Friday, June 18, 2010

களவு காதல் கற்பு 5

உன்னையே
 நேசிக்கிறேன்
உன்னையே
வெறுக்கிறேன்
உன்னையே
உண்கிறேன்
உன்னையே
குடிக்கிறேன்
உன்னையே
யோசிக்கிறேன்
உலகெங்கும்
உன்னைத் தேடி
அலைகிறேன்
யுகக் கணக்கில்
அசையாது உனக்காய்
காத்திருக்கிறேன்
ஆனால்
நீ
வந்துபோன பின்பும்
மனக் கோப்பை
நிரம்பாது நிரம்பாது
மீண்டும் மீண்டும்
இதையே
செய்கிறேன்
ஒருவேளை
நீ
இன்னொருவள் உண்டோ?

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails