Sunday, January 2, 2011

உடல் தத்துவம் 16

''பெண்களை நாம் அவர்களது உடல்களாகவே பார்க்கப் பழகிவிட்டோம்''என்றார் டாக்டர்.''ஏனெனில் அதுதான் நமக்கு வசதியாக இருக்கிறது.இல்லையா''

நான் பேசவில்லை.அவர் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவர் அதை அவர் படித்தப் புத்தகங்களில் இருந்தே சொல்கிறார் எனப் புரிந்தது.

''அவ்வாறு ஆண்கள் பார்ப்பதைத் தடுப்பதற்கு மாத்திரை ஏதாவது கண்டுபிடிக்கப் படவில்லையா டாக்டர்''என்றதில் இருந்த கேலியை அவர் தவறவிட்டுவிட்டார் எனப் புரிந்து''டாக்டர் எப்போதாவாது  நீங்கள் கொலை செய்திருக்கிறீர்களா'''என்றதில் அவர் சற்று திடுக்கிட்டு ''நாம் தினமும் யாரைவாது கொலை செய்துகொண்டுதான் இருக்கிறோம்''

''இந்தக் கவித்துவ எழவெல்லாம் வேண்டாம் டாக்டர்.நான் சொல்வது நிஜக் கொலை.கிடக்கட்டும்.உங்களை யாராவது கொலை செய்யும் நோக்கத்துடன் கையில் கத்தியுடன் துரத்தி வந்திருக்கிறார்களா...''என்றேன்.''தாராவியில் காவிக் கட்சிக் காரன்  பத்துபேர் ஒரு கும்பலாக என்னை அதன் பீச்சந்துகள் முழுக்க துரத்தித் துரத்தி ஒரு நாள் முழுதும் சூரிக்  கத்தியுடன் அலைந்திருக்கிறான்கள்.அந்த நாள் முழுக்க புழுக்கள் நெளியும் மலக் கிடங்கில் ஒளிந்திருந்து தப்பித்தேன் டாக்டர்.மலம் என்றதும் உங்கள் முகம் கோனுகிறது டாக்டர்.உங்கள் வீட்டு கக்கூஸ் கூட யூடிகொலான் அடித்து சுகந்தமாய் இருக்கிறது.ஆனால் உலகின் மிகப் பெரிய சேரியான தாராவியில் நுழையும் முன்பே உங்களுக்கு மலம் நொதிக்கும் நாற்றம் தான் வரும்.அந்த சேரிக்குள்  ஐந்து வருஷம் வாழ்ந்திருக்கிறேன்.பத்து ரூபாய்க்காகவும் ஒரு குடிசை போடும் அளவுள்ள துண்டு நிலத்துக்காகவும் உங்கள் நண்பனே உங்களை எப்போது வேண்டுமானாலும் ஒரு துருப் பிடித்த பிளேடினால் கழுத்தை அறுத்து கொன்றுவிடக் கூடிய சூழலில் எந்நேரமும் முழுதாய்த் தூங்காது பதற்றத்துடன் கஞ்சாவோ சரக்கோ அடித்தால்தான் தூங்கமுடியும் என்ற நிலைமையில் 24 மணிநேரமும் அலைந்திருக்கிறேன்.அங்கே கக்கூஸ் எல்லாம் தனியாகக் கிடயாது சாரே.அந்த இடத்தில் ஒரு குடும்பமே  வசிக்க முடியும் என்பதால் கக்கூசே வீடு தெருவே கக்கூஸ்...அள்ளி முடியாது என்று சொல்லி எந்தப் பீ வண்டியும் வராது.அப்படிப் பட்ட ஒரு மலக் கிடங்கு பக்கத்தில் ஒரு சாக்கு வீட்டில் ஒருநாள் முழுக்க உங்களை அடைத்துவைத்து உங்களுக்கு அபிராமி அந்தாதி சொல்ல வருகிறதா என்று பார்க்க சில சமயம் ஆசை வருகிறது.அசட்டுப் பிசட்டென்று நீங்கள் உதிர்க்கும் தத்துவ முத்துக்களைக் கேட்கும்போது சிலசமயம்..''

டாக்டர் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க ''பத்து பைசா பொரைக்கு கன்னித் தன்மையை இழக்கத் தயாராக  இருக்கிற சிறுமிகளைத் தெரியுமா டாக்டர்''என்றேன்.அவர் முகம் முற்றிலும் வெளுத்துவிட்டது.ரொம்பப் போய்விட்டோமோ என்று உணர்ந்து சற்று தாழ்ந்து நான் முதன் முதலாய் ஒரு வேசியிடம் போன கதையைச் சொன்னேன்.

மால் கடத்தும் லைனுக்கு வந்தும் சில வருடங்கள் நாஞ்சில் பிள்ளைவாளாகவே சில விசயங்களில் இருந்தேன்.ஒருநாள் உடன் இருந்த தோழன்தான் என்னிடம் சில தொழிலுக்குதவாத சில கொள்கைகள் இருப்பதைக் கண்டுபிடித்து சோனா கஞ்சிற்குக் கூட்டிப் போனான்.''இங்க பாரு பாபு இந்தத் தொழில்ல இருக்கவே இருக்கக் கூடாதது இரக்கம்.ஒரு  நொடி யோசிக்காம அடுத்தவன் கழுத்தை அறுக்க முடியனும்.இல்லேன்னா அவன் உன் கழுத்தை அறுத்துடுவான்.''
''அது சரி  அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்''
''சம்பந்தம் உண்டுடே.இதுவும் ஒரு வகைல கொலை போலதான் வா தெரியும்''
சமீபத்தில்தான் ஒரு பெரிய டீலை நாங்கள் இருவரும் வெற்றிகரமாக முடித்திருந்தோம்.கமிசனாகக் கிடைத்தப் பச்சைக் காகிதங்கள் அவன் மூளையை அரிக்கத் தொடங்கிவிட்டது என அறிந்தேன்.''யாருக்குடி தெரியும் நாளைக்கே நான் செத்துப் போகலாம்''என்றான்.அவன் சொன்னது போல் மறுநாள்  செத்துப் போகவில்லை ஆனால் அடுத்த மாதமே பம்பாயில் நடந்த ஹிந்து முஸ்லிம் கலவரம் ஒன்றில் சிக்கி இறந்துபோனான் உண்மையில் அன்வர் இறந்து போனதற்காய் நான் பெரிதாக வருத்தப் படவில்லை.அவனது பிஸ்னெஸ் எல்லாம் எனக்கு வந்தது ஒரு காரணம்.

பம்பாயின் காமத்திபுரத்தைவிட சோனாகச்சி  ரொம்ப மோசமாக இருந்தது.காமத்திபுராவை பூசாரி போன்றவர்கள் வந்து சற்றேனும் சில அடிப்படைவசதிகளைச் செய்திருந்தார்கள்.இங்கு எந்தப் பூசாரியும் வரவில்லை.ஷோபா பஜாரில் ஒரு குஜராத்தியிடம் பேசிவிட்டுக் கிளம்பியபோது கச்சி போறேன் என்றபோது ''அரே யார் கலீஜ்.பொம்பிள வேணும்னா சொல்லு  நான் போன் நம்பர் தரேன்.டீசண்டா இருக்கும்.இங்க எல்லாம் சாக்கடை என்றதை அன்வர்  மறுத்து சுகத்துக்குப் போகலே சேட்டு.எடுகேசன் என்று சிரித்தான்.

நாங்கள் போன சமயம் இரவு விழும் நேரம் ஒரு பெரிய மிருகம்போல கச்சி விழித்து ஒரு பெரிய ஜனத் தொகையே தெருக்களில் நகர்ந்து கொண்டிருக்க முட்டுச் சந்துக்கள் எங்கும் கை ரிக்ஷாக்கள் அடைத்துக் கொண்டிருக்க தெரு முழுக்க ஹிந்தித் திரைப் படப்பாடல்களும் பெங்காலி நாட்டுப் புறப பாடல்களும் வழிந்து கொண்டிருந்தன.ஒருவர் பேசுவதை அடுத்தவர் கேட்பதே சிரமமாக இருந்தது.பாண் கடைகளின் வாசலெல்லாம் பத்து வயது முதல் அத்தனை பருவத்திலும் பெண்கள்.கண்கள் மட்டுமே உயிராய் மீதி எல்லாம் ரூஜும் பாண் சிகப்பும் பஞ்சும் அடைத்த சோகை யான தக்கைப் பெண்களிலிருந்து எல்லா துவாரகளிலும் சதை பிதுங்கி வழியும் சதுக்கப் பூதங்கள் வரை.''அன்வர் சைக்கிள் ரிக்சாவின் பின்னாலிருந்து ''முன்னால் அடைத்துக் கொண்டிருந்தவனை ஜாவ் ஜாவ் என்று அதட்டிக் கொண்டிருக்க ''என்ன அவசரம் ''என்றேன்.அன்வர் இருக்கையில்  உல்லாசமாக  சாய்ந்து கொண்டு பானை பளீரென்று தரையில் சிவப்பு அருவி போல் துப்ப பின்னால் ஸ்கூட்டர் செலுத்தி வந்தவன் ''அரே சைத்தான் என்று கத்த சிரித்தான்.''ஆமா என்ன அவசரம்..எங்கே ஓடிவிடப் போறாளுங்க தேவடியாளுங்க...''என்றான்.பக்கத்திலிருந்த கட்டிடத்து வாசலில் நின்ற பெண் ஆசுன் ஆசுன் என்று வருந்தி அழைத்துக் கொண்டிருக்க ''போடி பப்ளிமாஸ்'' என்றான்.ரிக்சா  வாலா பீடியை கடித்துக் கொண்டே திரும்பி 'அமி கொத்தா ஜாய்?'என ''லக்ஷ்மிபாய்'' என்று கத்தினான் அன்வர்.அவள் சற்றுத் தரமான கை என்று சொன்னான்.பிறகு என்னிடம் திரும்பி ''உனக்கு தமிழ்த் தேவடியாதானே வேணும் இல்லே? .

நான் பதில் யோசிப்பதற்குள் ரிக்சா நின்றுவிட்டது.மிகப் பழுப்பான மூன்று மாடிக் கட்டிடம் அது.முன்பு இருந்த பாண் கடையில் பெரிய கூட்டம் நின்றிருக்க யாரோ அன்வரைக் கண்டுகொண்டு ''அரே தேகோ ஹமாரா பாய் ஆகி'''என்று கத்தினார்கள்.குல்லா அணிந்த ஒருவன் தாண்டிவந்து ''சலாம் பாய் ''என்றான்.அன்வர் சிரித்து ''ராநிபாய் இருக்காளா '''
''இருக்கா பாய்.புதிசா ஒரு சின்னப் பொண்ணு நேபால்லிருந்து வந்திருக்கு ஒப்பனே ஆவலை இன்னும் புக் பண்ணிடுவோமா .''
''அரே நேபாளில்லாம் வேணாம் தமிழ் தமிழ் இருக்கா நம்ம தோஸ்த்துக்கு.எடுகேசன்!''என்று காவிப் பல் தெரிய சிரித்தான்.
அவன் மோவாயைத் தடவி பின்னால் திரும்பி ''அரேமோகன்தாஸ் ''என்று நீண்டபெங்காலியில் கத்த மோகன்தாஸ் நெற்றி நிறைய மேல்நோக்கித் தீற்றிய குங்குமத்துடன் ஆடு வெட்டுபவன்போல் வந்து ''ஆசுன்'என்றான்.அன்வர் வரவில்லை என்றுவிட்டான்.'இன்னிக்கு வெள்ளிக் கிழமை பாபு'

மோகன்தாசுக்கு கொஞ்சம் தெலுங்கு பேசவரும் என்று பின்னால் தெரிந்தது.ஆனால் அவன் தனக்குத் தமிழும் பேசவரும் என்று நினைத்துக் கொண்டு பேசியது தமிழ் அல்ல என்று சொல்ல விரும்பாமல் அவன் பின்னாலேயே பாம்பு போல் நெளிந்து நெளிந்து ஏறினேன்.வழியெங்கும் தீப்பெட்டி போல் அறைகளில் விதம் விதமான பெண்கள் ரகம் ரகமான ஆண்களுடன் இருக்க சில அறைகளில் குடும்பங்கள் கூட இருந்தன.ஒரு அறையில் காளி படத்துக்கு முன் சிறு பெண்கள் அமர்ந்து பஜனை பாடிக் கொண்டிருக்க ''நவராத்திரி வருது பாபு''என்றான் விளக்கமாக.ஒரு அறையில் நீலக் குழல்விளக்கின் அடியில் படுக்கைமீது ஒரு வெள்ளைக் காரன் முழு நிர்வாணமாக நின்று கொண்டு ஒரு சிறுமியை அவன் இடுப்பு நோக்கி அழுத்திக் கொண்டிருக்க மோகன்தாஸ் சட்டென்று உள்புகுந்து பெண்ணை கன்னத்தில் அடித்தான்.''கதவை அடச்சுக்க மாட்டியா ப்ரீ ஷோவா காட்டறே .தெரியுமா .இது ராணிபாய் இடம்.''' அவள் வெள்ளைக்காரன்தான் சாத்த  மாட்டேங்கிறான் என்பது போல் சொல்ல வெள்ளைக் காரனிடம் சண்டைக்குப் போனான் அவன்..அவன் ஆங்கிலத்தில் ''claustrophobic  யூ ஸீ''என்று ஏதோ சொல்ல'' டீசண்டா  நடந்துக்க சாஹேப்'' என்று சொல்லிவிட்டு மேலும் என்கூட நடந்தான்.''ரொம்ப மோசமானவங்க இந்த வெள்ளைக் காரப் பயலுவதான்''என்றான்.''அவனுகளுக்கு எல்லாம் சின்னப் பொண்ணுங்கதான் வேணும்.வயசுக்கு வரலேனா இன்னும் ரொம்ப அலைவானுங்க.பொறக்கறதுக்க முன்னாலேயே  பொம்பளப் புள்ளைங்கள புக் பண்ண ரெடியா திரியறானுங்க  ''என்றவன் திரும்பி ''உங்களுக்கு எப்படி.அவுக்காத மொட்டு தான்   வேணுமா'''நான் இதற்குள் நிலை தடுமாறி காய்ச்சல்காரன் போல் ஆகியிருக்கப் பதில் சொல்வதற்குள் பழனி முருகன் படம் போட்ட ஒரு அறை முன்பு நின்று கதவு தட்டி ''கோலோ'''என்றான்

திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக்  கொண்ட தமிழ் என்கிற தமிழ்ச் செல்விக்கு இருபதிலிருந்து எந்த வயதும் இருக்கக் கூடும்.பனியனும் மிடியுமாய் இருந்தாள்.தமிழ் என்றதும் ''இந்த டிரஸ் போதுமா பாவாடை தாவணி மாத்திக் கொள்ளணுமா''என்றது எனக்குப் புரியவில்லை.''இல்லே முந்தி வந்த தமிழ் ஆசாமிக்கு நான் பாவாடை போடாவிட்டால் சாமானே எழும்பாது..அவன் கிழித்த பாவாடைகள் மட்டும் மூன்றிருக்கிறது.இன்னுமொரு தமிழனுக்கு நான் குளித்துக் கொண்டிருக்கையில்தான் செய்யவேண்டும்.எனக்கு சைனஸ் பிரச்சினை உண்டு.அவன் வரும்போதெல்லாம் குளித்துக் குளித்து எப்படியும் டாக்டரிடம் போக வைத்துவிடுவான் என்று சிரித்தாள்.''என்னைக் குளிக்கச்  சொல்வானே தவிர அந்த நாய் குளிக்கவே மாட்டான்.குஞ்சையும் கழுவ மாட்டான்.''என்று சிரித்தவள் நிறுத்தி ''உனக்கு அது மாதிரி ஆசை இருந்தா சொல்லிவிடு.பாவாடைக்குத் தனிக் காசு .குளிக்க பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை.''
'நான் ''இல்லை'' என்றேன்.'

உடையைக் கழற்ற ஆரம்பித்தவள் நான் அப்படியே அமர்ந்திருப்பது பார்த்து என்னை உற்றுப் பார்த்து ''நீ புதுசா'''எனறாள்.பிறகு பெரு மூச்சுடன் '''ஹவ் ச்வீட் எனறாள் சுத்தமான ஆங்கிலத்தில்.
 எல்லாம் முடித்த பின்பு சிகரட் வைத்திருக்கிறாயா என்று கேட்டு வாங்கிப் புகைத்தாள்.
'என்னுடைய பிரான்ட் பார்த்துவிட்டு ''சார்மினார் ரொம்பக் காரம் ஆச்சே. ஆனால் நீ ரொம்பப் பால்ப் பையன் போல் அல்லவா இருக்கிறாய்''

''எந்த ஊர்'''
''நாகர்கோயில்''
''அங்க எனக்கொரு அத்தை இருந்தா.நீ திண்டுக்கல் போய்  இருக்கிறாயா''
''இல்லை பக்கத்தில் கொடைக்கானல் போய்  இருக்கிறேன்''
அவள் கண்கள் ஒளிர்ந்து ''கொடைக்கானல்!ஒவ்வொரு சம்மரும் டூர் போவோம்.ஒவ்வொரு டூரிலும் எனக்கும் என் தங்கைக்கும்  சண்டை வந்துவிடும''
என்றவள் .'உனைப் பார்த்ததால் என்னுடன் காண்வென்டில்  படித்த் ஒரு பையன் நினைவு வருகிறது.பெயர் அஜித்தோ என்னவோ..என் பின்னால் சுற்றிச் சுற்றி வந்தான்.செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன்''என்று சிரித்தாள்.''எங்கே இருக்கிறானோ''
சற்றுநேரம் சீலிங்கை நோக்கிப் புகைவிட்டுக் கொண்டே இருந்தாள்.
''பாட்டு கேட்போமா'''என்று அங்கிருந்த டெல்லி  மேக் டேப் ரிகார்டரில் ஒரு கேசட்டைச் சொருக  .அது பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள உள்ளம் துள்ளும் என்று பாட ஆரம்பித்தது.
''இளையராஜா .பிடிக்குமா ''
''ரொம்ப''
''அவரால்தான் நான் இங்கு வந்தேன்''
நான் புகைப்பதை நிறுத்தி ''இளையராஜாவாலா ?''
''அவர் பாட்டுக்களைப் வண்டியில் போட்டு போட்டுத்தான் அவன் என்னை மயக்கினான்''
''ட்ரைவர் ?"'
''ம்ம்'என்றவள் தாடை இறுகியது.'
சட்டென்று எழுந்து உட்கார்ந்து ''என் தங்கை என்னை விட அழகு தெரியுமா உனக்கு'அதன் பொருட்டு சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் சண்டை வருவதுண்டு 'என்றவள் 'குனிந்து தன் வயிற்றைப் பார்த்தாள்..''மூன்று அபார்ஷன் ஆகிவிட்டது.அதற்குள்.அடுத்த அபர்சனுக்கு நீ இருக்க மாட்டாய் என்கிறாள் டாக்டர்.''
மறுபடி படுத்துக் கொண்டு ''வீட்டில் ஏசி இல்லாமல் தூக்கமே வராது எனக்கு.ஆனால் இங்கு தனியாக அழக கூட இடமில்லை.மாத நாட்களில் துணி சொருகுவதைக் கூட யாராவது பார்த்துக் கொண்டிருக்கிறான்.இப்போது பராவாயில்லை வெயில் காலங்களில் நரகம்.மேலெல்லாம் வந்து போனவனின் நாற்றம்.யோனியில் வாயில் புத்தியில் ..''அவள் சட்டென்று நிறுத்தி ''அட...நான் ஏன் இதெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன் உன்னிடம்?நீ இன்னுமொரு மலம சாப்பிட வந்த பன்றி''என்றாள்.அந்தக் கணம் அவள் முகம் அச்சம் தருவதாய் இருந்தது..


பிறகு மெல்ல இளகி ''ஏனோ உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு வேளை பள்ளியில் என்பின்னால் அலைந்த பையன் போல் நீ இருப்பதால் இருக்கலாம்.அல்லது  உன் குஞ்சை நீ கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கிறாய் அது காரணமாக இருக்கலாம்''எனறாள் சிரித்து .

பிறகு நெருங்கி '''எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இருக்கிறது இந்த வாழ்வில்.அது ஒன்றுதான் என்னைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.என்றைக்காவது அவனை அந்த ட்ரைவரை நேரில் சந்திக்கநேர்ந்து அவன் கொட்டைகளை இந்தக் கொரடால்அப்படியே வேரோடு பிடுங்கிவிடவேண்டும'.நடக்குமா?என்றாள். '

9 comments:

  1. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் கதைகள்...

    ReplyDelete
  2. முதல் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன் சிறு மாற்றத்துடன். ஓராயிரம் சோகக் கதைகள்.

    ReplyDelete
  3. ப்ளாக் வாசகர்கள் படித்துவிட்டு என்னென்னெல்லாம் செண்டிமென்ட் மழை பொழியப் போகிறார்களோ என்று நினைத்துப் பார்ர்க்கிறேன்...சிரிப்புசிரிப்பாய் வருகிறது. நான் உங்கள் ரெகுலர் ரீடர் போகன்... உங்கள் ப்ளாக்குக்கும் அப்பாத்துரை ப்ளாக்குக்கும்....

    என்ன ஒன்று நான் அடிப்படையிலேயே வாழைப்பழச் சோம்பேறி. பின்னூட்டம் இடவும் அதே! உங்கள் எழுத்தில் இருக்கும் கச்சாத்தன்மை என்னை மிகவும் ஈர்க்கின்றது

    ReplyDelete
  4. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு feeling... அதானேப்பா...

    ReplyDelete
  5. ம்ஹீம். . . சீக்கிரம் அடுத்த பாகத்த எழுதுங்கன்றத தவிர வேற என்ன சொல்றது!

    ReplyDelete
  6. மிக அருமையாக எழுதுகிறீர்கள். தினமும் நான்சென்று பார்க்கும்வெகுசில தளங்களில் உங்களுடையதுவும் ஒன்று. பாலியல் தளத்தில் எழுதுவதில் மற்ற எந்தபிரபல எழுத்தாளர்களிவிடவும் சிறந்து விளங்குகிறீர்கள்

    ReplyDelete
  7. உங்கள் பதிவுகள் பல வாசித்துவிட்டேன். வாய்பிழந்து ஆச்சர்யத்தில் இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் வேகம் மனிதர்களின் மனவிகாரங்களப் பார்த்து கைகொட்டச் சிரிப்பது போலிருக்கிறது. பலரும் கைவைக்கத் தயங்கும் ஆடைகளை எல்லாம் கண்மூடித்திறக்கும் நேரத்தில் உரிந்து காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நீ இன்னுமொரு மலம சாப்பிட வந்த பன்றி''என்றாள்.அந்தக் கணம் அவள் முகம் அச்சம் தருவதாய் இருந்தது..
    ///

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails