Thursday, September 23, 2010

சிதைவு

உடல் முற்றிய கருவாய்
திரண்டு  கொண்டிருந்தது ..
கொடி அறுத்து
ஜனிக்கத்
துடித்துக் கொண்டிருந்தது ..
உதடு
உடைத்து
கசியக் காத்திருந்தது..
இதழ் பிரித்து
மலர  சிவந்திருந்தது ...
ஒரு
பெரு மழைநாளில்
சுருதி சிதறிய
வார்த்தைகளில்
குறைபட்டு
காலிடையே
ரத்தமாய்
வழிகின்றது ..

3 comments:

  1. வலி அங்குமட்டுமல்ல, படித்த எங்கள் இதயத்திலும்.

    ReplyDelete
  2. 'குறைபட்டு வழிகின்றது' என்று முடித்திருக்கலாமோ?

    ReplyDelete
  3. உண்மையில் இங்கு கரு என்பது ஒரு குறியீடே என்று புரியாமல் போய் விடலாம் என்ற அச்சத்தில் கொஞ்சம் குருதியைக் கலக்க வேண்டியதாயிற்று.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails