Monday, August 30, 2010

அப்பாவின் வீடு அல்ல

நேற்றைய இரவு
எப்படியோகடந்துவிட்டிருந்தது.
அப்பாவின் நடைத் தோழர்
காதில் மப்ளருடன்
தனியாக மூச்சிரைக்க
திரும்பிக் கொண்டிருந்தார்.
தினமணி
அச்சுமணத்துடன் பிரிக்காமல்
பனியில் நனைந்திருந்தது.
வாழ்நாளில் முதன்முறையாக
எடுக்கப் படாத
அப்பாவின் படுக்கையை பார்த்தேன்.
அப்பாவின் டூத் பிரஷ்
ஷேவிங் ப்ளேட் இரண்டும்
முறையாக மூடிக் கொண்டு காத்திருந்தன.
குளியறையில்
அவர் குளிக்கும்
சிந்தால் சோப்பின் மணம்
இன்று மூச்சை நிறைக்கவில்லை.
முதல் டிகாஷன் காப்பியை
இன்று நான்தான் குடித்தேன்.
பூஜைக்குப் பறிக்கப் படாமல்
செம்பருத்திகள்
சிகப்பு ஆச்சர்யமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.
தொலைகாட்சி செய்திகளில்
அப்பாவின் டிராவிட்
சதம் அடித்திருந்தான்
அதைப் பார்க்காமலே அவசரமாய்
அப்பா நேற்று இறந்திருந்தார்.
திடீரென்று நினைத்து
காதில் அப்பாவின்  மப்ளருடன்
நடைக்காக கிளம்பியபோது
தோன்றியது.
இனி ஒருபோதும்
அது அப்பாவின் வீடு அல்ல.
அது
அப்பா இருந்த வீடு .
அவ்வளவே.

2 comments:

  1. athai kavithaiya illa kaviyama endru solla theriavillai .... but i like this very much thanks for the dad sentiment :-)

    ReplyDelete
  2. HellBoy:
    Unmaiyan varikal...(valikalutan)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails