Saturday, March 19, 2011

நான் அழகி அல்ல

அழகற்ற பெண்ணாய்
இருப்பதில்
நிறைய சவுகர்யங்கள் உள்ளன
எந்த ஒப்பனையும்
சீர்ப்படுத்தாது
எந்த உடையும் பொருந்தாது
என்பதால்
உடுத்தும் நேரமும்
ஒப்பனை செலவும் மிச்சம்
ஆடையை அடிக்கடி
இழுத்துவிடத் தேவை இல்லை
மார்ச்சேலை விலகல்
பற்றிக் கவலையின்றி
வாய்பிளந்து
ரயிலில் தூங்கலாம்
காதல் கடிதங்களோடு
யாரும் துரத்த மாட்டார்கள்
காதலித்து மயக்கி
பம்பாயில் கொண்டு விடமாட்டார்கள்
பாத்ரூமில் யாரும்
எட்டிப் பார்க்கமாட்டார்கள்
மொபைலில் படமெடுத்து
வலையில் ஏற்ற மாட்டார்கள்
பேருந்து நெரிசலில்
புட்டத்தில் முட்டமாட்டார்கள்
புகார் கொடுக்கப் போகையில்
போலிசார் வன்புணரும்
அபாயம் இல்லவே இல்லை
இப்படி எத்தனையோ
சவுகர்யங்கள்...


ஒரே ஒரு அசவுகர்யம்தான்
எந்த இடத்திலும்
உங்களை
ஒரு மனுஷியாய்ப்
பார்க்க மாட்டார்கள்...

அதனாலென்ன?

13 comments:

  1. ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தப்படும் கவிதைகளுக்கேயுண்டான முன்கூட்டியே யூகிக்கப்படும் பாதகம் இந்தக் கவிதையில் இருந்தாலும் இறுதி வரி ஒரு சவுக்கின் சுழற்றல் போகன்.

    ReplyDelete
  2. வித்யாசமான கோணம்....கவிதை அருமை!!!!!
    ////மார்ச்சேலை விலகல்
    பற்றிக் கவலையின்றி
    வாய்பிளந்து
    ரயிலில் தூங்கலாம் /// இது மட்டும் சாத்தியமா தெரியவில்லை...

    ReplyDelete
  3. வாவ்! அட்டகாசம்! ;-)

    ReplyDelete
  4. //..கொற்றவை said.

    இது மட்டும் சாத்தியமா தெரியவில்லை... //
    தப்பு...தான்...
    லவ்வர் /வைப் வெளிகூட்டிட்டு போகும்போது எல்லரும் பார்பங்க ..அழகா இருக்கனும்னு நினைப்பங்க்...

    மற்றபடி... சும்ம ஒரச... ஒதுங்க...
    அழகு வேண்டியதில்லை... பொம்பளையா இருந்தா போதும்..

    கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கான்னு தான் பார்பாங்க...
    //...மார்ச்சேலை விலகல்
    பற்றிக் கவலையின்றி
    வாய்பிளந்து
    ரயிலில் தூங்கலாம் ...//

    தூங்கலாம் என்ன முழிச்சு பார்க்கும்போது கற்பு மட்டும் இருக்காது..

    4 வருசம் முன்னால் ஓடும் ரயிலில் பள்ளி மாணவியை கற்பழிச்சு கொண்ணு கழிவறையில் பாடியை போட்டுபோனாங்க ஞாபகம் இருக்கா...

    அந்த மாணவி போட்டொ பார்த்து அப்புரம் சொல்லுங்க... உங்க கருத்து சரியான்னு...

    ReplyDelete
  5. //ஒரே ஒரு அசவுகர்யம்தான்
    எந்த இடத்திலும்
    உங்களை
    ஒரு மனுஷியாய்ப்
    பார்க்க மாட்டார்கள்... //

    உண்மை தான் குறிப்பாக பெண்கள்..தான் அதிகம் அப்படி செய்வாங்க...

    ReplyDelete
  6. //அதனாலென்ன?//

    கேள்வி சிம்பிளாக‌ தெரிந்தாலும் "ந‌ச்" கேள்வி.

    ReplyDelete
  7. அருமை..

    அதே சமயம் என் கவனம் அறிவை வளர்ப்பதிலேயே செல்லும் என சொல்லலாம்..

    ReplyDelete
  8. புரிகிறது ஆனால் புரியவில்லை. அழகற்ற மனிதரை நான் சந்தித்ததே இல்லை.

    ReplyDelete
  9. அழகான பெண்ணாய் இருப்பதிலும் பல சௌகர்யங்கள் உண்டு
    ஒப்பனை செய்தேயாகும் அவசியமில்லை
    எல்லா உடையும் பொருந்தி விடுவதால்
    பொருந்தும் உடைதேடி அலையும் நேரம் மிச்சம்
    அறிவை வருத்தும் அவசியமின்றி மார்ச்சேலை விலகல்
    காரியம் சாதித்து விடும்.
    கண்ணை லேசாய் சிமிட்டினால் போதும்
    உடனடி நட்பு
    உடனடி காதல்
    கல்யாண சந்தையில்
    உடனடி வியாபாரம்
    பம்பாய், மொபைல், இணையம்
    பேருந்து, புட்டம் , போலீஸ்
    என சிறு சிறு தொந்தரவுகள் இருந்தாலும்
    அவையும் அழகின் பெருமையாய் ஆறுதல் கொள்ளலாம்

    இரண்டே இரண்டு அசௌகர்யம் தான்
    அறிவும், மனமும்
    இருக்கிறதென
    நம்புவதற்கு/பார்ப்பதற்கு கூட ஆளேயில்லை.
    ம்ம்.... அதனாலென்ன ??


    :))) ச்சும்மா !!! போகன் !!

    உங்களளவுக்கு நச்சென்று எழுத வரவில்லையென நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. அவரவர் கஷ்டம் அவரவர்க்கு, அவரவர் லாபமும் அவரவர்க்கே !!

    ReplyDelete
  11. நம்மை நாம் நேசித்தால் போதும், நிம்மதியாய் வாழலாம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails