Tuesday, October 4, 2011

துணை

இருள்மூடிக் கிடக்கிறது
அவள் முகம்
உதிரம் கசியத்
தோண்டித் தோண்டி
வெளியே வீசுகிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
அவள் வெளியேறுகிறாள்
நினைவின் கல்லறையிலிருந்து
மீண்டவள்
ஓவென்று அலறி
என் கழுத்து நரம்பைத் தேடி வந்தாள்
நிணம் உருகும்
கைகளால் என்னை இழுத்து
அணைத்துக் கொள்கிறாள்
வேள்வியில் ஆகுதிஎன ஆகிறது என் உயிர்
கோர்த்துக் கொண்ட
அவள் குளிர் விரல்களில்
என் வெப்பம் ஏறுகிறது
இன்னும் கொஞ்ச நேரம் தான்
என்று தேற்றுகிறாள் என்னை
அதன்பிறகு இருவருமே அமரர்கள்
என்றதை நான் நம்ப மிக விரும்புகிறேன்
மூங்கில் படலின்
வெளியே நிற்கிறது
கோச்சுவண்டி
கால் மாற்றி கால் மாற்றி
நிற்கும் குதிரை கனைக்கிறது

இருள் சூழ்ந்த இரவில்
வானத்தில்
ஒரு ஒளித்திரள் போவதை
நீங்கள் கண்டால்
அது நாங்களாகவே இருக்கலாம்

3 comments:

  1. வாவ்!! இது நீங்களாக மட்டும் தான் இருக்க முடியும் குருவே!! :-))

    ReplyDelete
  2. தினம் வானத்தை தான் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப மேக மூட்டமா இருக்கு...ஒரு சவுண்ட் குடுங்களேன்:))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails