Thursday, January 13, 2011

கத்தி

ஒரு பாத்திரத்தில்
மழைநீர் நிறைவது போல்
கொஞ்சம் கொஞ்சமாக
சத்தங்கள்
மூளையில்
நிரம்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துப்
பதற்றம் கொள்கிறேன்
கவனம் கொள்ளாவிடில்
முன்பு போல்
அது கனம் கூடி
பிறர் மேல் வெடிக்கும் அபாயம்
உண்டென அறிந்து
தியானம் செய்தோ
கவிதை எழுதியோ
காட்டுக்குள் நுழைந்தோ
அனுமதியின்றி உள்ளே நிரம்பியதைக் 
கவிழ்க்க முயற்சிக்கிறேன்
கவிழ்க்க கவிழ்க்க
புதிய சத்தங்கள்
பூரான்கள் போல்
ஆயிரம் கால்களுடன்
பெருகி வருவதை
அச்சத்துடன் அறிந்து நடுங்குகிறேன்
களிப்புடன்
என்னைச் சுற்றி விளையாடும் பிள்ளைகள்,
கவிதைப் புத்தகம்
படிக்கும் மனைவி,
கணினியில் கதைக்க வரும் தோழி
என்று எல்லார்  உலகத்தையும்
நொடியில் சிதைத்தழிக்கும்
உதிரக் குறி கொண்ட 
கத்தி ஒன்று
மெல்ல மெல்ல
என் மூளையில்
கூர் தீட்டப் படுவதை
இந்த முறையும்
என்னால் தடுக்கமுடியவில்லை தோழர்களே...
மன்னியுங்கள்...

4 comments:

  1. குழி தோண்டி மண்ணுக்கு மேல் வரும் எண்ணத்தை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்க>.

    ReplyDelete
  2. படத்தைப் பாத்ததும் ஒரு kitchen product ஐடியா தோணிச்சு.
    கணவன் மனைவி பக்கத்து வீட்டு மாமி என்று நமக்கு பிடிச்ச அல்லது பிடிக்காதவங்க முகத்தையே தலையா செஞ்சு அங்கங்கே கத்தி செருகி வைக்க வசதியா customized knife stand.

    ReplyDelete
  3. அப்பாத்துரை சார் ஏற்கனவே உங்க எழுத்தை பாசிஸ்ட் எழுத்துன்னு [என்னையும்தான்]சொல்றாங்க...இந்த கமெண்டைப் படிச்சா கன்பார்ம் பண்ணி லேபில் ஒட்டிடுவாங்க!))

    ReplyDelete
  4. அதுக்காக தொழிலை விட்டுற முடியுமா சொல்லுங்க?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails