Sunday, June 20, 2010

இருவர்

நான்
நித்யஸ்ரீ போல்
பாடுவதாய்
அக்கா சொல்வாள்
இரண்டு தடவை
சபாவில் பாடி
இரண்டு தடவையும் மழை
'எல்லா ராகமும்
அமிர்த வர்ஷினியா '
என்று கேலி செய்தார்கள்
ஆனால் திரும்ப திரும்ப
பாடச் சொல்லி மயங்குவார்கள்
மூன்றாவது கச்சேரி பண்ணுவதற்குள்
கல்யாணம் பண்ணிவிட்டார்கள்
கல்யாணத்தின் பின்
அவரது
அலுவலக விருந்தில்
பாடச்  சொல்லி
'கிருஷ்ணா நீ பேகனே'பாட
 எல்லோரும் சிரித்தார்கள்
அன்று  ராத்திரி
எல்லாம் முடிந்ததும்
'உனக்குப்
பாடத் தெரியாதுன்னு
சொல்லியிருக்கலாமே"என்றார்
அவர் பாத்ரூம்
போனபிறகு அழுதேன்

3 comments:

  1. முழு பௌர்ணமியாகாத பெண்மை இன்னும் இருக்காத்தான் செய்கின்றன..!!

    ReplyDelete
  2. Hmmm.,
    ovvorutharukkum ovvoru feeling

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails