Friday, July 9, 2010

கவிதாபலன்

கவிதைகளினால்
என்ன பயன்
என்ற புரட்சியாளனிடம்
குறைந்தபட்சம்
கவிதை படிக்கும் நேரத்தில்
கொல்வதில்லை
வன் புணர்வதில்லை
யாரையும் வீழ்த்த
சதி செய்வதில்லை என்றேன்

ஆனால்
இதெல்லாம்
பிறர் செய்கையில்
மனம் மூடி
கவிதை
படித்துக் கொண்டிருக்கிறீர்களே
என்றதற்கு
பதில் தெரியாது
இன்னொரு
கவிதை
படிக்க ஆரம்பித்தேன்

5 comments:

  1. அய்யோ! கொல்லுறீங்க போங்க.

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க...

    ReplyDelete
  3. அறம் படிக்குறதா சொல்லிடுங்க.

    ReplyDelete
  4. நாடகம் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்களே என்று பெனாட்ஷாவைக் கேட்ட்டபோது அந்த சமயமாவது எவனையாவது கெடுக்காம இருக்கானே என்று சொன்ன்னதாய் கேள்வி.அதன் தாக்கத்தில் எழுதியது.

    ReplyDelete
  5. கவிதை புரட்சியாய் வாள் சுழற்றுகிறதுங்க.பாராட்டுக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails