Monday, February 6, 2012

பூவுலகின் நண்பர்கள் 1

மையோ விழித்தபொழுது  ஏழு மணி.பதினைந்து நிமிடம் பனிரெண்டு வினாடிகள்.எதோ சத்தம் கேட்டுதான் விழித்தான்.
என்ன சத்தம்?தள்ளாட்டமாய் எழுந்து கலங்கிய பார்வையுடன் ஜன்னலுக்கு வந்து திரையை மெலிதாக்கி வெளியே பார்த்தான்.பளீரென்று சூரியன் முகத்தில் அறைந்தான்.கண் கூசியது.
தூரத்தில் கார்கள் வரிசையாய் நெருக்கமாகப் போய்க் கொண்டிருந்தன.அவை எழுப்பிய தூசித் திரை ஊடறுத்து அவற்றின் எந்திர கமறல் ஒரு பெரிய கூட்டிசை போல கேட்டது.ஒரு தடவை சகாராவில் விடுமுறைக்குப் போனபோது மாலை சிகப்பாய் இறக்கும் பொழுதில் தூரத்தில் ஒரு ஆழ் உறுமல் கேட்டது.சிங்கம் என்றான் வழிகாட்டி.ஒரு நிமிடம் மூச்சடக்கி எல்லோரும் காத்திருந்தோம்.சிங்கம் வர.அது வரவே இல்லை.இந்த சத்தம் ஏறக் குறைய அதே போலதான் இருக்கிறது.ஒரு பெரிய ராட்சத இயந்திர சிங்கம்.
இந்த சத்தமா என்னை எழுப்பியது?இல்லை.இது மூன்று நாட்களாய் விடாது கேட்டுக் கொண்டிருக்கிறது.முழு மாநிலமும் வேறு இடத்துக்கு வேறு தேசத்துக்கு வேறு உலகுக்கு நகர்ந்து போகும் சப்தம்.
பிறகு வேறென்ன?அப்புறம்தான் அவன் அவர்களைக் கவனித்தான்.சுற்றுச் சுவரின் மறுபுறம் சிகப்பு நேரக் காரின் தலைக்கு மேல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
திருவாளர் ஜீவாவும் அவர் மகனும்.
''அப்பா ப்ளீஸ்!''என்று அவன் ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவர் அதற்கு வன்மையாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்.அவரது மனைவி அவர்களைச் சமாதனப் படுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தார்.அவர் மகள் சில்வியா வண்டியின் முன் சீட்டில் தன் பிராக்கின் கை மடிப்புகளைச் சுருட்டிக் கொண்டிருந்தாள்.அவளுடைய மார்புகளின் கூர்மை இங்கிருந்தே எனக்குத் தெரிந்தது.அவள் மார்புகளுக்கு எதுவும் அணிந்து நான் அதிகம் பார்த்ததில்லை.இன்றைய காலத்தின் பேஷன் அது.'உங்கள் இதயங்களை திறந்து வைத்திருங்கள்'என்றொரு பிரபல  விளம்பரம் நினைவு வந்தது.
''மை டியர் சைல்ட்,என் வீட்டுக்கு வருகையில் ஏதாவது உன் மார்புகளுக்கு உடுத்திக் கொண்டு வா என்று எத்தனை முறை சொல்லி இருக்கிகிறேன்?''
''பதினேழு தடவை''என்றால் அவள்.பேசும்போதெல்லாம் அவள் இமைகளின் மீது கனமாய் படரும் போதை  பொருட்களின் நிழலைப் பார்க்காமல் அவனால் இருக்க முடிவதில்லை.
 ''பதிலுக்கு என்னை குழந்தை என்று அழைக்காதீர்கள் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்?''என்றவள் சிரித்தாள்''ஏன் மையோ.எனது மார்புகளை உங்களுக்குப் பிடிக்க வில்லையா?ஒரு முறை தொட்டுப் பாருங்களேன்.கத்தி போலிருக்கிறது பாருங்கள்''என்று பிதுக்கிக் காண்பித்தாள்.
நான் அவளது தோள் பட்டைகளில் இருந்த மெலிய போதைப் புள்ளிகளைக் கவனித்து '' இவை நல்லதல்ல பெண்ணே.விட்டுவிடு''
''நிறுத்திவிடுகிறேன்''என்றாள் அவள் என்னை நெருங்கி ''ஒரே ஒருதடவை நீங்கள் என்னுள் நுழைந்தால் போதும்..ப்ளீஸ்.ஒரே ஒரு முறை.அதன் பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்கள் கனவுகளில் வரும் போன நூற்றாண்டுப் பெண்ணாக மாறிவிடுகிறேன்''
நான் அவளைத் தள்ளி ''நான் உனது அப்பாவை விட மூத்தவன் குழந்தை''
அவள்  ''அதனால் என்ன?நேற்று போன யுகத்தின் மத நூலான விவிலியத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.அதில் அப்பா உடனேயே படுத்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள் ஒரு பெண்.கம் ஆன்'என்று எனது முகத்தைப் பிடித்து இதழ்கள் மீது தனது ஆல்காஹால் மணக்கும் ஈர இதழ்கள் மீது..

ச்சே...மையோ தலையை உதறிக் கொண்டான்.அவர்கள் இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.முதலில் அவர்கள் என்ன சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் எனப் புரியவில்லை.பிறகுதான் அது அவர்களது நாய் பற்றியது என்று புரிந்தது.ஜீவாவின் பையன் அந்த நாயையும் கூட அழைத்துச் செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க அவர் அதை ஆக்ரோஷமாக மறுத்துக் கொண்டிருந்தார்.அவரை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.மிருகங்களைக் குறிப்பாக நாய்களை வேறு மாநிலங்களுக்கு எளிதாக் அழைத்துச் சென்றுவிட முடியாது.மருத்துவச் சான்றிதழ்,லைசன்ஸ்.பொறுப்புச் சான்றிதழ்,காப்பீடு எல்லாம் வேண்டும்.
தவிர இப்போதுள்ளசூழலில் அவர்கள் வாழ்வே பெரிய கேள்வியாய் தொங்கிக் கொண்டிருக்கும்போது நாயையும் இழுத்துக் கொண்டு திரிவது இயலாது எனினும் மயோவுக்கு பையன் நாய்க்காக கவலைப் படுவது நெகிழ்வாய் இருந்தது.அவன் அவரிடம் இந்தப் பிரளயத்தில் லைசன்ஸ் போன்ற நடை முறைகளை யாரும் பார்க்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

உண்மைதான்.இரண்டு நாட்களாக மாநிலத்தின் எல்லா விதிகளும் தளர்ந்து உடைந்து போய்விட்டன.எல்லோருக்கும் ஒரே லட்சியம்.எஸ்கேப்.ஓடு.எங்காவது தப்பித்து ஓடு.இப்போது எல்லோரும் வடக்கு நோக்கிதான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அபாய எல்லை என்று சென்னையைச் சுற்றி நானூறு கிமீட்டர் சுற்றளவு என்று அறிவித்திருந்தார்கள்.

வடக்கு நோக்கிப் போகிறவர்களும் வடக்கு நோக்கி வருகிரவர்களுமாய் சாலைகளில் வாகனங்கள் நுரைத்துக் கொண்டிருந்தன.வேக எல்லை 100  கிமீ என்று அறிவித்திருந்தார்கள்.அதாவது அதற்கு கீழே போகக் கூடாது.ஆனால் அத்தனை நெருக்கடியில் வரிசை மிக மெதுவாய்த்தான் ஊர்ந்து கொண்டிருந்தது.
டிராபிக் ஜாம் என்பதை அதுவரைக் கேள்விப் பட்டே இராத மக்கள் ஹாரன்களுக்கு  மேலே கத்திக் கொண்டிருந்தார்கள்.சிலர் குரல் கம்மி அழுது கொண்டிருந்தார்கள்.நிறைய பேர் பிரார்த்தனை பண்ணுவதைப் பார்க்க முடிந்தது.ரொம்ப பேர் பிரார்த்தனை எப்படி செய்வதென்று மறந்து போயிருந்தார்கள்.இன்னும் சிலருக்கு பிரார்த்தனை செய்வதற்கு எந்தக் கடவுளரது பெயருமே தெரியவில்லை. எல்லோரது அழுகையிலும் பதற்றத்திலும் பிரார்த்தனையிலும் ஒரே விஷயம்தான் ஓடிக் கொண்டிருந்தது .பயம்.மரண பயம்.

மையோ திரையை மூடிவிட்டு கிச்சனுக்கு வந்தான்.காபி கலந்து குடித்தான்.காபி இயந்திரம் தரும் காபி அவனுக்குப் பிடிப்பதில்லை.அங்கெ மெலிய இரைச்சலோடு இயங்கிக் கொண்டிருந்த ஓவனை இகழ்ச்சியாகப் பார்த்த படியே குடித்தான்.''பசிக்கிறதா?உங்கள் காலை உணவு இருநூறு வினாடிகளில் தயாராகி விடும்''என்றது அது.
இன்று திங்கள் கிழமை.அவனது மெனு இரண்டு வதக்கிய ரொட்டிகள்.வெண்ணை.பழக் கூழ்.ஜெல்லி ஆம்லேட்
ஒரு மாதத்துக்கு ஒரு தடவை அதற்கு பொருட்கள் வாங்க வேண்டும்.பிறகு அதை மறந்துவிடலாம்.அது தீரும்போது பெண் குரலில் 'மளிகைச் சாமான் தீர்ந்துவிட்டது சேட்டா''என்றழைக்கும் .இந்த 'சேட்டா'அவன் சொல்லி ப்ரோக்ராமில் சேர்த்தார்கள்.கேரளாவில் அவன் பார்த்த ஒரு பெண் நினைவாக அது.மளிகையையும் முதல் தேதி அன்று வந்து ஒரு எந்திரன் வந்து தந்துவிட்டுப் போவான்.அவன் இளிப்பு பிடிக்காமல் அடுத்த முறை ஒரு எந்திரியை அனுப்புங்கள் என்று ஒரு தடவை சொன்னான்.அது வந்து 'நீங்கள் விரும்பினால் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்/தனிக் கட்டணம் அதற்கு''என்றது அடுத்த தடவை பழைய ஆளையே அனுப்பு என்று சொல்லிவிட்டான்.
வெளியே   செய்கைத் தசை.உள்ளே சிப்புகள்.செயற்கை மார்புகள் செயற்கை யோனி.செயற்கையாய் ஊற்றெடுக்கும் சுரோணிதம் கூட உண்டு.மனித உடல் போலவே சூடாய்க் கூட இருக்கும்.சரியாக நீங்கள் உச்சம் அடையும் தருணத்தில் அதுவும் ''ஓ என் கடவுளே'என்று கத்தி உங்களது ஆண்மையை சந்தோசப் படுத்தும்.சந்தோசமாக இருந்தாயா என்று கூட நீங்கள் அதைக் கேட்கலாம்.

மூன்று நாள் வலி,குழந்தைகள் பெற்றக் கொள்ளாது என்பது தவிர எல்லாம் பெண்.அவளது எல்லா அற்புதங்களும் முட்டாள்த் தனங்களும் சேர்த்து.'நமது மனைவிகள்'என்ற நிறுவனம் இது போன்ற எந்திரிகள் தயாரிப்பில் பிரசித்தம்.அவை புணர்ந்து முடித்ததும் உங்களுக்கு காதல் கடிதங்கள் கூட எழுதும் என்கிறார்கள்.மையோ கூட அப்படி ஒன்று கொஞ்ச நாள் வைத்திருந்தான்.ஒருநாள் அவன் அதை எதோ காரணத்துக்காக முரட்டுத் தனமாய் அறைந்ததில்,மறை கழன்று போய் எங்கோ கிடக்கிறது.இது போன்ற வீட்டரசிகளிடம் என்ன வசதி என்னவென்றால் அவை துரோகம் செய்ய மாட்டா.உங்களைத் தவிர வேறு யாரும் புணர முடியாத படி அதன் யோனியை லாக் செய்து தருவார்கள்.


மையோ முட்டை சான்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது  வாசலில் ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க ஐந்தடி எட்டு அங்குலம் .அறுபது கிலோ எடை,சிகப்பு நிறம்.கருநீலக் கண்கள் உடைய ஒரு நபர் வாசலில் நிற்பதாய் கதவு சொல்லியது.'நீங்கள் அவர் முகத்தைக் காண விரும்புகிறீகளா?''
மையோ நிமிர்ந்து சுவர்த் திரையை வெறித்தான்.ஜீவா.

எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.ஜீவா பழுப்புக் கோட்டில் கையை செலுத்திக் கொண்டு நின்றிருந்தார்.வெளியே கார் தலை முழுக்க பொதிகளுடன் நின்று கொண்டிருந்தது.கிளம்பி விட்டார்கள் போல.
''குட் மார்னிங்''அந்த சூழலில் அந்த காலைக்கு அது சம்பந்தமில்லை என்று தோன்றினாலும் வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.''நான் கிளம்பிவிட்டேன்''என்றார்அவர்.
''இங்கிருந்து மும்பை.அங்கிருந்து கனடா''
''அனுமதி கிடைத்துவிட்டதா''
''ஆம்''என்றார்.பிறகு சற்று தயக்கத்துடன் ''எனக்கு மட்டும்''
''மற்றவர்கள்?"என்றேன்.அவர் தாடை இறுகியது.''என்ன செய்வது?வேறு வழியில்லை''என்றார் அவர்.''இனிமேலும் நான் முட்டாள் இல்லை''
அவர் என்ன சொல்கிறார் என்று அவனுக்குப் புரிந்தது.வேதனையாக இருந்தது.குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து நாளாயிற்று.அந்த வகையில் எதோ ஒரு வடிவில் அதை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மீது அவனுக்கு பரிவுண்டு.இப்போது அது சிதைவதை உணர்ந்தான்.''நீங்கள் கிளம்பவில்லையா''
''இல்லை''
''நீங்கள் பெரிய முட்டாள்''என்றார் அவர்.அவன் ''ஆம்'' என்று சிரித்தான்.''சரி.நான் கிளம்புகிறேன்.நிறைய தூரம் போகவேண்டும்''''குட்லக்''

அவர் திருப்பி நடந்தார்.மையோ சில்வியா அவனிடம் விடை பெற்றுக் கொள்ள வரக் கூடும் என்று நினைத்தான்.ஆனால் அவள் வரவில்லை.முன்தினம் தான் அவளை மறுத்தது அவளைக் கோபப் படுத்தியிருக்க வேண்டும்.''கமான் மையோ .ஒரே ஒரு தடவை.இனி நம் வாழ்வில் சந்திக்கவே போவதில்லை நாம்.''
அவள் இங்கு பார்க்கக் கூட விரும்பாதவள் போல காரில் வேறுபக்கம் வெறித்துக் கொண்டிருந்தாள்.அவன் மனம் இரங்கியது.சில்வியா!சிறு பெண்ணே!

கார் கிளம்பி சாலையில் பெரிய பாம்பு போல ஊர்ந்து கொண்டிருக்கும் வாகன வரிசையில் சேர்ந்து கொள்ள விரைந்தது




Friday, February 3, 2012

உடல் தத்துவம் 20

''They were having their orgasms publicly there ''என்றாள் ரூபி.

நான் ''என்ன''என்றேன் புரியாமல்.
''இல்ல கோயிலில் பேய் பிடித்து ஆடிய பெண்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்''
''நீங்கள் எல்லாவற்றையும் sexual frustration என்று குறுக்குவது போலத் தெரிகிறது.சில கிழவிகள் கூட அங்கு ஆடுவதைப் பார்த்தேன்.அவர்களுக்கும் காம எரிச்சல் என்கிறீர்களா என்ன?''
அவள் சிரித்து ''ஏன் கூடாது?உடல் இருக்கும் வரைக்கும் காமம் இருக்கும்''என்றாள் .''நீ என்றே என்னைக் கூப்பிடு''

''நான் சந்தேகிக்கிறேன்''என்றேன்.ஆனால் அந்த சந்தேகத்தை பட தகுதியான ஆள் நான் இல்லை என்றும் தோன்றியது.

''காமம் மட்டும் நான் சொல்லவில்லை.கோபம்.வெறுப்பு.விரக்தி.காமத்தை வெளிப்படுத்த ஒருவருக்கு சுதந்திரம் இருப்பது போலவே ஒருவருக்கு தனது கோபத்தை எரிச்சலை அமைதியின்மையை திருப்தி இன்மையை வெளிப்படுத்தவும் கொஞ்சம்  சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.இங்கு பெண்களுக்கு அந்த விடுதலை இல்லை.I would like to bare my teeth at someone occasionally .sometimes I get orgasm when killing somebody's innocence...breaking someone's heart.''

அவளது வீடு திருப்புநித்துரை என்ற இடத்தில் இருந்தது.பெரிய அபார்ட்மென்ட் கூம்பில் பத்தாவது மாடியில் மாடுலார் கிச்சன் போன்சாய் தோட்டம் சலவைக் கல் பாத் ரூம் நீள பால்கனி என்று இருந்தது.

''ஹைடெக் தனிமை''என்றாள்.''ஊருக்கு உள்ளே நிஜத் தோட்டத்துடன் பெரிய வீடொன்று இருந்தது.கடனில் மூழ்கி விட்டது.அற்புதமான வீடு.மிஸ் இட் வெரிமச் .தவிரவும் சுற்றி இருந்தவருக்கு எனது கற்பின் தன்மை பற்றி நிறைய கவலைகள் வர ஆரம்பித்துவிட்டன''

அவள் உள்ளே நுழைந்ததும் நேராக குளிர்ப் பெட்டிக்குப் போய்த் திறந்து ''பீர் ?''என்றாள்
''நான் அவ்வளவு பெரிய குடி காரன் இல்லை''
''இருந்தாலும் கவலை இல்லை''என்று சிரித்தாள்.''எனது கணவர் மிகப் பெரிய குடி காரர்''என்றவள் ''குடித்தே இறந்து போனார் அவர்''

அவள் உள்ளே சென்று நைட்டிக்கு மாறிக் கொண்டு  வந்தாள்
ஒரு வேஷ்டியைக் கொண்டு வந்து கொடுக்கையில் நான் தயங்க ''நீ இன்னமும்   கன்னிப் பையந்தானா மக்கா''என்றாள்

அவ்வளவு பெரிய வீட்டில் டிவி இல்லை என்பதைக் கவனித்தேன்.மாறாக உட்காருமிடம் சாபாட்டுமேஜை படுக்கை அறைஎங்கும் புத்தகங்கள் நிறைந்திருந்தன.சோபாவில் இருந்த ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.
ஒரு நூற்றாண்டு கால தனிமை.

''நான் உனக்கு சாப்பிட ஏதாவது செய்கிறேன்''
''இனிதான் செய்ய வேண்டுமா...வெளியே சாப்பிட்டிருக்கலாமே''
''சமைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் அது எனது தியானம் .ஏனோ என்னால் தியானம் எல்லாம் செய்ய முடிவதில்லை.சமைப்பது என்னை சமனப் படுத்துகிறது.அந்தக் காலத்தில் கதைகளில் கிழவிகள் எதனால் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டே இருந்தார்கள் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.பயப்படாதே .நன்றாகவே சமைப்பேன்''

சற்று நேரத்தில் சப்பாத்தியும் உருளைக் கிழங்கு பொறியலும் ஆம்லெட்டும் செய்து விட்டாள்
இருவரும் மௌனமாக சாப்பிட்டோம்.கடிகாரத்தின்சத்தம் மட்டுமே நிறைந்திறந்த அந்த அறையில் பேசுவது ஏனோ தண்ணீருக்குள் நடக்க முயல்வது போல  இருந்தது.

சாப்பிட்ட பிறகு ஒரு சிகரெட் பாக்கட்டை எடுத்து ''வேணுமா?"'

''இல்லை.புகைப்பதில்லை இப்போது''
அவள் உறுத்துப் பார்த்து''இன்னமும் எனது அம்மாவின் பையன் தானா நீ?எதையும் இழக்கவில்லையா?"'
நான் சிரித்து ''இல்லை .இப்போது இழக்க எதுவுமே இல்லை"
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தோம்.
அவள் புகையை சுவர் நோக்கி ஊதிக் கலைத்தாள்''Go like a smoke ..my life''
''சரி நீ என்ன செய்கிறாய்..நான் அடிக்கடி உன்னைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டு.என்னை நிர்வாணமாய் பார்த்த முதல் ஆண் நீயல்லவா"என்றபோது எனது காதுகள் உஷ்ணமாவதை விநோதமாய் உணர்ந்தேன்.
''நீ எப்போதாவது என்னை நினைத்துக் கொள்வாயா?"'

நான் சிரித்து''எப்போதும்.நான் பார்த்த முதல் பெண்ணுடல் அல்லவா?"
அவள் புன்னகைத்து''கிரேட்.உனக்குப் பிடித்திருந்ததா என்ன""
''எது?"
''நீ பார்த்த முதல் உடல்?"
''கிரேட்''என்றேன்.''அதைவிட அற்புதமான உடலை நான் அதன் பிறகு பார்க்கவில்லை''
இருவரும் உரக்க சிரித்தோம்.அவள் கண் சிமிட்டி ''இப்போது அந்த உடலைப் பார்க்க விரும்புகிறாய் என்றால் சொல்''
நான் பதில் சொல்லவில்லை.மீண்டும் ஒரு புகை வளையம் அறையைச் சுற்றி வந்தது.
சட்டென்று அவள் முகம் இறுகியது.


''எப்போதாவது என் அம்மாவைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டா?'
நான் மௌனமாய் இருந்தேன்.மேகி அத்தையை எப்போதும் ஒரு முள் போல என் அகத்தில் சுமந்து திரிகிறேன் என்று சொல்ல தயங்கி நின்றேன் 
அவள் புகைப்பதை நிறுத்தி''ஒன்று உன்னிடம் கேட்டால் சொல்வாயா''என்றாள்.
''என் அம்மா தன்னை கொன்று கொள்வதற்கு முந்திய தினம்  என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா..அவள் எதனால் அப்படிச் செய்து கொண்டாள்?''

''உனக்கு என்ன சொல்லப் பட்டது ரூபி?"'
''எனக்கு எதுவுமே சொல்லப் படவில்லை.அதுதான் பிரச்சினை.அவர்கள் ஏதாவது சொல்லி இருக்கலாம்.ஏதாவது ஒரு அபத்தமான பொய்யையாவது.அதை பிடித்துக் கொண்டு நான் அதைவிட்டு வெளியேறி இருப்பேன்.அவர்கள் எதையுமே சொல்லவில்லை.அதுதான் என் உயிரை அறுக்கிறது.அவளது அந்த முடிவுக்கு நானும் ஒரு காரணம் என்று ஒரு குற்ற போதம் கடுத்துக் கொண்டே இருக்கிறது.அதிலும் என் கணவரின் மரணத்துக்குப் பிறகு.என் வாழ்வு யார் யார் திரைகளிலோ நீலப் படமாய் ஆனபிறகு அதிகமாக..''
''நீ ஏன் நீலப் படங்களில் நடிக்கிறாய் ரூபி?"
''பொழுது போக்கிற்காக ''என்று கடுகடுத்தாள் அவள்.''அது வேறு கதை.அதற்குள் நான் இப்போது விழ விரும்பவில்லை.நீ என் அம்மாவைப் பற்றி சொல்''

நான் பெருமூச்சுடன் அந்த இரவை மிக தயக்கத்துடன்விவரிக்க ஆரம்பித்தேன்.
எவ்வளவு கொடுமையான இரவு!திரும்பத் திரும்ப என் நினைவுகளிலும் கனவுகளிலும் மீட்டப் பட்ட இரவு!அந்த இரவின் பல்வேறு சாத்தியங்களை நான் திரும்பத் திரும்ப  என் அகத்தில் உருவாக்கிப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த இரவின் வெவ்வேறு காட்சிகள் புதிது புதிதாய் துலக்கம் பெற்று வருவதை வியப்புடன் கவனித்திருக்கிறேன்.ஒரு நாய் தன்னிடம் உள்ள பொருளை முகர்ந்து முகர்ந்து பார்த்து அறிந்து கொள்ள முயல்வது போல நான் திரும்பத் திரும்ப அந்த இரவை என் அத்தனைப் புலன்களாலும் புரிந்து கொள்ள முயன்றேன்.ஒரு காட்சியை பல்வேறு கோணங்களில் பிடிக்கும் காமிரா போல நான் வெவ்வேறு கோணங்களில் அந்த இரவை பார்க்க முயன்றேன்.ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் பார்க்கத் தவறிய ஒரு கோணம் கிடைத்துக் கொண்டே இருந்தது.


என்னைத் தவிர அந்த இரவின் சாட்சி யாக இருந்த மற்றும் ஒருவரை நான் வெகு நாட்கள் கவனித்த படியே இருந்தேன்.அவருக்குள் அந்த இரவு தங்கி இருக்கிறதா அவர் கண்களில் மேகி அத்தை எப்போதாவது தென்படுகிறாளா என்று கண்காணித்த படியே இருந்தேன்.
அத்தை தனக்குத் தானே கொடுத்துக் கொண்டது போல எதாவது ஒரு விதத்தில் அவரது பாவத்துக்கு தண்டனை கிடைக்கும் என்று ரகசியமாய் எதிர்பார்த்திருந்தேன்.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப் பட்டிருக்கிறதே.ஆனால் பாவத்தின் சம்பளம் வாழ்க்கையே என்ற கருதுகோள் அபோது எனக்குப் பரிச்சயமாக இருக்கவில்லை.
ஆனாலும் அத்தையின் மரணத்துக்கு எஞ்சிநீயர்தான் காரணம் என்று அந்த வயதில் கூட நினைத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சர்யம்தான்.அத்தை மரணத்துக்கு  யார் காரணம் என்பதில் எனக்கு அப்போது சந்தேகமே இருக்கவில்லை.ஒரு அடர் மழை நாளில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் நான் பார்த்த கண்களை என்னால் எப்படி மறக்க முடியும்?இருண்ட குழி விழுந்த கண்களில் இருந்து மினுங்கிய அந்த விஷ வெளிச்சம் வாழ்நாள் முழுவதும் எனது கனவுகளில் ஒரு பிசாசு நிலவு போல வீசிக் கொண்டிருக்கிறது.

ரூபி எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அத்தை 'ஐயோ என்னைப் பாரு பிள்ள ...கர்த்தாவே நான் என்ன செஞ்சிட்டேன் ''என்று அரற்றிய இடம் வரும்போது அவள் மெல்லிதாக 'அம்மா அம்மா என் செல்ல அம்மா 'என்று விம்மினாள்.


க்வார்டர்சில் நானும் சித்தப்பாவும் அத்தையை திரும்பப் பார்த்த கதையை சொன்ன போது சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள் .அப்ப்போது அவள் கண்கள் ஒரு வெறி யானையைப் போல சுருங்கி சுருங்கி விரிந்தன,நான் ஒரு சன்னதம் போல எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.என் மதகுகளை எதுவோ உடைத்திருந்தது.எத்தனையோ மருந்துகளும் மருத்துவர்களும் குணப் படுத்தாத புண்ணை இது ஒருவேளை குணப் படுத்தக் கூடும் என்று தோன்றிற்று.
நன் கடைசியாக அத்ததையின் பின் புலத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்தேன் என்று சொன்ன பொழுது அவள் எழுந்து நின்றுவிட்டாள்.''வாட் நான்சென்ஸ்!''என்று உரக்க கத்தினாள்
பிறகு ஒரு முறை தன்னை உதறிக் கொண்டு ''ஒய் இட் மேக்ஸ் பெர்பெக்ட் சென்ஸ்!''என்று வியப்புடன் சொல்லிக் கொண்டாள்..கோயிலில் அன்று பார்த்த குருதி பலிக்குப்  பிறகு எங்களுக்கு எதுவுமே சாத்தியம் என்றுதான் தோன்றிற்று

சட்டென்று நாங்கள் அறைக்குள் ஒரு குளிர் பெருமூச்சுடன் ஊடுருவதை போல் உணர்ந்தோம்.எங்கள் இருவரைத் தவிர அறையில் இன்னும் யாரோ ஒருவர் இருப்பது போன்ற ஒரு உணர்வை அடைந்தோம்.அந்தக் குளிர் அந்த முகம் அறியா ஆளுமையிடமிருந்துதான் பெருகி வழிந்து வந்து கொண்டிருந்தது.ஏனோ மரணத்தின் குளிர் என்று அதை நான் நினைத்துக் கொண்டேன் .வாழ்வின் அந்தப் பக்கமிருந்து ஊறி வரும் குளிர்.நான் அச்சத்துடன் ஒருமுறை அறையைச் சுற்றிப் பார்த்தேன்.அறையின் உச்சியில் இருந்து யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போல உணர்ந்தேன்.அந்தக் கண்களை நான் நன்கு அறிவேன்.அன்று க்வார்டர்சில் நள்ளிரவில் அடர் மழையில் என்னை ஊடுருவிப் பார்த்த அதே கண்கள்தான் அவை.

சாத்தானின் கண்கள்.










Saturday, January 28, 2012

முடிவிலி

கோட்பாரற்றுக்
கிடக்கும் 
பழங் கோயிலின் 
இடிபாடுகளில் 
இள முலைகள் துள்ள 
தனித்துத் திரிந்த 
ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் 
தனக்குப் பயமில்லை 
தான் தனித்தில்லை 
என்றாள் அவள் 
இங்கு பறவைகள் இருக்கின்றன 
என்றாள் 
நூற்றுக் கணக்கில் ..
பிறகு 
ஊழி வரும்வரை 
உறங்க முடியாத தெய்வங்கள்
ஆயிரக் கணக்கில் ..

காலத்தில் உறைந்த விழிகளை 
மூட முடியாமல் 
பார்த்துக் கொண்டே இருக்கின்றன 
எப்போதும் 
எல்லாவற்றையும் 
என்று சிரித்தாள் 
அது வீசப் பட்டது போல 
பெருகி 
வெளியெங்கும் நிறைந்தது 

அந்த சிரிப்பின் 
முடிவில் 
வைரம் போல் மின்னும் 
இரண்டு கூர்க் கொடும்பற்களை
நான் ஒரு கணம் பார்த்தேன் 

அஞ்சி 
ஓவென்று அலறினேன் 
அவள் 
வாய் மீது விரல் வைத்து 
அஞ்சாதே 
என்று புன்னகைத்த பொழுது 
யாரோ எய்தது போல 
இளவெயில் நிறத்தில் 
ஒரு பட்டாம்பூச்சி இறங்கி
அவள் உதடுகள் மேல் அமர்ந்தது .
நான் அது சிறகுகள் அசைய அசைய 
மது உண்பதைப் பார்த்தேன் 
அப்போது 
ஒரு புத்தனின் கண்கள் 
அவளிடம் இருந்தது 
அல்லது 
முலை கொடுக்கும் தாயின் கண்கள் 
ஆனால் 
ஒரு ஓவியத்தின் கண்கள் 
மாற்றப் பட்டாற்போல் 
சட்டென்று 
அவள் கண்கள் சாய்ந்து சோம்பிற்று
எனது வெறும் கைகளைக் கண்டு 
எனக்கென 
ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா 
உன் தோட்டத்தில் 
என்று வான் நோக்கிக் கூவினாள் அவள் 
அது கேட்டு 
கோபுரங்கள் நடுங்கின.
பிறகு 
புனல் போல் இளகும் கண்களுடன் 
புகை கலைவது போல 
மெலிய மழைக் கம்பிகள் 
ஊடே நுழைந்து நுழைந்து 
அவள் என்னை விட்டு 
விலகி கருவறைக்குள் போவதை 
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் 
செய்வதற்று ..

ஒரே ஒரு பூ வில் 
இருந்தது 
அவள் சாஸ்வதம்.

Monday, January 16, 2012

புணர் நிமித்தம்


ஆடும் ரயில் பெட்டியின்
கழிவறையில் 
சிறுநீர் கழிக்கும் 
புழையை வெறித்துக் கொண்டிருந்தேன் 
அது ஏன்
நிதம்ப வடிவில் இருக்கிறது 
என்று கேட்டுக் கொண்டேன்
நீளக் குழாயின் மறுபுறம் 
பூமி ஓடிக கொண்டே இருந்தது
இந்தக் கழிவறையில் 
புணர்ச்சி நடந்திருக்குமா 
என்று யோசித்தேன் 
இருக்கலாம் 
பூமியில் புணர்ச்சி நடை பெறாத இடம் எது ?
மயானத்தில் கூட நடந்து கொண்டே இருக்கிறது

புணர்ச்சி ஒரு நதி போல 
பூமி மீது ஓடிக கொண்டே இருக்கிறது 
மழைத் துளிகள் போல் 
யோனி நிலம் மீது 
விந்துத் துளிகள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன
நல்ல நிலத்தில் வீழ்ந்த விதைகள் மட்டுமல்ல 
முட்செடிகள் நடுவிலும் 
சில முளைக்கின்றன 
நெருக்குண்டு மடிகின்றன 
ஆனால் விதைத்தல் பொருட்டல்ல புணர்ச்சி

''நான் கடவுளை 
உறவு உச்சத்தின் கடைசி நொடியில் மட்டுமே 
பார்க்கிறேன் ''
என்று உடன் பிரயாணித்த 
வெள்ளைக் காரி சொன்னாள்
அவள் கடவுளின் விலாசத்தைத் தேடித் 
திருவண்ணாமலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்
''சில சமயம் 
ராம கிருஷ்ணரைப் போல 
பச்சை வயல்களின் 
மீது 
வெள்ளைக் கொக்குகள் எழும்புவதைக் 
காணும் போதும் 
அது நிகழ்வதுண்டு ''என்று சொன்னாள்.
எனக்கு ராம கிருஷணர் மேல் 
ஆர்வமில்லை
ஆனால் 
அவளது நீர்த்த 
டீ சர்ட்டின் மேலே 
விறைக்கும் முலைகள் 
அந்தக் கொக்குகளை நினைவுபடுத்துகின்றன 
என்ற போது சிரித்தாள்
எனக்கு அவளைப் பிடித்திருந்தது 
என்னைப் போலவே 
கண் தெரியாத தம்பதிகளின்
கண்தெரியும் குழந்தை 
அழுவதை 
பதற்றத்துடன் 
கண்ணீருடன் கவனித்தாள்
அப்போது அவள் கண்களில் 
கடவுள் நம்பிக்கை இல்லை.
என்பதைக் கவனித்தேன்.
''புணர்ச்சி எனக்கு 
இந்த இடத்தில் விலகு 
என்று சொல்லும் 
ஒரு அறிவிப்புப் பலகை
இரு தொழு நோயாளிகள் 
புணர்ந்ததைப் பார்த்த கணத்திலிருந்து 
எனக்கு இவ்விதம் தோன்றி வருகிறது 
சீழ் பழுத்த யோனிகளிலும் 
புழுத்த குறிகள் 
கண நேரக் கடவுளைத் தேடித் 
துழாவுகின்றன ''
என்று நான் அவளிடம் சொன்னேன்
''பூமியில் புணர்ச்சி நிகழாத மனம் எது?''
என்று அவள் கேட்டாள்.
அப்போது அவள் கண்கள் 
மிக தூரத்திலிருந்தன.
நான் அவற்றை வரைய முயன்று தோற்றேன் 
ஒப்பிட 
எனக்கு 
அவள் முலைகளை வரைவது 
எளிதாக இருந்தது
தோய்த்த பால் பனீர் போலிருந்த 
அந்த வெள்ளைக்காரச்சியின் 
முலைகள்
உடைந்த கொப்புளம் போல சிவந்திருக்குமா  
இல்லை 
நான் பார்த்த 
சுதேசியக் கருப்பு நாவல் பழங்கள் போலிருக்குமா 
என்று மட்டும் யூகிக்க முடியாமல் 
ஒரு கேள்விக் குறியை இட்டு வைத்தேன்.
கருப்பே ருசி...எனினும் 
அது எனது மூளையை 
அந்துப்பூச்சி போல் துளைத்துக் கொண்டே இருந்தது
திருச்சியில் 
அவள் இறங்கும் முன்பு 
அந்தக் கேள்வியை கேட்டே விட்டேன் 
அவள் புன்னகையுடன்
போன மாதம் தான் 
அவளுக்கு முற்றிய நிலை மார்புப் புற்று நோய் 
கண்டறியப் பட்டதாகச் சொன்னாள்
அவள் ஏன் என்னிடம் அதைச் சொன்னாள் 
என்பதை நான் அறியேன் 
ஆனால் 
இக்கவிதையில் 
எந்த நீதியும் இல்லை 
என்று மட்டும் 
உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் 
போகும் முன்பு 
கடைசியாக...
அவை வெடித்த கொப்புளங்கள் போல்தான் இருந்தன.




குறிப்பு-பண்புடன் இணைய இதழில் வந்தது 

Friday, December 30, 2011

கன்னித் திரை

அவிழ்க்க 
அவிழ்க்க 
அவிழா புதிராய் 
அவள் 
இறுகிக் கொண்டே இருந்தாள்

கடைசி முடிச்சு 
என்று நான் 
முட்டியதும் 
கடைசி யல்ல 
என்றறிந்தபோது அயர்ந்து போனேன் 

காய்களை நகர்த்துகிறவன்
நானல்ல 
என்று எந்தக் கணம் உணர்ந்தேன்?
என்று தெரியவில்லை.

ஆனால் 
உணரும்போது 
முற்றிலுமாக 
நான் 
சிக்கிக் கொண்டிருந்தேன்.

கால் பாவ 
இடம் தராத புதை மணல்...
வழி திரும்பா 
அடர் வனம்..
கபால மாலை 
அணிந்த கொற்றவை..


மழை நாள் மதியத்தில் 
உறவு முடிந்ததும் 
ஆடை அணிந்து கொண்டிருந்தவளை 
அச்சத்துடன் பார்த்தேன் 
யார் இவள்?


அவள் 
என் பதற்றத்தைக் 
கண்ணாடியில் கவனித்துப் 
புன்னகைத்தாள் 

வெறும் கன்னித்திரை என நினைத்தாயோ 
என்னை ?
என்பது போல...

Monday, December 26, 2011

உள்ளின் உள்

மரமேறி விளையாட்டில் 
உச்சிப் பொந்தில்
ஒளிந்திருந்த 
ஆந்தைக் குஞ்சைப் பிடித்துவிட்டோம் 
சத்தம் மட்டும் கேட்டு 
வெளியே வந்த 
வெளிச்சக் குருடு ஆந்தை 
தடுமாறித் தவித்தது 
பயத்தில் கிரீச்சிட்டது.
ஆந்தை 
என்று கத்தினோம் 
எல்லோரும்அருவருப்பாய் 


சேகர் அதைக் கொன்றுவிடலாம் 
என்றான் 
அலெக்ஸ் அதை ஆமோதித்தான் 
ஆந்தை சாத்தானின் பறவை 
என்ற போது அவன் உடல் நடுங்கியது 
கருப்பசாமி 
ஆந்தையை சுட்டுத் திங்கலாமா 
என்று சந்தேகம் எழுப்பினான் 
அம்பிக்கு அது பிடிக்கவில்லை 
உவ்வே என்று எருக்களித்தான் 

கூட ஏறிவந்த 
தனலக்ஷ்மி மட்டும் '
''ச்சே பாவம் குழந்தை"'என்ற படி 
பாவாடையில் பொதிந்து 
ஆதூரமாய்'
மீண்டும் கூட்டுக்குள்ளேயே
வைத்தாள் 



எப்போதுமே 
அவள் அம்மாவாகவே இருந்தாள்
என்று சொன்னால்
ஆணியச் சிந்தனை 
என்பீர்களானால்
சொல்லவில்லை.

Thursday, December 8, 2011

ஆணின் கண்கள் ..

பில்லியனில் இருபக்கமும் 
கால் விரித்து 
ஆரோகணிக்கும் யுவதிகள் 
இன்னமும் எலாஸ்டிக் நாடா 
இடுப்பை அழுத்த 
உள்பாவாடை அணிபவர்கள் 
குத்த வைத்து 
முழங்கால் பளிச்சிட 
பத்து தேய்க்கும் வேலைக் காரிகள் 
ஜன்னலைத் திறந்து 
வைத்துக் கொண்டே உடை மாற்றுபவர்கள் 
உதட்டின் மீது வளரும் 
மெல்லிய பூனை மயிருக்கு 
க்ரீம் தடவுகிரவர்கள் 
ரோமப் பசுவெளி தெரிய 
பஸ் கம்பியை பிடித்துக் கொண்டே 
பிரயாணிக்கும் 
அரைச் சோளி தேவதைகள் 
அலுவல் கூட்டங்களில் 
கால் மீது கால் போட்டு அமர்பவர்கள் 
உள்ளுடை வரை தெரிய 
இறுக்கமாய்
சுரிதார் அணிபவர்கள் 
கால்பந்து மைதானத்தில் 
உப்பு வியர்வை வீச்சத்துடன் 
கடந்து போகிறவர்கள் 
உதடுகளை அடிக்கடி 
நாவால் வருடிக் கொள்கிறவர்கள் 
மார்புச் செயின் எடுத்துக் 
கடித்துக் கொள்கிறவர்கள் 
ரோட்டோரக் கடையில் 
நின்று 
டீ குடிப்பவர்கள் 
ஞாயிற்றுக் கிழமைகளில் 
பேரம் பேசி 
மாமிசம் வாங்குகிறவர்கள் 
துண்டு போர்த்திய 
இரவுடையுடன் 
விலாசம் சொல்கிறவர்கள் 
அது நனைய நனைய 
தண்ணீர் பிடிக்கிறவர்கள் 
மருந்துக் கடையில் 
நாப்கின் வாங்குகிறவர்கள் 
பெரிய தொங்கட்டான் 
அசைய அசையப் பேசுகிறவர்கள் 
ஹோட்டல் வாஷ்பேசினில்
குனிந்து முகம் கழுவுகிறவர்கள் 
கார்ப்பரேசன் கழிவறை வெளியே 
கொலுசுக் கால்களை தேய்த்துக் கழுவுகிறவர்கள் 
துணிக் கடையில் 
உள்ளாடை செக்சனில் நிற்பவர்கள் 
பூப்புனித நீராட்டுவிழாவில் 
புன்சிரிப்புடன் பன்னீர் தெளிப்பவர்கள் 
முதல் இரவுக்கு 
பெண்ணைத் தயார்ப் படுத்துகிறவர்கள் 
குல்பியை உறிஞ்சிச் சாப்பிடுகிறவர்கள் 
டிபன் பாக்ஸில் 
மல்லிகைப் பூ கொண்டு வருகிறவர்கள் 
ரேடியோவுடன் சேர்ந்து பாடுகிறவர்கள் 
கடற்கரைகளில் 
குதிரை மீது சவாரி ஏறுகிறவர்கள் 
நாய்களுடன் 
காலை நடை வருகிறவர்கள் 
பால்கனியில் நின்றுகொண்டு 
தலை கோதுகிறவர்கள் 
கடக்கும் போது 
ஓரக்கண்ணால் பார்க்கிறவர்கள் 
பேசிக் கொண்டிருக்கும்போதே 
ஜாக்கட்டைத் தளர்த்திக் கொள்கிறவர்கள் ..
நெடுநேரம் அலைபேசியில் 
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறவர்கள் 
குழந்தைகளை உதட்டில் 
முத்தமிடுகிறவர்கள்....


முதிர் யுவனின் 
கனவுகளில் நிறையும் பெண்கள்..





LinkWithin

Related Posts with Thumbnails