Thursday, July 8, 2010

நாய்க்கவிதை சுலபம் அல்ல

பூனைகள்
போல் அல்ல
நாய்களைப் பற்றி
கவிதை சொன்னால் 
சில
பிரச்சினைகள் உண்டு

அவற்றை
நாய்களிடம் சொன்னால்
தங்களைக் குறிக்கவில்லை
என்பதுபோல்  வாளாவிருக்கும்

மனிதரிடம் சொன்னால்
தங்களைத்தான் குறிக்கிறது
என
வருத்தம் வரும்

நாய்க் கவிதைகள்
சுலபம் அல்ல

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails