Friday, March 11, 2011

முத்தம் செய்

முத்தம் செய்வதெப்படி
எனக் கேட்ட
முதிரா முலைப் பெண்ணே..

முத்தத்தைப்
பலவகைகளில் செய்யலாம்

தெய்வத்தைத் தொழுவதைப் போல
பக்தியுடன்
சிலர் செய்வார்
பழம் சாப்பிடுவது போல
பசியுடன் சிலர் செய்வார்
பட்டாம்பூச்சி
பிடிப்பது போல்
பயத்துடன் சிலர் செய்வார்
முள்கரண்டியில்
இறைச்சியைக்
குத்துவது போல
இன்னும் சிலர் செய்வார்
நான் எப்போதும்
முத்தத்தை
யுத்தத்தைப் போலதான்
செய்வேன்

3 comments:

  1. எளிமையான, பாமரனுக்கும் பரியும்படி உள்ள கவிதை..அருமை நண்பா...

    ReplyDelete
  2. அடப்பாவி !! என்பதுதான் முதல் reaction. வேறெப்படியும் .....இதை வார்த்தைகள் இட்டு ரசனையை வெளிப்படுத்துவதென தெரியவில்லை.
    நன்றாயிருக்கிறது. முதிரா முலைப் பெண்ணே என விளிக்க, கொஞ்சம் தைரியம் தேவையோ ?? :)

    --

    ReplyDelete
  3. ஹ்ம்ம்.. யுத்தங்களை ஆதரிக்கலாம் போலிருக்கிறது!
    முதிரா முலை ஏதோ ஊர்ப்பெயர் என்று நினைத்தேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails