Saturday, April 9, 2011

உயிர்க் குமிழி ..


ஒரு சிறிய புழு.....
எப்படியோ
எங்கிருந்தோ
என் அறைக்குள்
வந்துவிட்டிருந்தது
விளையாட்டு முடிந்து
உள்ளே வந்த
என் மகன்
மறு யோசனையே இன்றி 
சட்டென்று
அதை செருப்புக் காலால் 
அழுத்தித் தேய்த்தான்

நிச்சயம் 
தோட்டத்தின் பாதுகாப்பிலிருந்து
அங்குவர
அது
மிகுந்த சிரமப் பட்டிருக்கவேண்டும்
அது
யாரைத்தேடி
அவ்வளவுதூரம்
வந்தது
என
யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

4 comments:

  1. அது இப்பொழுது உங்கள் கவிதை வரிகளில். இதற்காகத்தானோ!

    ReplyDelete
  2. நம் நாட்டின் அரசியலையும் ஆட்சியாளர்களையும் ஞாபகப் படுத்துகிறது இந்தக் கவிதையின் நிழல்.

    ReplyDelete
  3. What can I say? கசகசவென்று ஓர் உணர்வு. புழு என் சொந்தம் போல.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails