Monday, May 24, 2010

சுதந்திரம்

பாதுகாப்பு கருதி
கதவைப்
பூட்டியிருந்தேன்
உள்ளிருந்த தேவதை
மூச்சு முட்டுகிறது
கதவைத் திறந்தால் என்ன என்றது
கதவு திறந்தேன்
சற்று காற்று வாங்கி வரட்டுமா
என்று வெளியே போனது
வரவே இல்லை
கவலையுற்று தேடிப் போனேன்
களைத்து திரும்பி வந்தவன் அதிர்ச்சியுற்றேன்
அங்கு ஒரு பிசாசு இருந்தது
யார் நீ என்றேன்
அது வியந்து
நான்தான் வெளியில் சென்ற தேவதை
என்றது

2 comments:

  1. ஒரு தேவதைக்கு
    பத்து பிசாசு மேலில்லையா?
    மாற்றிப் போடுங்கள்.
    தேவதைகள் பூத்தொடுக்க லாயக்கு.

    ReplyDelete
  2. உள்ளிருந்தால் தேவதை ,வெளிப்பட்டால் பிசாசம் போல

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails