Wednesday, August 11, 2010

ஓசையற்ற குரல்கள்

நெருங்கிவிட்டது
பூமாலைகளும்
தோரணங்களும்.
சடங்குகளுக்கும்
சம்பிரதாயங்களுக்குமான
நேரம்.

உறையாத
புன்னகைகளும்
அலுப்பான போஸ்களும்
ஆசிகளும்
பரிசுகளும்
நீளமான நன்றிகளும்
பந்திச் சச்சரவுகளும்
உறவுக் கூச்சல்களுமென
நினைக்கும்போதே
சலிப்பு  தட்டிற்று.

கனவுகளே இல்லாது
கடந்து போகவேண்டிய
இன்னொருநாள் .
முடிக்கவேண்டிய
இன்னொரு வேலை
என்பதாய்..
யாரோ ஒருத்திக்கு
யாரோ ஒருவனோடு
திருமணம் என்பதாய்
இருந்தேன்.


இந்த
இறுதி நிமிடத்திலாவது
என்
இதயம் அறிவானா
என்ற ஆசையில்
அவனை
அலைபேசியில்
குரல்நடுங்க அழைத்து
என் காதலின்
கடைசிச் சொல்லாக
எனக்கு திருமணம் என்றேன்.
அவன்
அனிச்சையாய்
வாழ்த்துக்கள்
என்றான்.

2 comments:

LinkWithin

Related Posts with Thumbnails