அவிழ்க்க
அவிழ்க்க
அவிழா புதிராய்
அவள்
இறுகிக் கொண்டே இருந்தாள்
கடைசி முடிச்சு
என்று நான்
முட்டியதும்
கடைசி யல்ல
என்றறிந்தபோது அயர்ந்து போனேன்
காய்களை நகர்த்துகிறவன்
நானல்ல
என்று எந்தக் கணம் உணர்ந்தேன்?
என்று தெரியவில்லை.
ஆனால்
உணரும்போது
முற்றிலுமாக
நான்
சிக்கிக் கொண்டிருந்தேன்.
கால் பாவ
இடம் தராத புதை மணல்...
வழி திரும்பா
அடர் வனம்..
கபால மாலை
அணிந்த கொற்றவை..
மழை நாள் மதியத்தில்
உறவு முடிந்ததும்
ஆடை அணிந்து கொண்டிருந்தவளை
அச்சத்துடன் பார்த்தேன்
யார் இவள்?
அவள்
என் பதற்றத்தைக்
கண்ணாடியில் கவனித்துப்
புன்னகைத்தாள்
வெறும் கன்னித்திரை என நினைத்தாயோ
என்னை ?
என்பது போல...
அவிழ்க்க
அவிழா புதிராய்
அவள்
இறுகிக் கொண்டே இருந்தாள்
கடைசி முடிச்சு
என்று நான்
முட்டியதும்
கடைசி யல்ல
என்றறிந்தபோது அயர்ந்து போனேன்
காய்களை நகர்த்துகிறவன்
நானல்ல
என்று எந்தக் கணம் உணர்ந்தேன்?
என்று தெரியவில்லை.
ஆனால்
உணரும்போது
முற்றிலுமாக
நான்
சிக்கிக் கொண்டிருந்தேன்.
கால் பாவ
இடம் தராத புதை மணல்...
வழி திரும்பா
அடர் வனம்..
கபால மாலை
அணிந்த கொற்றவை..
மழை நாள் மதியத்தில்
உறவு முடிந்ததும்
ஆடை அணிந்து கொண்டிருந்தவளை
அச்சத்துடன் பார்த்தேன்
யார் இவள்?
அவள்
என் பதற்றத்தைக்
கண்ணாடியில் கவனித்துப்
புன்னகைத்தாள்
வெறும் கன்னித்திரை என நினைத்தாயோ
என்னை ?
என்பது போல...