Monday, April 4, 2011

இருளில் இருந்து ஒளிக்கு..

ஒரு ரயில்.....

வெளிச்சப் பித்தான்களுடன்
வெள்ளி ஊசி போல
இரவின் கரிய சட்டையைக்
கிழித்துக் கொண்டு
எங்கோ போகிறது வேகமாய்

ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டே
நிற்கிறான் சிறுவன்
கிழிந்த டவுசரும்
கலைந்த சிகையும்
களைத்த கண்களும்
கழுவாத உடலுமாய்...
வீதியில் உறங்குபவன்...
வீதியில் பிறந்தவன்...

எங்கே போகிறது
என்று தெரியவில்லை
அவனுக்கு
ஆனால் நிச்சயமாய்
அவன் வாழ்வைவிட
வெளிச்சம் நிரம்பிய
ஓர் இடத்துக்கு..
அது போகிறது
என்று நினைக்கிறானோ என்னவோ..


அந்த வண்டிக்குள்
நானும் இருக்கிறேன்
ஏறக்குறைய
அதே நினைப்போடு...
எங்கோ போகிறேன்

ரயில்வண்டிகள்
ஏற்றிச் செல்வது
ஆட்களை மட்டுமல்ல..
என்று தோன்றுகிறது
இல்லையா...

சில கனவுகளையும் ...
Edit

3 comments:

  1. ஆகா!
    'அதே நினைப்போடு' அங்கேயே முடித்திருக்கலாமோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails