Tuesday, June 22, 2010

வானவில் நாட்கள்

பச்சையம்
பூசிய நாட்கள் அவை
மனக் குளத்தில் இன்னும்
யாரும் கல் எறிந்திரா
நாட்கள்
வேலியோரமும்
உள்ளும்
பூக்கள் பூத்த நாட்கள்
மழை வாசனையோடு
கனவு நுரைத்த நாட்கள்
சோகமின்றி
இமை விளிம்பில் நீர்
துளிர்த்து நின்ற நாட்கள்
வானமெங்கும் மேகம்
தொங்கின நாட்கள்
கிராமத்து இருட்டைக்
கிழிக்க மனதில்லாது
மஞ்சள் பல்புகள்
உறங்கிய நாட்கள்
சுவர்க் கோழிகளின்
கச்சேரியுடன் விடியும்வரை
புத்தகங்கள் சுவாசித்த நாட்கள்
புகை பிடிக்காத நாட்கள்
உயிர் தின்னாத நாட்கள்
இனி எப்போதும்
திரும்பி வரவே போகாத
அந்த நாட்கள்...

1 comment:

  1. பச்சையம்
    பூசிய நாட்கள் அவை
    மனக் குளத்தில் இன்னும்
    யாரும் கல் எறிந்திரா
    நாட்கள்
    vaalththukkal tholare

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails