Thursday, July 22, 2010

பறப்பதே பறவை

என்னைக்
கவிதை செய்
என்றது பறவை.
எத்தனை முயன்றும்
அதன் சிறகுகளைக் குறிக்கும் 
சொற்கள் மட்டும்
காகிதத்தில் 
நிலையாது திரிந்தன.
சற்று நேரம்
பறக்காதிரு என்றேன்.
'பறவை 
என்பது பறப்பதே'
என்று சொல்லிப்
பறந்தது பறவை.

2 comments:

  1. இன்னும் நிறையப் பேசுங்கள் உங்கள் மனப் பறவையுடன்....

    ReplyDelete
  2. பறப்பதே பறவை
    என உணர்ந்ததால்
    சிறப்பதே கவிதை

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails