருக்காரு''
''செரி.அவுக இல்லையா''
''காசிக்குப் போயிட்டாகளாம்''
''அடடா.சரி.ஊருக்குப் போயிட வேண்டியதுதானே''
அவள் கண் கலங்கி''காசு இல்லே.பஸ் ஸ்டாண்ட்ல ஒரு கிழவி பேச்சு கொடுத்து பிடுங்கிடுச்சு''
''அடப் பாவமே..''என்றான் சண்முகம்.அவன் முகம் வெகு தீவிரமாய் இருந்ததைக் கவனித்தேன்.
அவன் என் பக்கம் திரும்பிக் கண் சிமிட்டிச் சிரித்தான். எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ''ஏலே .கோளுதான் உனக்கு.மெட்ராசுக்குப் போகவும் வேணாம்.அப்பன் சொத்தை அழிக்கவும் வேணாம்''என்றான்.''பொண்ண நல்லாப் பாரு.அவ கண்ணும் காயும் அப்படியே ..யா மாதிரியே இல்லே?''என்றான்.
நான் திரும்பி அவளைப் பார்த்தேன்.ஆம்.அப்படித்தான்  இருந்தாள்.

2 comments:

  1. //அவர்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் தங்கள் காம உறுப்புகளை இரவுகளில் ஆண்களுக்கு விறைககும் போது மட்டும் அணிந்துகொண்டு மற்ற நேரங்களில் கழற்றிவைத்து விட்டு பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.அல்லது அப்படி எதிர்பார்த்தார்கள்.//

    நச்சுன்னு இருக்குங்க!

    மொத்தத்துல நல்லாவே இருக்குங்க!

    ReplyDelete
  2. படித்த பிறகு தான் உங்க எழுத்தின் தாக்கம் உணர முடிகிறது.. மேலும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails