Sunday, December 9, 2012

வருகை

 எத்தனை நாள் அவளுடன் பேசாதிருந்தேன் நினைவில்லை.தேரோட்டத்தை ஒட்டிதெருவே இணைந்துபோகும் பொருட்காட்சிக்கு .அப்போது கூட அவளுடன் பேசும் மனநிலை வரவில்லை.அப்போது நான் மிகப் பெரிய மனக் குழப்பத்தில் இருந்தேன்.பொருட்காட்சிக்கு எப்போதும் செல்வது போல பெண்கள் கும்பலுடன் அமாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு போக விரும்பவில்லை.ஆகவே அப்பாவுடன் ஆம்பில்லையாய் போகலாம் என்று முடிவு செய்து அவருடன் போய் வாழ்க்கையையே வேருத்துவிட்டேன்.அவர் எந்த ஒரு கடையைப் பார்த்தாலும் ''ஏலே அது பொம்பிளைங்க சாம்னுங்க விக்கற கடை அங்கே எங்கே ஏறுதே''என்றார்.அல்லது அங்கிருக்கும் அரங்கங்களில் நுழைய முயன்றால் ''அதிலே என்னாலே இருக்கு..''என்றார்.போருட்காட்சியித் திடல் முழுவதும் தனது கூட்டாளிகள் யாரும் தென்படுகிரர்களா என்று தேடஈ ஜெயன்ட் வீழ பக்கம்  ஒருவரைக் கண்டுபிடித்து  வேறு கரியங்கள் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.''என்னவே இந்த வருஷம் எக்சிபிசன் சொகமில்லையே.இந்த வருஷம் ஆர் எஸ் மனோகர் நாடகம் இல்லையாமே.ஹெரான் ராமச்வாமிதானமே ''''
ஹெரான் ராம சுவாமி  நாடகத்தை நான் ஒருதடவை பார்த்திருக்கிறேன்.நண்பர்களுடன் போனால் அக்காவையும் என்னையும் சேர்த்து கேலியாய்ப் பேசுவார்கள்...அந்த வயதில் அது ஒரு குழப்பம்.அதுவரை அமா கூடவே எல்லா படங்களுக்கும் லேடிஸ் கவுந்தரிலேயே போய்ப் படம் பார்த்துவிடுவேன்.பூர்ணகலாவில் ஒருதடவை சட்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான்.''சின்னப் புள்ளையா''என்று அம்மா சொன்னதை அவன் நம்பமருத்தான்.''இவனா..இப்ப கல்யாணம் பன்னி வயி ..ஒரு வருசத்தில ரெட்டைப் புள்ள கையில வச்சிருப்பான்''ஆண்பிள்ளைகள் கவிண்டரிலோ நம் தலைமேல் மிதித்துப் போய் டிக்கட் வாங்கும் சர்க்கஸ் வீரர்கலைக் கண்டு அரண்டு போய் இருந்தேன்.அப்பா ஏன் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்து ''ஏதாவது வாங்கித் தின்னு போ''என்று விரட்ட நான் கைக்கு ஒன்றாய் டெல்லி அப்பளத்தை வங்கி மிளகாய்ப் பொடி ஏராளமாய்த் தூவி தின்று கொண்டிருக்க பின்னாலிருந்து ''வயிறு எறியப போகுது''என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.

பரமு ஆச்சி பின்னால் நின்றுகொண்டிருந்தாள்.கூடவே அம்மா அடுத்தவீட்டு அத்தை அவளது பெண் எல்லோரும் விஷேச வீட்டுக்குப் போவது போல அலங்கரித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.அத்தையின் ஏற்கனவே வெளியில் இருக்கும் பல்வரிசை சந்தோசத்தில் மொத்தமாய் வாய்க்கு வெளியே இருந்தது.''ரொம்ப மிளகாப் பொடி போட்டுத் தின்காதலே ..வயிறு எறியப போகுது''


ஆச்சி ''என்னலே இப்ப இல்லாம வீட்டுப் பக்கம் காணோம்.பெரிய பயலாயஈட்டியோ''
அம்மா ''நம்ம கூட வெளிய வர வெக்கமா இறுக்கம் தொரைக்கு சொல்றான்''என்று சிரித்தாள்.
''இல்ல ரெண்டு பெரும் சண்டை கிண்டி போட்டுகிட்ட்களா..இந்தக் காலத்துப் பிள்ளைக்க போக்கே பிடிபடலை''
அக்கா என்னைக் கானாதவள் போல ஜெயன்ட் வீளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளிடம் சில மாற்றங்களை உணர்ந்தேன்.சேலை கட்டியிருந்தால்.கண்களின் ஓரங்களில் மட்டும் வால் போல மை தீட்டி இருந்தால்.அது அவை பறப்பது போன்ற தோற்றத்தை அளித்தது.

ஆச்சி ''அய்யா...இந்த அக்காளுக்கு எதோ வலை கொலுசு வாங்கனும்னு சொல்றா...கூட போயிட்டு வரையா ..நாங்க சித்த இங்க உட்கார்ந்திருக்கோம்..முட்டி வலிக்கி''
நான் வேண்டா வெறுப்பாய் ஆவலுடன் கடை கடையாய் போனேன்.கண்ணைக் கூசும் பூச்சிகள் சுற்றும் விளக்குகளுக்கடியில் பெண்டுகள் காத்து மாட்டி ஜடை மாட்டி என்று விதம் விதமான மாட்டிகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.இன்னொரு பக்கம் குழாயில் அலறும் விளம்பரங்கள்

''கோபாலு ''
''என்ன சார்''
''எங்க போற''
''கடைக்குப் போறான்''
''என்ன வாங்க''

;;ஷாலினி கூர்த்டுப் பெருங்காயம் வாங்க''

''போய்கிட்டே இரு''

ஷாலினியை விட்டால் கோபால் பல்பொடிஅல்லது ஆர் வி எஸ் பட்டணம் போடி ,அஞ்சல் அலுப்பு மருந்து அல்லது சைபால் சர்வரோக நிவாரணி
''அண்ணே இதில சின்ன சைஸ் இருக்கா''
''இதில கடல் நீல கலர் இருக்கா தம்பி''

''அந்த மயில் கலர் மாடியை எடுங்க''
அத்தனை விசயங்களையும் எப்போது அணிகிறார்கள் யாருக்காக அணிகிறார்கள் என்று வியப்பாக இருந்தது.நான் அவற்றை எல்லாம் பார்த்தே இல்லை.பெண்களின் உலகம் ஒரு காடு போன்றது என்று பின்னால் எனக்குத் தொன்றியிருகிறது.ஆரம்பத்தில் எல்ல்லாம் மொத்தையாகத் தோன்றுவது சற்றுக் கூர்ந்து  பாக்க்கப் பார்க்க ஒரு முழுப் பிரபஞ்சமாக விரிந்து கொண்டே இருக்கிறது.கொடிகள்,மரங்கள் ,பறவைகள்,மிருகங்கள் என்று முன்னர் காணாதவை எல்ல்லாம் அந்த மறைப்புக்குப் பின்னாலிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.

ஆறுமுகம் அக்கா அப்படித்தன் எனக்கு அப்போது தோன்றினால்.


நான் சற்றுநேரம் மந்திரித்த கோழிபோல நின்றுகொண்டே இருந்தேன்

அக்காதான் அதை உடைத்தால்.''உனக்கு எதுவும் வேணுமா ?"'
நான் வேணாம் என்பது போலத் தலையசைத்தேன்

''பைனாகுலர் வான்கிகிடுதியாடே ?""

நான் ''அது எதுக்கு?''என்றேன்
''தூரத்தில உள்ளதெல்லாம் கிட்டத்தில தெரியும்டே..குருவி கோபுரம் எல்லாம் கிட்டக்க தெரியும்லா ''

நான் குரோதமாய் ''எல்லாம் தெரிஞ்சவரைக்கும் போரும்''

அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு ''உனக்கு என் மேல எதுவும் கோபமா?மூஞ்சி கொடுத்தே பேச மாட்டேங்கிறியே ??

நான் பேசவில்லை .என்ன ஒரு நாடகம்.ஒன்றுமே தெரியாதது போல.


அவள் கண்களைப் பாராமல் ''நான் ஒன்னும் தப்பு பண்ணலை ''என்றால் மெதுவாக

பிறகு ''எனக்கு கல்யாணம் வச்சிருக்கு.தெரியுமா ''

நான் பரபரப்படைந்து ''அப்படியா ?மாப்பிள்ளை யாரு ?""


''முனிசிபாலிட்டில ப்யூனா இருக்காரூ''என்றால் சட்டென்று அவள் கண்கள் உடைந்து நீர் கட்டி நின்றது ''நல்ல கருப்பு.ஒன்றரைக் கண் வேரடா.சனிக்கிழமை நிச்சயம் வச்சிருக்கு.''

எனக்கு சட்டென்று அவள் மீதுள்ள கோபம் எல்லாம் வடிந்தது

''எப்போ இது?யாரும் என்கிட்டே சொல்லவே இல்லியே ''

''அம்மா நீ பெரிய நாட்டாமை. உன்கிட்டே சொல்றதுக்கு உங்க அப்பாதான் சம்பந்தத்தைக் கொண்டு வந்ததே''

நான் ''வேணாம்னு சொல்லிடு.அப்பா கிட்டே நான் சொல்றேன்''

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ''போடா''என்றாள் ''வா இந்த ராட்டினத்தில ஏறி ஒரு கிரங்கு கிரந்கிட்டு வருவோம்''


கொலம்பஸ் என்கிற அந்த ராட்சத ராட்டினத்தில் ஏறி அக்கா திரும்பத் திரும்பச் சுற்றினால் ஒருமாதிரி பைத்தியக் காரத்தனமாக சிரித்துக் கொண்டே இருந்தால்.ஒருகட்டத்தில் எனக்கு  பயம் வந்துவிட்டது .என்னால இனி முடியாது என்று சொல்லிவிட்டேன்.

திரும்ப வரும்போது பார்வதி தியேட்டர் முடுக்கில் வைத்து ''அக்கா அப்பாட்ட சொல்லவா''என்றேன் இரகசியமாய்


அவள் என்னை இழுத்து அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள் ''அக்காவை மறந்துடாதேடா சங்கர்''


நான் ''நீ என்ன சொல்றே ?''

அவள் குளிர்வது போல தன உடலை ஒடுக்கிக் கொண்டு ''ஒண்ணுமில்லை ''என்றாள் .தெருவிளக்கின் மஞ்சள்  ஒளியில் அவர் முகம் ஒருகணம் ஒளிர்ந்து அணைந்தது.அப்போது அவள் கண்கள் மினுமினுத்தது போல எனக்கொரு கணம் தோன்றியது .அது அவளது கண்ணீரின் பளபளப்பு என்று பின்னால் தோன்றி இருக்கிறது .


அவள் தனது வீட்டின் முன்னால் மௌனமாக நின்றாள் என் கண்களைப் பார்க்காமல் ''நீ போ''என்றாள் .
அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது


மறுநாள் காலை
















3 comments:

  1. ennai ungalukku therinthaal enakku ungalaith theriyum ..illaiyenil ariya aasai illai

    ReplyDelete
  2. இந்து ஞானம்-ஷிதி மோகன் சென் entha pathipagamnu solreengala ? or the stall you got the book at the book fair.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails