Wednesday, December 8, 2010

வெளியாள்....

நான் கவனித்திருக்கிறேன்
எப்போதும்
நான் பேசிக் கொண்டிருக்கையிலேயே
நீங்கள்
டெலிபோனை வைத்துவிடுகிறீர்கள்
எந்த ஒரு கூட்டத்திலும்
நான் பேச எழுந்ததுமே
உங்களுக்குள் பேச ஆரம்பிக்கிறீர்கள்
எந்த விவாதம் என்றாலும்
என் கருத்துக்கு முன்பே
ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள்
வீதிகளில்
என்னை சந்திக்க நேர்ந்தால்
நான் புன்னகைக்குமுன்பே
பதறி கண்களை விலக்கிக் கொள்கிறீர்கள்
உங்கள் உதடுகளை சுருக்கிக் கொள்கிறீர்கள்
நான் கைகளை நீட்டும் போதெல்லாம்
தீவிர சிந்தனையில் இருப்பது போல்
வேறெங்கோ பார்க்கிறீர்கள்

இப்போதெல்லாம்
மாலை நேரங்களில்
நான் ஏன்
தனியே பேசிக் கொள்ள
ஆரம்பித்திருக்கிறேன்
என்ற உங்கள் கேள்விக்கு
இந்தப் பதிலை  அளிக்கும்போதுகூட
வேறேதோ செய்துகொண்டிருக்கிறீர்கள்...

4 comments:

LinkWithin

Related Posts with Thumbnails