Monday, July 19, 2010

கேப்சூல் கவிதைகள் 3

1.கிழிந்த குடை .
ஆயினும்
நீ
நனைவாய் என்று
ஓடி வந்தேன்.
அதற்குள்
எவர் காரிலோ
போயிருந்தாய்..

2.நான்
ஒரு ரசவாதி.
உன்
புன்னகை
ஒன்று கொடுத்தால்
கவிதையாய் 
மாற்றித் தருகிறேன்.

3.தொடர்ச்சியாய்
தோற்றுக் கொண்டிருந்த
சாத்தான்
இறுதி நகர்த்தலாக
காமத்தை
கடவுளுக்கு எதிராய்
நிறுத்தினான்.
கடவுள்
தோற்க ஆரம்பித்தான்..

6 comments:

  1. சபாஷ் .மூன்றாவது சான்சே இல்லை

    ReplyDelete
  2. முதல் இரண்டையும் ரசித்தேன்.. மூன்றாவதில் பரவசம் அடைந்தேன்..

    ReplyDelete
  3. ம் நன்றாகவுள்ளது நண்பா.

    ReplyDelete
  4. புன்னகை
    ஒன்று கொடுத்தால்
    கவிதையாய்
    மாற்றித் தருகிறேன்.


    அருமையாகவுள்ளது

    ReplyDelete
  5. இரண்டாவதை ரசித்தேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails