Monday, December 20, 2010

நான்சென்ஸ் ....

1.அவள்
உதடு இரண்டும் படகு
படகு நிறைய சிறகு
சிறகில் நேற்று
ஒட்டியிருந்த பூச்சி
செத்ததை பார்த்த
ஒரே சாட்சி
நம்ம சீனிவாசனின் ஆச்சி..



2.எனக்கு
முன்னால் போன
பெண்ணின் கையில்
ஒரு பலூன் இருந்தது
அதனுள்
ஒரு பல்பு ஒளிர்கிறது
இல்லை இல்லை
 பல்பைச் சுற்றி
ஒரு பலூன் ...
அந்தப் பலூன்
ஊதா நிறமாக இருந்திருக்கலாம்
ஒருவேளை
ஆயினும்
பல்பின் காரணமாக
மஞ்சளாகவே தெரிகிறது
ஆனால் கடவுளே
நான் ஏன்
அந்த எழவெடுத்த
பலூனைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறேன்?
இது அந்தப்
பெண்ணை பற்றிய கவிதை
அல்லவா....


3.இங்குதான்
விட்டுப் போய் இருந்தேன்
என் கவிதையை
சில பறவைகள்
சில பட்டாம்பூச்சிகள்
கொஞ்சம்
அழகான பெண்களின் கண்கள்
அழகற்ற ஆண்களின் இருதயங்கள்
எல்லாவற்றையும்
ஒரு நளினமான  பையில் போட்டுக்
கொறித்துக் கொண்டு
இங்கேயே இரு
என்று
பூங்காவின்  காவலாளியிடம்
சொல்லி
விட்டுப் போனேன்...
எங்கே
போய்த் தொலைந்தது?

4.இந்தக்க் கவிதையைக்
கவனமாகக் கையாளும்படி
உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்
ஏனெனில்
இதற்கு முன்னால்
படிக்கும்போதே
பலர்முகத்தில்
இது வெடித்திருக்கிறது

2 comments:

  1. அடடே.... என்ன ஒரு பின் நவீனத்துவம்...

    ReplyDelete
  2. //
    இங்குதான்
    விட்டுப் போய் இருந்தேன்
    என் கவிதையை
    சில பறவைகள்
    சில பட்டாம்பூச்சிகள்
    கொஞ்சம்
    அழகான பெண்களின் கண்கள்
    அழகற்ற ஆண்களின் இருதயங்கள்
    எல்லாவற்றையும்
    ஒரு நளினமான பையில் போட்டுக்
    கொறித்துக் கொண்டு //

    நல்லாயிருக்கு போகன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails