Tuesday, March 15, 2011

மண்புழுப் பறவை

வியர்த்தமாய் இறக்கிற
ஒவ்வொரு நாள் மாலையும்
அன்றைய நாளின்
காயங்களை
நக்கிக் கொண்டிருக்கையில்
காதோரம் யாராவது

தவறாது சொல்லிச் சொல்கிறார்கள்
நீ பறவையல்ல
நினைவுகொள்...
பறக்க நினைக்கும்
ஒரு மண்புழு தான் நீ என்று..

ஆனாலும் அவர்களுக்கு
நான் சொல்வேன்
மண் புழுக்களுக்குப் பறப்பது
ஒருவேளை தடுக்கப் பட்டிருக்கலாம்
ஆனால்
கனவு காண்பது
அனுமதிக்கப் பட்டே இருக்கிறதென

5 comments:

  1. அன்று ......
    கவிதை எழுதுவதும், பறப்பதைப் போலத்தான் என்று கற்றுக் கொண்டதாய் அல்லது சமாதானம் செய்துகொண்டதாகவோ நினைவு,
    இன்று கனவு காணும் மண்புழுவா??
    பறந்தே ஆக வேண்டுமோ ??? எனில் பறப்பதை கற்றுகொள்.

    ReplyDelete
  2. //மண் புழுக்களுக்குப் பறப்பது
    ஒருவேளை தடுக்கப் பட்டிருக்கலாம்
    ஆனால்
    கனவு காண்பது
    அனுமதிக்கப் பட்டே இருக்கிறதென//
    Fantastic lines

    ReplyDelete
  3. கனவிலே வாழ்ந்து கனவிலே சாகும் வகையா? ஓகே.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails