Wednesday, June 30, 2010

இன்று இன்னுமொரு நாளே

முனைகள் தெளிவற்ற
மாலைக் கதிரோடு
தெருவில் இறங்கி நடந்தேன்
இன்றோடு என் வயது
இன்னுமொன்று முடிகிறது
வருடங்களுக்கிடையில்
வித்தியாசம் ஒன்றுமில்லை

பணியிடத்தில்
களைப்பே இல்லாது
கண்சிமிட்டும் கணினிகளைப்
பார்த்து பொறாமை அடைகிறேன்
நேற்று முடிக்க வேண்டிய வேலைகள்
மோவாயில் கை ஏந்தி
எதிர் நாற்காலிகளில் அமர்ந்திருக்க

மூலையில் மடித்து
தொடரக் காத்திருக்கும் புத்தகங்கள்
ஏராளமாய் நிறைந்த அலமாரிகளில்
எட்டுக் கால் பூச்சிகள்
அயராது
எதையோ  தேடுகின்றன ..
பஸ் பிடித்து
வீடு வந்து
உணவு உண்டு
நான் பாதியில் விட்ட
முப்பதாவது சிறுகதையின்
அடுத்த வரி முயற்சிப்பதற்குள்
தூக்கம் மூட
படுக்கையில் வீழ்கையில்
மங்கலாய்த் தோன்றிற்று
நேற்றும்
இதுதானே நிகழ்ந்தது ?

எதுவும் படிக்காமல்
எதுவும் எழுதாமல்
எதற்கும் சிரிக்காமல்
எதற்கும் நெகிழ்ந்து அழாமல்
எவரையும் நேசிக்காமல்
எவரோடும் முரணாமல்

மற்றுமொரு
நகல்நாளாகவே இன்றும் போயிற்று

3 comments:

  1. கண்டதையே கண்டு
    உண்டதையே உண்டு
    பேசியதையே பேசி.......

    ReplyDelete
  2. அருமை. என்னை போல் ஒருவன். ;-)

    ReplyDelete
  3. அருமை.....

    தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails