Sunday, June 13, 2010

ஆரம்பத்தில் ....

ஆரம்பத்தில்
எல்லாமே
தெளிவாக இருந்தது.
சிங்களவன்
தமிழனை
அடித்தான்.
தமிழன்
திருப்பி
அடித்தான்.
பின்னர்
தமிழனே
தமிழனை
அடித்தான்.
நடுவே
பஞ்சாயத்து பேச வந்த
இந்தியனும் தமிழனை
அடித்தான்.
உடனே
தமிழனும் இந்தியனை
அடித்தான்.
பிறகு
முஸ்லிமும்
தமிழனை
அடிப்பதாக சொல்லி
முஸ்லிமை
தமிழன் அடித்தான்.
இடையில்
பாகிஸ்தான் காரனும்
சீனா காரனும்
யூதனும்
வேறு வந்தார்கள்.
பின்னர் வேறு ஒரு இடத்தில்
முஸ்லிமை அமெரிக்கன் அடிக்க
அமெரிக்கனை முஸ்லிம்
அடிக்க
கயோஸ் விளைவு
பற்றியெல்லாம் அறியாத
தமிழன்
மறுபடி அடித்து
மறுபடி
அடித்துக் கொண்டு
கூட்டமாய் மடிந்து போனான்.
இந்த
குழப்பம்
எதுவும் விளங்காத
இந்தியத் தமிழன்
மானாட மயிலாட
போய்விட்டான்.
ஆனால்
இப்போது யோசிக்கையில்
தோன்றுகிறது...
ஆரம்பத்தில்
எல்லாம் தெளிவாக
இருந்தது போல் தோன்றியதே....

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails