Thursday, August 25, 2011

ஒரு பறவைக் கணம்

அதிகாலை .
ப்ளூ ..........யிட்ட்ட்ட்...
என்று
பளிங்குத் தரையில் 

தண்ணீர் சிந்தியது
போலொரு குஞ்சு சத்தம் கேட்டுவிழித்தேன்
கருக்கலிருட்டில் ,
அரை ஒளியில்
ஒரு சிறிய குருவி
ஜன்னல்கம்பியில் ஆடியபடி
கழுத்தை மாற்றி மாற்றி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
அது பயந்து விலகிவிடாமல்
இருக்கும் பொருட்டு
நான் மூச்சடக்கிக் கிடந்தேன்

பறவை பறந்து போனபின்னும்... 
வெகுநேரம் 
நான் பறத்தலால் நிரம்பிஇருந்தேன் 

2 comments:

  1. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails