Saturday, September 25, 2010

உடல் தத்துவம் 9

வயது  வந்தவர்க்கு மட்டும்!
இந்த இடத்தில் என் மனநல மருத்துவ நண்பர் எனது டைரியை மூடி வைத்தார்
''இவையெல்லாம் உண்மையிலேயே நடந்ததா?இல்லை புனைவா?''
''ஏன்''என்று கேட்டேன்.''சித்தரிப்பில் ஒரு தீம் தெளிவாகத் தெரிகிறது.வாழ்க்கை இத்தனை நேராக கோடு போட்டாற்போல் போவதில்லை''என்றார்.''உதாரணமாக இந்த மேகி அத்தை.இவளைப் பற்றி என்னால் யூகிக்க முடிகிறது.அடுத்து என்ன வரப் போகிறது என்பதற்கான க்ளூக்களை ஒரு தேர்ந்த மர்மநாவல் ஆசிரியன் போல நீங்கள் விட்டுச் சென்றபடியேதான் இருக்கிறீர்கள்.சற்றே உள்ளுணர்வு கொண்டவர்களால் அவற்றைக் கண்டுகொள்ள முடியும்.''
நான் புன்னகைத்தேன்.''எல்லார் வாழ்விலும் ஒரு தீம் அடிநாதமாய் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது டாக்டர்''
''அதாவது சில கதைகள் சிற்சில அற்ப மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப காலத்தில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.இல்லையா.பெயர்கள் மாறலாம்.இடங்களும் சூழலும் மாறலாம்.மற்றபடி ஆதார சரடு ஒன்றேதான்.ஆனால் உங்கள் விசயத்தில் பெயர் கூட மாறவில்லை.இப்படி ஒரு ஒத்திசைவு புனைவில் மட்டுமே சாத்தியம்.மேக்தலீன்!இந்த பேரே இந்தக் கதை போகும் போக்கைச் சொல்கிறது அல்லவா.'என்றார்.பிறகு யோசனையாய் ''ஜேம்ஸ் பிரேசர் என்று ஒருவர்'..''
நான் ''Golden Bough!''என்றேன்.
அவர் ஆச்சர்யமுற்று ''படித்திருக்கிறீர்களா''என்றார்.
நான் லீலா தோமஸ் பற்றி சொன்னேன்.அவள்தான் அந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகப் படுத்தியவள்.எவற்றின் நடமாடும் நிழல்கள்  நாம் என்ற பிரமிளின் கவிதையை அறிமுகப் படுத்தியதும் அவளே...
''யார் அந்த லீலா தோமஸ்?''
''நீங்கள் மேகி அத்தையை ஏறக்குறைய சரியாகவே யூகித்து விட்டீர்கள்.ஆனால் லீலாவை உங்களால் யூகிக்கவே முடியாது.சரித்திரத்தில் இதுவரை அவள் போல வரவே இல்லை.''என்றேன்.
அவர் ''அப்படியா சுவராஸ்யம்''.முதலில் அவள் வரும் இடங்களைப் படிக்கிறேன்''என்றார்..




லீலா தோமஸ் !
அவளை ஒரு மான்சூன் புயலுக்கு முந்திய கணங்களில் சந்தித்தேன்.
அப்போது பம்பாயில் இருந்தேன்.
நிரந்தரத் தொழில் என்று ஒன்றும் இல்லாமல் மாதுங்காவில் ஒற்றை அறையில் தங்கி  சின்ன சின்ன குற்றங்கள் செய்து கொண்டிருந்தேன்.பெரும்பாலும் ஏமாற்றும் பனியாக்களை லேசாக தலையில் தட்டுவதாக இருக்கும்.அப்போது என்னுடன் ராபர்ட் என்கிற மலையாளி இருந்தான்,திடீரென்று ஒருநாள் அவன் திருந்த முடிவு செய்து யாரையோ பிடித்து அரபு நாட்டில் ஒரு விசாவுக்கும் வேலைக்கும் ஏற்பாடு செய்துவிட்டான்.ஆனால் போவதற்கு ஒரு மாதம் முன்னால் என்னை அழைத்து''எனக்கு ஒரு பிரச்சினை.உன்னால்தான் தீர்த்து வைக்கமுடியும் எனத் தோன்றுகிறது.''என்றான்.
நான் பணம் ஏதாவது கேட்டால் என்ன சொல்லி  சமாளிப்பது என்ற யோசனையுடன் ''என்ன''என்றேன்.
அவன் புரிந்து கொண்டு ''இல்லை வேறு''என்றான்.முகமெல்லாம் வேர்த்திருந்தது.அவன் எனது வீக் என்ட் தோழன்.அதாவது வார இறுதிகளில் பம்பாய் சிகப்பு விளக்கு வீதிகளில் பெண் வேட்டை ஆடும் சகா.[அந்தக் காலத்தில் எய்ட்ஸ் இல்லை]
''என்னடா.வேறு எதுவும் அந்தரங்கப் பிரச்சினையா''என்றேன்.[ஆனால் வி டி இருந்தது]
''மெடிக்கல் சர்டிபிகேட் தரமாட்டேன்கிரானா..ஒன்னும் பயப் படாதே..கண்டாலா பக்கம் தெரிஞ்ச டாக்டர் இருக்கான்.மூனே நாள் பெனிசிலின் போட்டு குணப் படுத்திடுவான்''
''அதெல்லாம் ஒன்னும் இல்லை.நான் ஒவ்வொரு தடைவையும் வந்து நல்லா டெட்டால் சோப்பு போட்டு கழுவிடுவேன் தெரியுமா''என்றான் சற்று கோபத்துடன்.
பினாயில் கூட போட்டிருப்பான் பயல்!என்று நினைத்துக் கொண்டேன்.
'பின்னே''
''இல்லி..நான் போறது சவுதிக்கு.அங்கெ விபச்சாரம் கிடையாது.பண்ணினால் சாட்டை அடி.கல்லால் அடி என்று பயமுறுத்துகிறார்கள்.அங்கெ பொம்பளைங்க எல்லாம் சர்க்கஸ் கூடாரம் மாதிரி மறைத்துக் கொண்டு சேக்குகளின் அந்தப் புரத்தில்தான் இருப்பார்களாம்.அதே சமயம் தனியா ஒரு பயல் கிடைத்த பிழிஞ்சு எடுத்திடுவாங்கன்னு சொல்றாங்க''
''அதனால் என்னடே நமக்கு சவுகர்யம்தானவே''
''இல்லைப்பா.மாட்டினா சேக்கு மாருங்க நம்ம தோலை உரிச்சுருவாங்க''
''இந்தக் கதையெல்லா யாருடே உனக்கு சொல்லுறா'.அவ்வளவு  பயமா இருந்தா ஏன் போறே''
''என்ன சொல்றே.ரெண்டு கொல்லத்தில சேச்சிக்கு கல்யாணம் பண்ணனும்பா.சக்கரம் வேணும்''
'சரி.அதுக்கென்னைஎன்ன பண்ண சொல்றே'.உனக்கோ வாரத்துக்கு ஒரு முறையாவது யோனிதரிசனம் பண்ணலைன்னா கை கால் நடுங்கி ஜன்னி வந்தா பன்னி கணக்கா ஆயிடுவே.அங்கேயோ வெட்டிடுவான்னு சொல்றே''
''அதுக்குதான் ஏதாவது சொல்லேன்''
''என்ன சொல்றது.கன்ட்ரோல்தான்.தியானம் பண்ணு தினமும்''
அவன் முறைத்து''நான் கிரிச்டியன்னு உனக்குத் தெரியாதா''
''அட.தியானம் ஹிந்துக்களின் பழக்கம்னு யார் சொன்னது''
''வேறே சொல்லுப்பா''
விபச்சரம் மட்டும் கிறித்துவப் பழக்கமா என்று சொல்லவிரும்பி விட்டுவிட்டேன்.
'ரெண்டு வருஷம் அங்கெ இருக்கற வரைக்கும் எனக்கு செக்ஸ் உணர்வே வரக் கூடாது.அதுக்கு ஏதும் மருந்து இருக்கா''
நான் சற்று ஸ்தம்பித்து விட்டேன்.என்னிடம் ஆண்மைக் குறைவுக்கு நிறைய பேர் வழி கேட்டிருகிறார்கள்.கொஞ்சநாள் நான் பண்ணிய தொழில்களில் லாட்ஜ் வைத்தியமும் உண்டு.ஆயுவேத மூலிகைகள் செய்வது எளிது.அஸ்வகந்தா [குதிரை மாதிரி புணர்ச்சிக்கு.குதிரை மாதிரி என்றால் வீர்யத்தை சொல்கிறேன் .பொசிசனைச்சொல்லவில்லை!]பூனைக்காலி போன்ற மூலிகைகளுடன் கொஞ்சம் கஞ்சா சேர்த்தால் போதும்.யுனானி சற்று சிரமம்.எருதின் விதைக் கொட்டை எல்லாம் தேவைப்படும்.செடி கொடிகளில் உயிர் வராவிட்டால் பாதரசம் சேர்த்த மருந்துகள்.மகரத்த்வஜம் என்று ஒரு மருந்து வாழைப் பழத்தில் உள்ளே வைத்து சாப்பிடவேண்டும்.பல் படக் கூடாது.பட்டால்  பல் போய்விடும்.நன்கு வேலை செய்யும்.முதலை மாதிரி பெண்டோடு இரவு முழுக்கப் பிணைந்தே கிடக்கலாம்.ஆனால் கிட்னி என்றைக்கு போகும் என்று சொல்ல இயலாது.யுனானி மருந்துகளை அல்வா என்போம்.தஸ் கபீர் என்ற மருந்து பிரசித்தம்.முகல் ராஜாக்கள் அந்தப்புரங்களில் ஆயிரம் பெண்களைப் புணர்வதற்கு என்றே கண்டுபிடித்தார்கள்.[ஹூம்.அப்போதும் எய்ட்ஸ் கிடையாது]

ஆனால் இவன் ஆண்மையைக் குறைப்பது கூட இல்லை.சட்டசபை போல் இரண்டுவருடம் சஸ்பென்ட் செய்து வைக்க அல்லவா கேட்கிறான்!
'உன் உறுப்புகளில் ஒன்று இடறல் அடைந்தால்'என்று குதர்க்கமாய் தோன்றிற்று.பாவம் வெட்டி எறிய மனம் இல்லாது தானே  கேட்கிறான்.

என்னிடம் இருந்த எல்லா புத்தகத்தையும் புரட்டினேன்.மருத்துவ நண்பர்களிடம் விசாரித்தேன்.'காமம்  என்பது கபம்.கபம் என்றால் கொழுப்பு.கொழுப்பு நிறைந்த சாப்ப்பாடு எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டால் அப்சரசே எதிரே அம்மணக் கட்டையாய் வந்தாக்கூட ஒன்னும் எந்திருக்காது ஓய்'என்றா ஒரு வைத்தியர்.
சவுதியில் மூன்று வேளை தயிர்சாதத்திற்கு எங்கு போவான்..மேலும் போவது ப்ளம்பர் வேலைக்கு.மந்திரம் ஓத அல்லவே.தவிர இரட்டைத் தண்டனை ஆகிவிடும்.ஒரே நேரத்தில் நாக்கையும் குஞ்சையும் பொத்த வேண்டும் என்றால் பயலுக்கு தலை தெறித்துவிடாதா
எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.மூன்றாம்நாள் அவனே வந்து ''இதற்கு ஹோமியோவில் மருந்து உண்டாம்''என்றான்.
ஆனால் எங்கள் பகுதியில் ஹோமியோ டாக்டர் ஒருவர் கூட இல்லை என்பது ஆச்சர்யமாக  இருந்தது.ஒரு பழைய லேம்பி ஸ்கூட்டரில் தேடினோம்.கடைசியில் தொம்பி வில்லியில் ஒரு டாக்டர் இருப்பதாக கேள்விப் பட்டுப் போனோம்.சற்று ஒதுக்குப் புறமான பகுதியில் இருந்தது ஒரு வீடு.ஆனால் தகவல் சொன்னப் பாழாய்ப் போனவன் அந்த டாக்டர் ஒரு பெண் எனச் சொல்லவில்லை.வீட்டின் முன்னால் இருந்த பலகை பார்த்ததும் ராபர்ட் கல்லைப் பார்த்த சுவானம் மாதிரி நின்றுவிட்டான்.'ஐயோ ஒரு பொண்ணானு''என்றான்.அதுவும் லீலா தோமஸ் என்று மலையாள வாடை வேறு அடித்தது.நாட்டில் உறவுப்  பெண்ணாய்க் கூட இருக்கலாம் என்று சொன்னான்.அவன் குடும்பத்தில் நிறைய லீலைகள் உண்டாம்.நான் வெகுவாய்க் களைத்திருந்தேன்.மழை வேறு வருவது போல் இருந்தது.இனி தேட முடியாது என்று முடிவு  செய்துவிட்டேன்.பெண்ணாய் இருந்தால் என்ன என்றதற்கு ராபர்ட் வெட்கப் பட்டது புதிதாய் இருந்தது.எங்களுக்குத் தெரிந்த பெண்கள் எல்லாம் 'அந்த வெட்கம் கெட்ட மலையாளி''என்றுதான் அவனை விசாரிப்பார்கள்.
நான் போய் பார்க்கிறேன் என்று உள்ளே போனேன்.

அது பெரிய காம்பவுண்ட் போட்ட வீடு வீடு அத்தனை பெரிதில்லை.ஆனால் சுற்றி நிறைய இடம் இருந்தது.பெரிய மார்புக்கு சிறிய முலை போல.எனக்கு அஸ்ஸாமில் ஒரு கோயிலில் பார்த்த சக்கரம் ஒன்றை நினைவு படுத்தியது.கீழ் காணும் படத்தைப் போல..


தந்திர சாஸ்திரத்தில் நடுவில் உள்ள புள்ளியை பிந்து என்பார்கள்.இந்த பிந்து உடைந்துதான் உலகம் பிறக்கிறது.இந்த பிந்து உடைந்துதான் மாதா மாதம் ரத்தப் போக்கு வருகிறது.ச்சே.என்ன சொல்கிறேன்..மறுபடியும் கதை சொல்லலில் இருந்து விலகிவிட்டேனோ..நான் எப்போதும் இப்படிதான்.நேராக எதையும் சொல்ல வராது.பிடிக்காது.You are little crooked என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.அதில் நிறைய பேர் பெண்கள்.Crooked mind இருக்கலாம்.CROOKED PENIS இருப்பின் சிரமம்.டிங்கரிங் செய்து நிமிர்த்த முடியாது.கொனேரியாவில் சில சமயம் வரும்.
பாய்ண்டுக்கு வா என்கிறீர்களா..இலக்கியத்தில் இந்த மாதிரி சுற்றி சுற்றி  பேசுவதன் பெயர்தான் நனவோடை உத்தியாம்.லீலைதான் பின்னால் சொன்னாள்.ஜேம்ஸ் ஜாய்சின் உலிச்செஸ் அவள் சொன்னாள் என்று படித்து மண்டை வற்றினேன்.ஒரு எழவும் புரியவில்லை.யாரோ ஒரு ஐரிஸ் எழுத்தாளன் அவன் வீட்டில் ஆய் போவது மட்டுமே புரிந்தது.மற்றதெல்லாம் வார்த்தைக் காலரா.


சரி. பிந்துவுக்கு ...புள்ளிக்கு வருகிறேன்.வீட்டில் வெளியில் யாருமே இல்லை.வழக்கமாய் கட்டாயம் காக்கி டவுசருடன் ஒரு தோட்டக் காரன் இருப்பான் என எதிர் பார்த்தேன்.. ஒரு தோட்டம் வேறு இருந்தது.ஆனால் அப்படி யாரும் இல்லை.இல்லாவிடில்,ஒரு பெரிய கன்றுக்குட்டி அளவு நாய் ஒன்று எங்கிருந்தோ பாயப் போகிறது என்று எதிர் பார்த்தேன்.அதுவும் இல்லை.போர்டிகோவில் ஒரு டீப்பாய்.சுற்றி நான்கு மர நாற்காலிகள்.பத்திரிகைகள்.டைம்ஸ் ஆப் இந்தியா,Illustrated weekly.அதன் அட்டையில் THE SEX SWAMI!என்று கொட்டை எழுத்துகளோடு ரஜனீஸ்  படம்.ரீடர்ஸ் டைஜஸ்ட்.பெங்கால் தினசரி ஒன்று.இரண்டு தேநீர்க் கோப்பைகள்.சாம்பலக் கிண்ணத்தில் புகையும் சிகரட் துண்டங்கள்.ஒரு பிரம்பு ஊஞ்சல்.


நான் காலிங்  பெல்லைத் தேடினேன்.ஆனால் வீடு திறந்தே கிடந்தது.''சாப் ''என்று கத்தினேன்.பதில் இல்லை.முன் அறையிலும் யாரும் இல்லை.பெரிய சோபா செட்.உள்ளேயும் மேஜை நிறைய இன்னும் புத்தகங்கள்.அலமாரியில் ராட்சச பானசோனிக் டேப் ரிக்கார்டர்.நிறைய பாட்டில்கள்.ஹோமியோ மருந்தாக இருக்கவேண்டும்.சுவற்றில் ஒரு வெள்ளை காரரின் ஓவியம்.[ஹோமியோவின் தந்தை  ஹானிமன்]உள்ளே வலது பக்கம் திரும்பிய மேலும் அறைகளை மறைத்த திரைச் சீலை.
''மேம் சாப்?''என்று கத்தினேன்.
வீடு அப்படியே காலத்தில் உறைந்து விட்டது போல் இருந்தது.ஒரு ரிஷியின் தவத்தைக் கலைக்க வந்தா அசுரன் போல் உணர்ந்தேன்.
அரவமே இல்லை.என்ன ஆயிற்று.நான் பார்த்த திகில் படங்கள் எல்லாம் நினைவு வந்தது.அவற்றில் எல்லாம் இது போல் நிசப்தமான வீடுகளில் எல்லாம் ஏதோ குற்றம் நிகழ்ந்திருக்கிறது.
என் மனதில் ஒரு காட்சி கனவு போல் விரிந்தது.கதாநாயகன் ஒரு பெரிய வீட்டுக்குள் நுழைகிறான்.தனியாக.வீடு முழுதும் நிசப்தம்.திரைச் சீலை கூட அசையவில்லை.தூரத்தில் பறவைகளின் சத்தம் கூட இல்லை.ஏன் எனில் விலங்குகள்  அபாயத்தை மிக எளிதில் உணர்ந்துவிடுகின்றன.
நான் ஏன் அவ்விதம் சிந்தித்தேன் எனப் புரியவில்லை.நான் வழக்கமாய் பகல் கனவு காண்பவன் அல்ல. ஆனால் என் காட்டுவாசிமானம் முழுக்க மேலெழும்பி வந்திருந்ததை  உணர்ந்தேன்.உள்ளே காட்சி மேலும்  விரிந்தது.
லீலா தோமஸ் குளிக்கிறாள்.அல்லது குளித்துக் கொன்டிருந்தாள்.நிர்வாணமாக..அல்லது ஒற்றை வெள்ளை டவல் மட்டும்  சுற்றிக் கொண்டு..அப்போது பின்னாலிருந்து ஒரு மர்ம மனிதன் பெரிய கத்தியுடன் திரை மறைவிலிருந்து வெளிப் பட்டு ஓங்கி...வர..அவள் கடைசிக் கணத்தில் திரும்பி கண்கள் விரிய வீல் என்று அலறினாள்...
நான் கற்பனையை நிறுத்தினேன்.ச்சே..என்ன இது என்று நினைத்தேன்.இருதயம் முழுக்க என் காதுகளில் துடித்துக் கொண்டிருந்தது.வியர்த்திருந்தது.நான் சட்டென்று முடிவு செய்து திரைச் சீலையை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தேன்.நீரோடும் ஓசை கேட்டது.பாத்ரூம்தான்.அதன் கதவு லேசாக திறந்து உள்ளிருந்து தண்ணீர் அறைக்குள் வந்து கொண்டிருந்தது.அது சிவப்பாய் இருந்தது...

4 comments:

  1. எவ்ளோ கோர்வையா... பட்டுல இழை பின்றாப்புல... நெஜமாவே எக்ஸலண்ட்ங்க!

    ReplyDelete
  2. enjoyable pervasive humor.. சுவையான shock jock சிந்தனைக் கலவை.

    ReplyDelete
  3. 'பிந்து' இல்லாத உலகம் இன்னும் சில நூறு ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒரு உடல் உறைக்குள் புகுந்து வெளிவந்ததும் புணர்ச்சியின் அத்தனை பலனும் கிடைக்கும் நிலையில், தாமரையும் தண்டும் தேவையில்லாத நிலையில், காமங்களின் பாவங்களும் கூச்சங்களும் காணாமல் போய்விட்ட நிலையில்..

    ReplyDelete
  4. நான் அவ்விதம் கருதவில்லை.காமத்தின் பாவனைகள் மாறிக் கொண்டே இருக்குமே தவிர ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மதங்கள் அழித்துவிட முடியாத காமத்தை சில நூறு ஆண்டு அறிவியல் அழித்துவிட முடியாது .அழிக்க முனையாது என்றே நினைக்கிறேன்.ஏன் எனில் அறிவியலும் காமமும் ஒரே உணர்வை அடிப்படையாக கொண்டவை.The inquistive spirit ..இல்லையா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails