Tuesday, August 30, 2011

ஈசலோடாயினும்...

1.ஒரு மழைநாளிரவில் 
பிறந்த
ஈசல் ஒன்று
சற்றே எம்பிப் பறந்தது
வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த
பறவையைப் பார்த்து
நானும் ஒரு பறவையென்று
பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே
ஆயுள் தீர்ந்து
விழுந்திறந்தது


2.விழுந்த ஈசல் 
இறக்கும் முன்பு நினைத்தது
ஒரு நாள் வாழ்க்கைக்கு
எதற்கிந்த சிறகு?


3.பறக்காத பொழுதும் 
பறவை
பறவையாகவே இருக்க
வாழ்நாள் முழுக்கப்
பறந்த போதும்
ஏனோ
ஈசல்
ஈசலாகவே இருக்கிறது

2 comments:

bagathsing said...

என்றாலும் ஈசல்களும் பறவைகளும் இருக்கவும் பறக்கவும் இருப்பை உணர்த்தவும் செய்கின்றன.

--

ப.மதியழகன் said...

வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails